பத்திரிக்கைச்செய்தி

தமிழர்களின் தலைவன் மாபெரும் வரலாற்றின் மனிதன் இணைந்ந வட கிழக்கு மாகாணத்தை உருவாக்கிய சிற்பி அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 15வது நினைவு தினம் - 13. 07. 2005.

அமரர் அமிர்தலிங்கம் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் இன்று 13.07.2005 எமது கழகத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகத்தில் காலை 10.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அமரர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எமது கழக உறுப்பினர் திரு. க. சண்முகலிங்கம் தனது உரையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணைந்த வடகிழக்கு மாகாணத்திலேயே திர்வு வேண்டுமென விடாப்பிடியாக நின்று அன்றைய பிரதமர் மறைந்த ரா_வ் காந்தியிடம் வலியுறுத்தி இணைந்த வடகிழக்கு மாகாணத்தை உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் மட்டும் இன்று செயற்பாட்டில் இருந்திருக்குமேயானால் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை என வட கிழக்கு மாகாணத்தின் அனைத்து இடங்களிலும் தமிழர்களின் ராஜ்ஜியம் பரந்து விரிந்திருக்கும். துரதிஷ்ட வசமாக ஒரு சிலர் அதை குறை கூறியதால் இன்று தமிழர் நிலப்பரப்பின் எல்லைகள் மிகவும் சுருங்கிக் கொண்டே போகின்றது. இந்த வரலாற்றுத் தவறை செய்தவர்கள் நிச்சயம் ஒருநாள் உணரத்தான் செய்வார்கள். அமரர் அமிரின் கனவு நனவாகியிருந்தால் இணைந்த வட கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருப்பார்கள். அமரர் அமிர்தலிங்கத்தின் அரசியல் வாரிசுகள் என்று சொன்னவர்கள் கூட இன்று வாய் மூடி மௌனிகளாகி தடம்மாறி போய்விட்டார்கள் பாவம் அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாகிவிட்டார்கள். அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் செயற்பாட்டில் எவரும் குற்றம் காணமுடியாது. அந்தளவிற்கு அவர் தியாக சிந்தையுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சிங்கள பேரினவாதிகளுக்கு அமிர் ஒரு சிம்ம சொப்பனமாகவேத் திகழ்ந்தார் அன்னாரின் அகால மரணம் தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களால நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது.

அமரர் அமிரின் செயற்பாடுகளுக்கு உலகத் தமிழினமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் என்றுமே தலை சாய்த்து வணங்கிக் கொண்டேயிருக்கும் என்று குறிப்பிட்டார்.

பி.பகல் 1.00 மணியளவில் அஞசலி நிகழ்வு நிறைவெய்தியது.

மு. சரவணமுத்து
இணைப்பாளர்