HANDS OFF NGOo

HANDS OFF NGOo

I very strongly condemn the brutal killing of the 17 civilians attached to “Action Against Hunger” a French N.G.O. that is engaged in Tsunami Relief work. As their name suggests they are a lot, the country can’t lose at this juncture when people in the Trincomalee District’s Muthur are virtually dying of Hunger and thirst.

There is no point in saying “Not I, he did it”. Whoever did, it must be traced and punished. Those responsible for these killings had foolishly done it without realizing the consequences. This incident is going to seriously affect the country especially during a national calamity in the future. This N.G.O. itself came to do relief work with the Tsunami victims.

The immediate effects of this incident are firstly, the suffering refugees are deprived of the services of a group of well-trained volunteers. Secondly till this matter is not sorted out to the satisfaction of the N.G.O. concerned, the other N.G.O’s also engaged in similar activities will be reluctant to continue their activities. Thirdly a lot of development work in which many countries are actively engaged in, will have to work with fear and tension in the future. What their reactions are yet to be seen.

Lastly a number of Organisations from various countries that had come forward to assist in the resettlement of the refugees in Muthur will get discourage without being re assured of their security.

It may not be out of place if I find fault with some organizations that are critical of the N.G.O’s in general, without realizing the tremendous work under taken by various N.G.O’s from various countries. If any particular N.G.O is in the fault, deal with it without criticizing all.

I express my deepest sympathies to the families and kith and kin of the unfortunate victims who should not have been killed in this brutal manner for no fault of theirs. I may add that when the Government itself has no writ in certain areas, why blame the poor volunteers of certain N.G.O.S who can’t act independently.

As a responsible citizen of Sri Lanka I tender my apologies to the Government of the Republic of France.


V.Anandasangaree,

President-T.U.L.F.

விடுதலைப் புலிகளின் கரங்களை பலமடையச் செய்ய வேண்டாம்

விடுதலைப் புலிகளின் கரங்களை பலமடையச் செய்ய வேண்டாம்

சமஷ்டி கோட்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் புதிய நிலைப்பாட்டை எடுக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்திருக்கும் முடிவு எனக்கு அதிர்ச்சியை தருகிறது. இதை நான் வன்மையாக ஆட்சேபித்து சமஷடி கோட்பாட்டை கைவிட வேண்டாமென ஐக்கிய தேசிய கட்சி தலைமையை வேண்டுகிறேன்.

ஆட்சியில் இருந்தவேளையில் ஒஸ்லோ உடன்பாட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பட்டுள்ளமையால் கொள்கையில் மாற்றம் ஏற்படும் போது சர்வதேச சமூகத்தின் உறவுக்கும் பாதிப்பு ஏற்படும். 2002 மார்கழி 05ம் திகதி நோர்வே அரசு விடுத்த அறிக்கையில் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட யோசனையாகிய, தமிழ் பேசும் மக்கள் வாழும் பூர்வீக பிரதேசங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய சமஷ்டி ஆட்சி முறையை பரிசீலிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. 2003ம் ஆண்டு ஜூன் 09ம், 10ம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்;டில் 51 நாடுகளும், 22 சர்வதேச ஸ்தாபனங்களும் கலந்து கொண்டன. யசூசி அகாசி தலைமை தாங்கிய அம் மாநாட்டில் ஜப்பான் பிரதமர் கௌரவ யூனிச்சிரோ கொய்சுமீயும், கௌரவ ரணில் விக்கிரமசிங்காவும் உரையாற்றினர். இம் மாநாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது ஒரு மைல்கல்லாக கணிக்கப்பட்டது. மேலும் இம் மாநாட்டில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தை மூலம் சமஷ்டி அடிப்படையில் தீர்வுகாண இரு சாராரும் ஒப்புக்கொண்டதன் மூலம் இலங்கை வாழ் சகல மக்களுக்கும் நன்மைதரும், சமாதானத்தை கொடுக்கும் முக்கிய மாநாடாக இது கருதப்பட்டது. இத்தகைய ஈடுபாட்டின் பின் ஐக்கிய தேசிய கட்சி தனது பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுமேயானால் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஏனைய தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்த 51 நாடுகளும் 22 சர்வதேச ஸ்தாபனங்களும் இலங்கையை ஒரு சதத்திற்கும் நம்பமாட்டார்கள் என்பதோடு இலங்கை எல்லாவற்றிற்கும் மேலான பெறுமதியான தனது மதிப்பையும், மரியாதையையும் இழக்க நேரிடும்.

13 ஆண்டுகளுக்கு மேல் எதிர்கட்சியில் இருந்தமையை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் 49.7 சத வீத வாக்குகள் பெற்றுக் கொடுத்த அரிய கொள்கையை மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது. அவர்களை போலவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 17 ஆண்டுகள் தொடச்சியாக எதிர்கட்சியில் இருந்தது. இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும். தீர்வு ஒன்று ஏற்படும் நிலையை அடைந்துள்ள மிக முக்கியமான இவ்வேளையில் ஐக்கிய தேசிய கட்சி தனது கொள்கையை மாற்ற முயல்கிறது. தீர்வு அண்மித்துவிட்டதன் அறிகுறியாக ஆளும் கட்சியினரின் கருத்துக்களிலும் மாற்றம் தெரிகிறது.

ஐக்கிய தேசிய கட்சி இக் கட்டத்தில் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறக்கூடிய இந்த தவறை செய்ய கூடாது. 1957ம் ஆண்டு கண்டி யாத்திரை மேற்கொள்ளப்படாது இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வு 50 ஆணடுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும் என்பது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்தழிவுகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒரு சிலரின் பதவியை நிலைக்கச் செய்யவும் பதவியில் ஏற்றவும் தினமும் நாம் உயிர் இழப்புக்களையும், பொருள் அழிவுகளையும் எதிர்நோக்க வேண்டுமா? துன்பகரமான சரித்திர நிகழ்வுகள் மீண்டும், மீண்டும் நடைபெற வேண்டும் என்ற சாபக்கேடு எம் நாட்டை பீடித்திருக்கிறதா?

ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக அமையாது. சுமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியலமைப்பு முறையே ஏற்கக்கூடியதாக இருப்பதோடு சமஷ்டி என்ற பதத்தில் வெறுப்புடையவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். நான் இந்த சிபாரிசை இந்த நாட்டையும் அதன் மக்களையும் நேசிப்பவன் என்ற வகையில் இம் முறைமையை சிபாரிசு செய்கிறேனே அன்றி ஒரு தமிழன் என்பதற்காக அல்ல. நான் ஒரு இலங்கை நாட்டுப்பற்றாளனாக இறப்பதையே விரும்புகிறேன். நான் வேண்டுவதெல்லாம் இலங்கை சமூகம் மனத்திருப்தியுடனும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்பதே



வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

PRESS RELEASE - DO NOT STRENGTHEN THE HANDS OF THE LTTE

DO NOT STRENGTHEN THE HANDS OF THE LTTE

I am shocked at the UNP’s decision to “re-position” itself and among many others, to drop the Federal Concept. I hasten to protest against this move and plead with the UNP Leadership not to drop the” Federal Concept. I genuinely feel that it will prove disastrous to the country that is already bleeding profusely. The UNP too as the main opposition party which, when in power, committed to the Oslo Agreement lose its credibility in the International Community.

