பத்திரிக்கைச்செய்தி

12.03.2007
ஆசிரியர்,
தினமுரசு,
கொழும்பு.

அன்புடையீர்,

தங்களின் வாரமலர் 703ல் (மார்ச் 8 – 14, 2007) தேடனாரின் இரத்த சாட்சியங்கள் 4வது பகுதியில் எனது கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதாவது “தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்”. இது தவறாகும்.

விடுதலைப் புலிகளுடன் மட்டும் தான் பேசவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேனே தவிர ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என நான் குறிப்பிடவில்லை. ஆரம்பத்திலிருந்தே இதைப் பகிரங்கமாகவே நான் தெரிவித்து வந்திருக்கிறேன். இந்த மறுப்பை பிரசுரிக்கவும்.

“வீரகேசரிப் பத்திரிகையில் வெளியாயிருந்த செய்தியில் எதுவித உண்மையுமில்லை.

தங்களுண்மையுள்ள,


வீ.ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.