To quote from the statement of the Royal Norwegian Government’s Statement of 5th December, 2002.

“Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples based on a federal structure within a United Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities”.

The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka was held on June 9th and 10th in Tokyo with the participation of 51 countries and 22 International Organisations. The Opening session chaired by Hon. Yasushi Akashi was addressed by the Prime Ministers of Japan and Sri Lanka. Hon. M.Junichiro Koizumi and Hon. Ranil Wickremasinghe respectively.

At this conference, participants expressed the view that “a negotiated settlement in Sri Lanka will be a landmark achievement with regard to peaceful resolution of an armed conflict. The Conference commends both parties for the commitment to a lasting and negotiated peace based on a federal structure within a United Sri Lanka. Furthermore, the Conference stresses the importance of bringing tangible dividends of peace to all the People of Sri Lanka”.
Having committed to this extent, if the UNP now goes back on its earlier stand it will lose its credibility and the 51 Nations and the 22 International Organisation that had pledged financial support to the tune of 4,5 billion US dollars and technical and other assistance will not trust us for a cent and Sri Lanka will lose it honour and prestige, which is more important than anything else.

Merely because the UNP had been remaining in the opposition for 13 years is no justifiable reason to change its policy on which it polled 49.7% of the votes at the last Presidential Elections. Like wise the SLFP too remained for 17 years in the opposition. The fact that more Tamils live in the south with the Sinhalese and Muslims is a factor that cannot be ignored. The UNP is trying to change its policy at a crucial time when arriving at a solution is in sight. Opinion in the ruling circle is also gradually changing with all indications, that a solution is nearing.

The UNP should not make a historical blunder at this juncture. They should seriously consider how much loss of life and damage to properly had been caused since the famous March to Kandy in 1957, if not for which the ethnic problem would have been solved fifty years back. Everyone should ask whether we should face death and destruction everyday merely to put or keep some one in power. Has a curse befallen on our country with unpleasant history repeating itself over and over again?.

A solution under the Unitary System will not be acceptable to the Tamils. The only alternative to a Federal System, acceptable to the Tamils, is the one like the Indian Model which will satisfy those who are allergic to the term Federal. I am recommending this proposal not as a Tamil but as one who loves this country and its people and love to die as a patriotic Citizens of Sri Lanka. All what I want is Peace in a contented Sri Lankan society.



V. Anandasangaree,
President – TULF.

FOR THE ATTENTION OF THE MEDIA IN TAMIL NAAD

FOR THE ATTENTION OF THE MEDIA IN TAMIL NAAD

It is very unfortunate that some Tamil Naad Politicians use the Sri Lankan Ethnic Issue for their personal gains. Every one in India and in Sri Lanka, even in most parts of the world, know fully well that creation of a separate state of Eelam is an impossible task. The International Community is opposed to it and the Indian Government is also vehemently opposed to it. The option available is to agitate for a Federal Solution, with the only one alternative of adopting the Indian model, enabling the various regions in Sri Lanka to enjoy powers equivalent to those presently enjoyed by the state of Tamil Naad.

Inciting speeches by Tamil Naad Politicians will only cause great embarrassment to the Tamils more than half of whom live in harmony in the South with the Sinhalese. A number of incidents the LTTE got involved in were deliberately done by them to spark off a communal riot. Fortunately good sense is prevailing.

What is needed for the Tamils is first, liberation from the LTTE under whom they are undergoing untold hardships. Every home in the LTTE held area is like a funeral home. All grownup children are being taken away by the LTTE cadre compulsorily. Parents who resisted are mercilessly assaulted. The outside world dose not know what is happening in the LTTE held area popularly known as the “Iron Curtain” area.

I am now releasing to the press a few letters that had not been published so-far. The letters speak for themselves. If the Tamil Naad politicians had taken my suggestions seriously the ethnic problem would have been solved by this time. The reason for failure of Tamil Naad, in helping to find a solution, is due to rivalry in local politics. Even now, if all political parties get together forgetting their differences a quick solution is still possible. For the information of the Brothers and Sisters of Tamil Naad, I should say that in the history of Jaffna, no one died of hunger atleast during my life-time.

The following letters are released to the media. It should be noted that without the concurrence of Tamil Naad the Central Government could not have acted, the issue being so sensitive.

  1. Letter dated 4th April, 2005 addressed to Hon. Dr. Manmohan Singh – Prime Minister.

  2. Letter dated 8th October, 2005 addressed to Dr. Kalaignar M. Karunanithi

  3. Letter dated 8th October, 2005 addressed to Hon.Dr. Selvi. J. Jeyalalitha – Chief Minister.

  4. Letter dated 22nd December, 2005 addressed to Hon. Dr. Manmohan Singh – P.M.

  5. Letter dated 23rd December, 2005 addressed to Hon. V. Gopalasamy, M.P.

  6. Letter dated 16th January, 2006 addressed to Hon. Dr. Manmohan Singh – Prime Minister

  7. Letter dated 21st May, 2006 addressed to Sri M.K. Narayanan - National Security Advisor

  8. Letter dated 21st May, 2006 addressed to Hon. Sonia Gandhi, M.P., Chairperson UPA

  9. Letter dated 21st May, 2006 addressed to Hon. Dr. Manmohan Singh - Prime Minister.

  10. Letter dated 21st May, 2006 addressed to Hon. Dr. Kalaignar M. Karunanithi - Chief Minister

Letter dated 15th Jun, 2006 addressed to Leaders and People of Tamil Naad – Already release.

The true position as to how the Tamil Naad could have helped to solve the ethnic problem of Sri Lanka is revealed in the above letters. Any one can challenge any facts related in any one of these letters.


V. Anandasangaree, 17-09-2007

President, 30/1B, Alwis Place,

TULF. Colombo - 03

ஐக்கிய இலங்கைக்குள் நேர்மையான, நியாயமான அரசியல் தீர்வு காணல்










ஐக்கிய இலங்கைக்குள் நேர்மையான, நியாயமான அரசியல் தீர்வு காணல்

அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் நம் நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இவ் வேண்டுகோளை விடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது எமது எதிர்கால சந்ததியினர் அமைதியாகவும், செழிப்புடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த எனது இறுதிக்கால சில வருடங்களை எவ்வாறு அர்ப்பணிப்புடன் செலவிடுகிறேன் என்பதை அனேகர் அறிவர். நாம் அனைவரும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டிய போராட்டத்தினால் சகல சமூகத்தில் இருந்து எமது தலைவர்கள் பலரையும், இளைஞர்கள், ஏராளமான பொதுமக்களையும் இழந்துள்ளதோடு பெரும் பொருள் நட்டத்தையும் அடைந்துள்ளோம். அமைதியையும், ஓர் அரசியல் தீர்வையும் பெற்றுவிட்டோமேயானால் அந்த நிலையை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லாது போனாலும் கூட எமது நாட்டு இளைஞர்களும், பிள்ளைகளும் வேறுபட்ட ஓர் இலங்கையில் திகில், வன்முறை, யுத்தம் ஆகியவற்றை கடந்தகால கனவுகளாக மறந்து வாழ்வார்கள் என மகிழ்ச்சியடைவேன். தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து அனைவரின் சுபிட்சத்திற்காக நம் நாட்டை கட்டியெழுப்பி புதிய விடியலை காண ஓர் புதிய சமுதாயம் பிறக்கும்.

அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டபோது நீண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும், எமது பிள்ளைகளும் மிக மோசமான வறுமையுடன் போராடுவதை கண்டு மனம் நொந்தேன். அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொண்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவதானித்தேன். இருப்பினும் அம் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், எதுவித பயமுமின்றி ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவும், அவர்களுக்கு எமது ஆதரவு தேவை. கிழக்கு மாகாணத்தில் வேறுபட்ட சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்வது சிறப்பம்சமாக இருப்பினும் அவர்கள் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் மிரட்டாமல், பயமுறுத்தாமல் சகோதரர்போல் வாழும் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். கிழக்கு மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உண்டு. இருப்பினும் இஸ்லாமிய, தமிழ், சிங்கள மக்கள் அனைவரும் சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ என்ற பேதமின்றி சமமாக வாழ்ந்தாலே கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். இதற்கு முன்னோடியாக அனைவரும் ஏற்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வு அவசியமாகும்.

எனது ஐரோப்பிய பயணங்களின் போதும், அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போதும் இலங்கை வாழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ள தமிழ் மக்களுடன் பிரிவினையை ஏற்க முடியாதென பல தடவை வாதாடியுள்ளேன். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்று முழு நம்பிக்கையுடன் இருந்தேன். பல்வேறு சமூகத்தலைவர்கள், இனத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியபோது மிகச் சொற்ப எண்ணிக்கையினரை தவிர ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வை காணலாம் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் சமூகத்தினர் எனது கருத்தை ஏற்கின்றார்கள் என்பதை பெருமையுடன் கூற விரும்புகின்றேன். ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல்தீர்வை ஏற்படுத்துவதன் மூலமே முன்னேற முடியும் என்பது அவர்களின் கருத்தாகும். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலர் என்னுடன் சேர்ந்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பேரால் நடந்தேறிய வன்முறைகளுக்கு மனம் நொந்து வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர தயாராக உள்ளனர். பலவற்றை இழந்த மக்களுக்காக அனுதாபப்படுகின்றேன். இருப்பினும் நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

இன ஒதுக்கல். பிரிவினை போன்ற நச்சுத்தன்மை பிரச்சாரத்தையே விடுதலைப் புலிகள் தொடர்ந்து போதிப்பர். சிங்கள மக்கள் எதையும் தரமாட்டார்கள். அதிகாரப் பகிர்வோ, அதிகாரப் பங்கீடோ, அமைதியையோ தரமாட்டார்கள் என தமிழ் மக்களுக்கு போதித்துக் கொண்டேயிருப்பார்கள். இன்று புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். தமது அரசியல் விஷத்தை உள்ளுரிலோ, பிற நாட்டிலோ தமிழ் மக்கள் மீது செலுத்த முடியாதவாறு தாம் அரசியலில் முழு தோல்வி அடைந்து விட்டோம் என்பதே அவர்களுக்குள்ள பயம். பிரபாகரனுக்கு ஒரு அரசை பெற்றுக் கொடுப்பதை தவிர அவருக்கு எந்த அரசியல் தீர்வும் ஏற்புடையதாக இருக்காது. இருப்பினும் தமிழ், முஸ்லீம் மக்கள் கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் சிங்கள மக்களுடன் சரிநிகர் சமானமாக வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வே விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய வங்குரோத்து கொள்கைகளையும் தோற்கடிக்க முடியும். ஓர் நீதியானதும், நியாயமானதுமான அரசியல் தீர்வே விடுதலைப் புலிகளின் மிரட்டலும், குரூரமும் தேவையில்லை என்பதை உள்ளுரிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்களுக்கு உணர்த்தும். இலங்கையின் அரசியல் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்து நான் வற்புறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற பதங்களை பாவியாது இந்திய அரசியல் சாசனம் 60 ஆண்டுகளுக்கு மேல் பிரிவினைக்கு இடம் கொடாது நாட்டை ஒற்றுமையாக வழிநடத்தியது மட்டுமல்லாது, இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் நடவடிக்கைகளை நான் ஆதரித்து வந்துள்ளேன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண இலங்கை வாழ் மக்களின் அபிலாசைகளுக்கு இடங்கொடுத்து அனைவரும் இணக்கம் காணக்கூடிய ஓர் தீர்வை காண்பதற்கு அயராது உழைத்தவர். அவருடைய உழைப்பில் நான் பெரு மதிப்பு வைத்துள்ளேன். இருப்பினும் வரப் போகின்ற தீர்வுத் திட்டம் ஒற்றையாட்சி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதென ஊடகங்கள் மூலம் அறிந்து மிகவும் விசனமடைந்தேன்.

அரசு தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பல தசாப்தகால முரண்பாடுகள், மரணங்கள், அழிவுகள், துன்பங்களோடு கூடிய அரசியல்சாசன சம்பந்தமான விவாதங்கள் ஆகியவற்றின் பின் ஒற்றையாட்சி முறை ஒரு போதும் இனப்பிரச்சனைக்குரிய தீர்வாக தமிழ், முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு அரசியல் தீர்வு மூலம் இரு விடயங்களை சாதிக்கலாம்.

விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிப்பது.
சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்ந்து நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு கொடுக்கும்.

ஓற்றையாட்சியின் கீழ் காணப்படும் அரசியல் தீர்வு அரசு ஏனைய சமூகங்களுக்கான நியாயமான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள தயாரில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமையும். அது விடுதலைப் புலிகளின் பிரிவினை கோஷத்தை வலுவடைய செய்யும். ஓற்றையாட்சியின் கீழ் ஏற்படப் போகும் ஒரு தீர்வு தமிழ் மக்கள் பிரிவினை கோஷத்தை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் செயற்பட வருமாறு என்னைப் போன்றவர்களால் விடுக்கப்பட்ட சவாலுக்கு ஏற்பட போகும் தோல்வியாகும். ஒற்றையாட்சி தீர்வு அரசு நீதியாக செயற்படும் என்ற தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் ஓர் செயலாகும். இத்தகைய பிரச்சாரமே இன்னும் விடுதலைப் புலிகளுக்கு பிராணவாய்வு கொடுத்து சிலர் மத்தியில் அவர்களின் செல்வாக்கை நிலைக்க செய்துள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்கப்படும் தீர்வுத்திட்டம் அரைகுறை தீர்வாக அமைவது மட்டுமன்றி எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் தூண்டுதலோடு மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கின்ற ஒரு நிலையை உருவாக்க வழிவகுக்கும். விளைவு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்தும் ஏற்படுத்திய ஒரு தீர்வு குழம்பி பழைய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும். எந்த அரசியல் தீர்வும் அமுலாக்கப்படும் வேளையில் நான் உயிருடன் இருப்பேனோ என்பது தெரியாது. ஆனால் இந் நாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனது தாழ்மையான வேண்டுகோளை ஏற்பார்கள் என்று நம்புகின்றேன். இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழும் வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்கிறேன். எமக்கொரு அரசியல் தீர்வு மிக அவசியமானதே. ஆனால் அத் தீர்வு நீதிக்கும், நியாயத்துக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் மிக்க நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி முறை அந் நம்பிக்கையை முற்றாக அழித்துவிடும். ஆனால் மறுபுறம் நீதிக்கும், நியாயத்துக்கும் உட்பட்ட ஒரு அரசியல் தீர்வு சகல சமூகத்தினரையும் ஒற்றுமைபடுத்தி சமாதானத்திற்கான விடிவுகாலம் ஏற்படும்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

PRESS RELEASE

A Plea for a Fair and Just Political Solution within a United Sri Lanka

The recent developments in the country have pushed me to address the people of this country, Muslims, Sinhalese and Tamils. As many people in this country are well aware, that at great risk to my life I have devoted the last years of my life to finding a political solution that will allow our children to live in peace and to prosper. We have lost too many of our leaders, our youths and ordinary people from all communities to a conflict for which we all have to share some blame. If we can achieve peace and a political solution, and even if I may not be able to enjoy that peace, I will nevertheless be grateful that the youth and children of this country will grow up in a different Sri Lanka where the nightmare of terror, violence and war will be behind them and a dawn for a generation of Muslims, Sinhalese and Tamils to live together and rebuild our country for the prosperity of all our peoples.

I visited the Eastern Province recently to understand the predicament of the people and I was saddened by the suffering of the people affected by the war over the years. The displaced and our children are living in abject poverty. I saw the work of the government in rehabilitating the affected people, but it will take years before normalcy returns. The people in the East need our support so that they can return to normal life, be able to live without fear and the communities can coexist with harmony. The Eastern Province reflects the richness of our diversity, where the Muslim, Sinhalese and Tamil people are living side by side, but that diversity needs to be nurtured so that they care for each other as brothers and sisters and will not be intimidated or threatened by each other. The people of the East no doubt, need economic reconstruction in their Province. However, they need a political solution that is fair to the Muslims, Sinhalese and Tamils, where all people will feel as equals and not feel like a minority or majority in order to be successful in reconstructing the East.

In my many travels as with my recent visit to Europe, I have always expressed my confidence that the people of Sri Lanka can find a political solution within a united Sri Lanka. I have often debated with the Tamils in the Diaspora as I have done within this country, that separatism is unacceptable. I always had confidence that we as Tamils, Muslims and Sinhalese can find a solution within a united Sri Lanka. I have discussed this with the clergy of all religions, with leaders of all communities and all the political parties and except a negligible few actors, they have all expressed the confidence of finding a political solution within a united Sri Lanka. I am proud to say that many in the Tamil Diaspora and the Tamil community in Sri Lanka agree with me, and that the only way forward is to find a political solution within a united Sri Lanka. Many in the Tamil community are now ready to say with me that we must mourn, repent and forgive for the violence in the name of Tamils, Sinhalese or Muslims. My heart goes out to the people who have lost so much, but we must go forward.

The LTTE of course continues to feed the Tamil people the poison of ethnic exclusion and separatism. The LTTE tells the Tamil people, that the Sinhalese will not give them anything, neither devolution nor power sharing nor peace. The LTTE today is weak, militarily and politically. What they fear most is their complete political defeat, when they can not feed their political poison to the Tamils in the Diaspora and inside Sri Lanka. No political solution will be acceptable to the LTTE, other than a kingdom for Prabhakaran. However, a political solution acceptable to the Tamil people where they can live with dignity and feel secure and assured of their place as an equal community side by side with the Muslim community and the Sinhalese community, will ensure the political defeat of the LTTE and its bankrupt politics. A fair and just political solution will convince the Tamil people not only in this country but around the world that there is no need for the tyranny and terror of the LTTE.

As everyone knows, I have steadfastly repeated that a political solution to our country can be based on an Indian model. The Indian constitution does not say federal or unitary, but has managed to hold the country together for sixty years, and indeed India is prospering. I have supported the APRC process and I have the highest regard for the work of Prof. Tissa Vitharana who has been attempting to create a consensus that can address the aspirations of all the peoples of Sri Lanka. However, I am seriously concerned about the recent reports in the media that the proposals coming out of APRC could have the “unitary” label. The country needs to be fair by the Tamil and Muslim people, and after all these decades of conflict, deaths, destruction, suffering and debates about constitutionalism, the “unitary” state will not be acceptable to the Tamil and Muslim people.

A political solution at the moment can achieve two things. One, it can be a political defeat for the LTTE. Two, it can give the Tamil people and the Muslim people the confidence of living together with the Sinhalese community and rebuilding our country. A political solution with the “unitary” label, where the State is not willing to recognize the other communities as those with legitimate grounds of power sharing will only strengthen the LTTE’s call for separation and give oxygen to a dying organization. A “unitary” solution will be a political defeat for those such as myself that have been challenging the Tamil community to forget separatism and come into the path of a united Sri Lanka. A “unitary” solution will shatter the confidence of the Tamil people and the sense of fairness they expect from the Sri Lankan State.

Any solution under a “unitary” constitution will be a half-baked one. It will give room for further agitation in the future fuelled by the remnants of the LTTE. The result would be a disruption of the hard earned peace and take the country back to square one, into another cycle of violence. Only a reasonable solution that leads to a contented society consisting of all communities will lead to a sustainable peace.

I may not live to see the day that any political solution is implemented, but I hope the leaders of this country, the leaders of all the political parties understand my humble plea. Give the people of this country, Muslims, Sinhalese and Tamils a chance to live in peace within a united Sri Lanka. We need a political solution urgently, but it has to be fair and just. A “unitary” proposal will kill the hopes of those who have placed so much faith in the APRC. A political solution that is just and fair on the other hand will unite all the communities and will bring a new dawn for peace.


V. Anandasangaree
President –TULF.

APPEAL TO THE PRELATES TO ASSIST IN THE PEACE PROCESS

09-02-2007

(Copy of the Appeal Handed Over to the Most Ven. Asgiriya Mahanayake Thero the Most Ven. Malwatta Mahanayake Thero the Most Rev. Bishops and Prelates of the other Faiths.)

APPEAL TO THE PRELATES TO ASSIST IN THE PEACE PROCESS

His Excellency Mahinda Rajapaksa, President of Sri Lanka, in his Independence day message to the Nation had said, “ All of us who celebrate this 59th anniversary of Independence should remember that in the great struggle for freedom all our communities Sinhalese, Tamils, Muslims and all others, were committed as one to the cause of freedom. Therefore Freedom was won not for any one community but for all which includes the Sinhalese, Tamils, Muslims, Burghers, Malays and all others who comprise the Sri Lankan Nation”. Our President quoted from the speech made by the first Prime Minister the late Rt. Hon. D.S.Senanayake on that historic occasion in 1948 as, “Independence was obtained to reduce suffering and increase happiness among people without any discrimination on grounds of race political affiliation, religion or any such difference”. This quote could be construed as His Excellency’s admission of failure on the part of the successive Governments, to adhere to this noble principle, that had brought ruin to the country and misery to its people.

The Minorities of our country as well as those of the majority community applaud his call for the unity of all forces irrespective of any differences and also endorse his views that we can rise up as a country and nation, when we are united. No unity can be achieved with un-contended ethnic groups in the country. So to achieve unity we all must rise above all our petty differences and rouse our patriotic feeling that lies deeply buried in the hearts of many of us, with selfishness raising its ugly head.

The President wants all the Patriots who want the country’s problems solved, to rally round him. I am sure that the ethnic problem would have been foremost in his mind. Every one knows that the ethnic problem is the biggest hurdle to the progress of the nation, which once cleared the progress would be ten fold and with the resources available in the country, properly utilised the progress would be much more than one’s imagination. To my understanding, based on my experience, a true patriot is one who loves his country and its people and certainly not one who loves his country and his people. That is not patriotism and such people will not help to solve the country’s problems. I love my country and its people and do not see any difference between people of two different communities or religions. I do not have a single enemy in any one of the ethnic or religious groups except perhaps those who support terrorism directly or indirectly.

The first Sinhalese I ever met, as far as I can recollect, was the “ Baker Mama” for whom I used to wait every evening clinging on to my mother’s ‘saree potas’. Four O’ clock on the dot he was there at our door-step during his daily rounds around our village, with varieties of cakes and buns most of which, we do not now see in the show cases of bakeries. The next was a midwife, very much liked and respected by the village-folk. In the good old days each village or a group of small villages had a midwife most of whom were Sinhalese. With the limited medical facilities available then, the Sinhala Midwife was our gynaecologist and it was under her care and attention most children in our village were safely delivered. She lived among us like one of us and very much respected by all. My play-mates were her brother and the son of a Muslim trader who lived among us peacefully.

My father a teacher and a contemporary of the late Hon. Dr. W.Dahanayake, when accepted the Principal’s post in a village school made it a precondition to admit children of minority Tamils not given admission till then. He also had a graduate Buddhist Priest to teach Sinhala to Tamil students. School with 100% Tamil students had Teachers to teach Sinhala till 1956 when the Sinhala only bill was passed.

This type of experience, very many during my childhood, helped me to grow without any malice towards any one who did not belong to my community or religion. Irrespective of which ever ethnic group we belonged to, we lived like brothers and liked each others. That is exactly so with the Sinhalese, Muslims and others too in their respective areas. This will surprise the present day Sinhalese youths from the South and will be shocking to the Tamil youths living in areas under the control of the LTTE where they have no contact with the outside world. They had not seen a Sinhalese person in their life-time. Most of them have heard of a train, but not seen one. They are brainwashed to such an extent, that in their thinking the Sinhalese are treating them cruelly and that Prabakaran is their saviour.

I am one who had the rare opportunity of living among the Sinhalese, Tamils, Muslims and Malays and also studying together with Sinhalese, Tamil, Muslim and Malay students. I had the privilege of being taught by Sinhalese, Tamil, Muslim and Malay teachers and had taught Sinhalese, Tamil, Muslim and Malay students. Hence the love and respect I have for one community is in no way less or more than what I have for another community. It is a poem that I learnt, when I was in school authored by Sir Walter Scott if I remember correct, titled, THE LAY OF THE LAST MINSTREL, that inspired me to love my country so much and to prepare myself for any sacrifice for the sake of my country and its people. The author of the poem is asking, “Breaths there the men with soul so dead who never to himself hath said, this is my own my native land”. At that tender age I saw all citizens of Sri Lanka known as Ceylon then, as children of mother Lanka irrespective of their ethnicity, caste or creed. It is this attitude towards humanity that urged me, inspite of the grave risk I faced, to take a pledge to redeem my country and to help to bring it back to its old glory. The blood shedding must stop in Sri Lanka, the fear and tension in the people must cease and there should be absolute peace in our country. The Sinhalese, the Tamils, the Muslims and people of all the other minority groups should once again live in peace and harmony, as equals enjoying all rights and privileges and with mutual love and respect for each other. We can’t bring all the people together by threat or by force. It is only by showing love and compassion that we can win our people. This is what all our religions also preach. All of us who believe in re-birth should concede that it is only by accident I am a Tamil and that I can be a Sinhalese or a Muslim in my next birth. Hence we can’t discriminate against one another.

Because of a meaningless war, over 70-80 thousand valuable lives had been lost. More than 20 thousand Tamils and another 20 thousand Sinhalese and Muslims had been widowed due to this war that had achieved nothing but only brought deaths and destruction. Apart from this many thousands have been orphaned, be-numbed, lost their limbs and eyesight. Billions and billions worth of property both public and private had been destroyed. Above all, people of all communities cannot walk on the streets, travel by bus or train without fear and with the assurance of safe return after a day’s work. This situation is prevailing for almost quarter of a century, with people still expressing fear of division of the country without realising that there is no need for such fears in a just society where people lead a contended life. No one in whose family war had brought destruction or loss of life or limb, will dare to talk about continuing the war. Those who want war must visit the families in which some one died or widowed or orphaned or lost a limb or eyesight or have become be-numbed due to the war directly or indirectly, to feel for themselves the cruel effects of war. I lost six members of my family and we have three widows and a few orphans. Some say that I have taken a courageous stand. It is not my courage that made me to take a firm stand against terrorism, but it is the sense of duty that I owe to my country as one of its citizen.

The whole country is tired of war and is now yearning for Peace which we all know can be achieved, only in a contended society. Hence the need arises for the Government to come out with a reasonable proposal acceptable to the International Community which is watching the developments in the country with great concern. The countries that had banned the LTTE expect the Government to act reciprocally for them to move further in the matter. The fact that the LTTE celebrated their heroes day in a grand scale in some E.U. countries clearly shows that the very same countries that banned them are now loosening their grip on the LTTE. The International Community is expecting a Federal Solution within a United Sri Lanka, as envisaged in the Oslo and Tokyo agreements.

During the last two to three years I had met and discussed our problem with very many including Religious Dignitaries, Leaders of Political Parties, Leading Personalities, various groups of Sri Lankans in Europe and Canada, most of whom are agreeable to an Indian Model as an Alternative to a Federal Solution since some do not like a solution under both Federal and unitary concepts. The LTTE has its own agenda and will never compromise on their demand for a separate state. The Government can strengthen its position and simultaneously weaken the LTTE also, only by offering a solution accepted as reasonable by the International Community, so that they can recommend the same to the minorities with pressure to the LTTE also to accept it. If the LTTE still refuses to accept such a solution the International Community need not be told as to what their other options could be.

The practice of getting the advice of the Prelates existed in all countries during the Monarchial rule in the good old days. It had been the practice in our country too to get the advice of the Maha Sangha. His Excellency the President knows my views in this matter. The mere mention of my name by him in his Independence day speech makes me feel that His Excellency is prepared to consider my proposal too to find a final solution to our ethnic problem. It also gives me encouragement to continue my mission of finding early peace. What happened to the poor Brahmin Priest who garlanded His Excellency at Vaharai should not happen again to another person. Every one in this country should ask himself or herself whether the future of the Tamils should be handed over to a group of unreasonable, arrogant and ruthless persons.

I therefore seek the assistance of not only the Maha Sangha but also of the prelates of all the other religions in our country, to prevail on His Excellency Mahinda Rajapakse to come out with a proposal based on the “Mahinda Chinthanaya” which is in reality based on Natural Justice that no one can find any excuse to reject. I hope his proposal for a lasting solution will bring back peace to our suffering masses after a period of half a century.

Thanking you,

Your Sincerely,


V.Anandasangaree,
President – TULF.

இனப்பிரச்சனைக்கு வணக்கத்திற்குரிய பீடாதிபதிகளின் ஆதரவு கோரல்

09.02.2007
பல்வேறு மதத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்.

இனப்பிரச்சனைக்கு வணக்கத்திற்குரிய பீடாதிபதிகளின் ஆதரவு கோரல்

59வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் நாமெல்லோரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்துப் போராடிய சிங்கள, தமிழ், இஸ்லாமிய மற்றும் இனத்தவர்கள் என மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தனது சுதந்திர தினச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆகவே குறிப்பிட்ட ஒரு இனத்தவருக்கன்றி சிங்கள, தமிழ், இஸ்லாமிய, பறங்கிய, மலே உள்ளடக்கிய இலங்கையர்கள் அனைவருக்கும் இந்தப் பெருமை சேரும். 1948ஆம் ஆண்டு முதற் பிரதம அமைச்சராகிய அதி கௌரவத்திற்குரிய டி. எஸ். சேனநாயக்க அவர்கள் “சுதந்திரம் பெற்றது மக்கள் மத்தியில் இன மத அரசியல் வேறுபாடின்றி அவர்களுடைய துன்பங்களைக் குறைத்து மகிழ்ச்சியைப் பெருக்கவே” என ஜனாதிபதி அவர்கள் தமது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இக்கூற்று 50 ஆண்டுகாலமாக மாறிமாறி ஆட்சி செய்த அரசுகள் இந்த அற்புதமான கொள்கையைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டதனால் நாடு சீரழிந்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தது என ஒத்துக்கொள்கிறார் எனலாம்.

ஜனாதிபதி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுமாறு விடுத்த வேண்டுகோளை இந்நாட்டின் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்ற பேதமின்றி அனைவரும் வரவேற்று ஏற்றுக்கொண்டு, நாம் ஒன்றுபட்டிருப்பின் எமது நாட்டை மிக்க உச்ச நிலைக்கு உயர்த்த முடியும் என்ற கூற்றையும் ஆமோதிக்கின்றனர். நாட்டின் ஒருபகுதியினர் அதிருப்தியுடன் வாழும்போது ஒற்றுமையை ஏற்படுத்துவது கடினமாகும். ஆகவே அனைவரையும் ஒற்றுமைப்படுத்தின் நாமனைவரும் நமக்குள் உள்ள சில வேறுபாடுகளை மறந்து – எம்முள்ளத்தின் அடியில் தூங்கக்கொண்டிருக்கும் தேசப்பற்றைத் தட்டி எழுப்பி சுயநலம் தலைதூக்காது தவிர்ப்பது நல்லதாகும்.

நாட்டுப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தேசப்பற்றாளர்கள் அனைவரையும் தன்னுடன் சேருமாறு ஜனாதிபதி அழைப்பு விட்டவேளையில் இனப்பிரச்சனையே அவருக்கு முக்கியமானதாக தோன்றியிருக்கவேண்டும். இனப்பிரச்சனை நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால் இத்தடை நீக்கப்பட்டால் எமது முன்னேற்றம் பத்துமடங்காகப் பெருகுவது மட்டுமன்றி, எமது வளங்கள் சரியாக உபயோகப்படுத்தப்படின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு எமது நாடு முன்னேறமுடியும். அனுபவரீதியாக நான் விளங்கிக்கொண்ட உண்மை எவர் தன்நாட்டையும் அந்நாட்டு மக்களையும் நேசிக்கின்றாரோ அவர்மட்டும்தான் தேசப்பற்றாளர் அல்லாது தன்நாட்டையும் தன் இனத்தவரையும் நேசிப்பவர் தேசப்பற்றாளர் இல்லை. இது தேசப்பற்றுமல்ல. பிரச்சனைகளைத் தீர்க்கவும் இத்தகையோரால் முடியாது. நான் என் நாட்டையும், அதன் மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். வேறு இனத்தவர்கள் மதத்தவர்கள் மீது எதுவித வேறுபாடும் காணவில்லை. எனது நாட்டில் வாழும் பல்வேறு இன மத மக்களில் எனக்கு ஒரு விரோதியும் இல்லை. ஒரு சமயம் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ என்மீது விரோதம் கொண்டிருக்கலாம்.

எனது ஞாபகத்திற்கு எட்டிய வகையில் எனது தாயாரின் சீலைத் தலைப்பில் பிடித்துக்கொண்டு தினமும் காத்திருந்த “பேக்கர் மாமா”தான் (Baker Mama) நான் முதல்முதல் சந்தித்த சிங்களவர் ஆவார். தினமும் கிராமத்தைச் சுற்றிவரும் அவர் தன்னால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களுடன் சரியாக மாலை 4 மணிக்கு எனது வீட்டுவாசலில் வந்து நிற்பார். அவர் தயாரித்து விநியோகித்த பதார்த்தங்கள் இன்றைய பேக்கரிகளில் நான் காண்பதில்லை. அடுத்து நான் சந்தித்த சிங்களவர் எமது கிராம மக்கள் அன்போடும் மரியாதையோடும் மதித்த மருத்துவமாது ஆவார். அந்த நாட்களில் ஒரு கிராமத்திற்கு அல்லது ஒருசில கிராமங்களுக்கு ஒரு மருத்துவமாது நியமிக்கப்படுவது வழக்கம். அப்பதவியை அநேகமாக சிங்களப்பெண்களே வகித்துவந்தனர். அதிகளவு மருத்துவ வசதிகளற்றகாலத்தில் இம்மருத்துவ மாதுக்களே பிள்ளைப்பேற்று மருத்துவ நிபுணர்களாக செயற்பட்டதோடு, அந்தக் கிராமத்தில் பிறக்கின்ற பிள்ளைகள் அனைவரும் இவர்களது மேற்பார்வையிலும், கவனிப்பிலும் பிரசவிக்கப்பட்டவரே. எங்களில் ஒருவராக எங்களுடன் வாழ்ந்த அவர் மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். அவரது ஒரு தம்பியாரும் அங்குவாழ்ந்த ஒரு இஸ்லாமிய வியாபாரியின் மகனும் எனது விளையாட்டுத் தோழர்கள்.

கௌரவ கலாநிதி. டபிள்யூ. தகநாயக்க அவர்களுடன் ஏக காலத்தில் ஆசிரியப் பயிற்சிபெற்ற எனது தந்தையார் ஒரு கிராமப் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டபோது, அதுவரைகாலமும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்விகற்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ்பெறச் செய்தார். தனது கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழி போதிக்க ஒரு பட்டதாரி பௌத்த குருவை ஆசிரியராக நியமித்திருந்தார். தனிச்சிங்களச் சட்டம் 1956ல் அமுலாக்கப்படும்வரை 100மூ தமிழ்மாணவர்கள் கல்விகற்ற பாடசாலைகளில் சிங்களம் போதிக்கப்பட்டு வந்தது.

சிறுவனாக இருந்தபோது இத்தகைய அனுபவங்கள் எனது இனம் மதம் என்ற வேறுபாடின்றி எவர்மீதும் எதுவித வெறுப்புணர்வின்றி வளர உதவியது. எதுவித இனபேதமின்றி நாமனைவரும் சகோதரர்கள் போல வளர்ந்தோம். இதேபோன்றுதான் தம்தம் பகுதிகளில் சிங்களவர்களும், இஸ்லாமியர்களும், ஏனைய இனத்தவர்களும் வாழ்ந்தனர். எனது இக்கூற்று தெற்கே வாழும் சிங்கள இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையும், வெளியுலகத் தொடர்பற்ற விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுக்கும். அவர்களின் வாழ்நாளில் ஒரு சிங்களவரைத்தன்னும் சந்தித்திருக்கமாட்டார்கள். அனேகர் புகையிரதத்தைப்பற்றி கேள்விப்பட்டிருப்பினும், ஒரு புகையிரதத்தைத்தானும் பார்த்திருக்கமாட்டார்கள். சிங்களவர் தம்மைக் கொடுமைப் படுத்துவதாகவும், பிரபாகரன்தான் தமது ரட்சகர் என்றும் சிந்திக்கும் அளவுக்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலேயர் வேறும் சில இனத்தவர்கள் மத்தியில் வாழும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றிருந்ததோடு சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மாணவர்களுடன் இருந்து கல்விகற்றிருக்கின்றேன். சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே ஆசிரியர்களிடம் கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த நான், சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மாணவர்களுக்கு கல்வி போதித்திருக்கின்றேன். ஆகவே நான் ஒரு இனத்தில் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும், இன்னொரு இனத்தில் வைத்திருக்கும் அன்புக்கும், மதிப்பிற்கும் எதுவிதத்திலும் கூடியதோ அன்றி குறைந்ததோ கிடையாது. நான் சிறுவனாக இருந்தபொழுது மனப்பாடம் செய்த சேர். வோல்டர் ஸ்கொற் என்பவரால் இயற்றப்பட்ட ‘ஒரு நாடோடிக் கவிஞனின் கடைசிக் கவிதை’ என்ற நாட்டுப்பாடலே, என்னை - எனது நாட்டை நேசிக்கத் தூண்டியது. நாட்டுக்காகவும், அதன் மக்களுக்காகவும், எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார் படுத்தியது. அக்கவிஞர் தனது கவிதையில் “இது என்னுடைய சொந்த நாடு என்று – தன் உள்ளேதன்னும் ஒரு தடவையேனும் கூறாத இதயமற்ற ஒருவன் உயிருடன் இருக்கின்றானா?” என்று கேள்வி தொடுக்கிறார். அச்சிறுவயதில், முன்பு இலங்கை என அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீ லங்காவில் பிரஜைகள் அனைவரையும் இன மத பேதமற்று - இலங்கைத் தாயின் பிள்ளைகளாகவே நான் கருதிக் கணித்துவந்துள்ளேன். மனிதாபிமானத்தின் மீது நான் கொண்ட அபிப்பிராயமே எனக்கு எத்தகைய ஆபத்து எதிர்நோக்கிய வேளையிலும், எனது நாட்டை பழைய பிரபல்யமான நிலமைக்கு மீட்டெடுக்க உறுதிபூணவைத்தது. இலங்கையில் இரத்தம், சிந்துவது நிறுத்தப்பட்டு மக்கள் மத்தியிலுள்ள பயமும் பீதியும் விலக்கப்பட்டு, நாட்டிலே பூரண சமாதானம் நிலவவேண்டும். சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மற்றும் ஏனைய சமூகத்தவர்கள் மீண்டும் ஒரு தடவை சமாதானமாகவும், அமைதியாகவும், சகல உரிமைகளும், சலுகைகளும், சமமாக அனுபவித்து ஒருவரை ஒருவர் மதித்தும், நேசித்தும் வாழ வேண்டும். நாம் மிரட்டியோ அன்றி பலாத்காரத்தின்மூலமோ சகல மக்களையும் ஒன்றுபடவைக்க முடியாது. அன்பையும், பரிவையும் காட்டுவதன்மூலமே மக்களை வென்றெடுக்கமுடியும். இதுவே எமது சகல சமயங்களும் போதிக்கின்றன. மறுபிறப்பில் நம்பிக்கைகொண்ட நாம், இப்பிறப்பில் தமிழனாகப் பிறந்த நான், மறுபிறப்பில் ஒரு சிங்களவராக அல்லது இஸ்லாமியராக பிறக்கக்கூடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஒருவருக்கொருவர் நாம் பாகுபாடு காட்ட முடியாது.

அர்த்தமற்ற ஒரு போரினால் 70 அல்லது 80 ஆயிரம் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோயின. மரணத்தையும், அழிவையும் தவிர வேறு எதையும் அடையாத ஒரு யுத்தத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர பல்லாயிரக்கணக்கானவர்கள் அநாதைகளாக, மனநோயாளர்களாக, அங்கவீனர்களாக, பார்வையிழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பற்பலகோடி பெறுமதியான அரச தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சகல இன மக்களில் ஒருவர்தானும், வீதியில் பயமின்றி நடக்கவோ, பஸ்ஸிலோ, இரயிலிலோ பிரயாணம் செய்யவோ, வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும் உத்தரவாதமோ இன்றி வாழ்கிறார்கள். இந்த நிலை கடந்த கால் நூற்றாண்டு காலம் நிலவிய போதும், திருப்தியுடன் மக்கள் வாழும் சமுதாயத்தில் பிரிவினைக்கு இடமில்லாத போதிலும், சிலர் நாடு பிரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். தனது குடும்பத்தில் உயிரழிவோ, உடமையழிவோ அல்லது வேறு ஏதேனும் இழப்போ ஏற்பட்டிருப்பின் அத்தகைய ஒருவர் யுத்தம் தொடரவேண்டும் என்று கூறமாட்டார். யுத்தம் வேண்டி நிற்பவர்கள் இப்போரின் கொடூரத்தை அல்லது தாக்கத்தை உணரவேண்டுமாயின் - ஒருவரையிழந்த, விதவையாக்கப்பட்ட, அநாதையாக்கப்பட்ட, அங்கவீனராக்கப்பட்ட கண்பார்வையற்ற அல்லது மனநோயாளியாக்கப்பட்ட உள்ள ஒருவரது குடும்பத்தைச் சென்று பார்வையிடவேண்டும். எனது குடும்பத்தில் 6 பேரை நான் இழந்ததோடு 3 விதவைகளும், சில அநாதைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் நான் தைரியசாலி எனப் புழுகுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுப்பதற்கு எனது மனத்தைரியமல்ல, எனது நாட்டுக்கு ஒரு பிரஜை செய்ய வேண்டிய முக்கிய கடமையையே நான் செய்கிறேன்.

நாடு முழுக்க யுத்தத்தால் களைப்படைந்து, சமாதானத்திற்காக ஏங்குகிறது. ஆனால் திருப்தி கொண்ட ஒரு சமுதாயம் உருவாக்கப்படும்வரை சமாதானத்தை நாம் அடைய முடியாது என்பதை அனைவரும் உணரவேண்டும். ஆகவே சர்வதேச சமூகம் நாட்டில் நடப்பவற்றை மிகவும் அவதானமாக கவனித்துக்கொண்டிருக்கின்றவேளையில் - எல்லாருக்கும் ஏற்புடையதாகிய ஒரு நியாயமான தீர்வை முன்வைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நாடுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு, இலங்கை அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. மாவீரர் தினத்தை விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விமரிசையாகக் கொண்டாட அனுமதித்த – விடுதலைப்புலிகளைத் தடைசெய்த சில நாடுகள், அவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளைத் தற்போது தளர்த்துவதுபோலத் தெரிகிறது. ஒஸ்லோ மற்றும் டோக்கியோ உடன்படிக்கைகள் மூலம் ஒப்புக்கொண்டபடி ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.

கடந்த 2, 3 வருடங்கள் எமது பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு சமயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சில பிரதானிகள், ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் இயங்கும் பல்வேறு இலங்கை அமைப்புக்கள் இந்திய முறையிலான அரசியலமைப்பை சமஷ்டி அமைப்புக்கு மாற்றாக ஏற்கத் தயாராக உள்ளனர். சமஷ்டி முறையையும், ஒற்றையாட்சி முறையையும் சிலர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் விரும்ப மாட்டார்கள். சர்வதேச சமூகம் ஏற்று சிறுபான்மை மக்களுக்கு சிபார்சு செய்யக்கூடிய, விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கும் பட்சத்தில் அது அரசுடைய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதோடு, விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்யும். அத்தகைய ஒரு தீர்வையும் விடுதலைப் புலிகள் நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் என்ன மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் கூறவேண்டிய அவசியமில்லை.

பண்டைக்காலத்தில் மன்னராட்சி நிலவிய சகல நாடுகளிலும், சமயப் பெரியார்களிடம் ஆலோசனைபெற்று ஆட்சி நடத்தும் வழமை இருந்துவந்துள்ளது. நம் நாட்டிலும் மகா சங்கத்தினருடைய வழிநடத்தல் இருந்திருக்கிறது. இந்த விடயத்தில் எனது நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார். ஜனாதிபதி அவர்கள் தனது சுதந்திரதின விழா உரையின்போது எனது பெயரைக் குறிப்பிட்டமை இனப்பிரச்சனையின் இறுதித் தீர்வுக்கு – எனது தீர்வையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அவரது பேச்சு சமாதானத்தை அடையும் பணியில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டுக்கு உற்சாகத்தைத் தருகிறது. வாகரையில் ஜனாதிபதிக்கு மாலையணிவித்து கௌரவித்த ஒரு ஆலயத்தின் பிரதம குருவுக்கு நடந்ததுபோல இன்னொருவருக்கு இனிமேல் நடக்கக் கூடாது. இந்நாட்டிலுள்ள ஆண் பெண் அனைவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் - தமிழருடைய எதிர்காலம் நியாயமற்ற, கர்வம் கொண்ட, கொடூரமான ஒரு சிறுகுழுவினரின் கையில் ஒப்படைக்கப்பட வேண்டுமா?

ஆகவே மகாசங்கத்தினரை மட்டுமல்ல நாட்டிலுள்ள பல்வேறு மதத் தலைவர்களையும் மிகவும் பணிவாக நான் வேண்டுவது “மனு நீதி அடிப்படையில் உருவாகியதுதான் மகிந்த சிந்தனை. அதனடிப்படையில் ஒரு பொருத்தமான தீர்வை ஜனாதிபதி அவர்கள் முன்வைக்க ஆலோசனை வழங்க வேண்டும். அவருடைய தீர்வு 50 ஆண்டுகாலமாக துன்பப்படும் மக்களுக்கு மீண்டும் அமைதியைக் கொடுக்கக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

என்றும் உண்மையுள்ள,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி

ANANDASANGAREE VISIT TO BATTICALOA AND VAHARAI

23-08-2007
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka.

Your Excellency,

VISIT TO BATTICALOA AND VAHARAI

We wish to thank you for the arrangement you made to enable us to visit Batticaloa and Vaharai and to know of the ground situation in those areas. Arrangements had been made for us to meet the representatives of various organisations. Among others we met representatives of farmers organisations, fisheries organisations, Heads of Schools, N.G.Os, INGOs, Heads of various Government Departments, Grama Niladaries, Social Workers, Religious Leaders etc. at the Batticaloa Kachcheri, Vaharai Divisional Secretary’s Office and Vaharai Mahavidyalaya. We should make a special mention of the co-operation given to us by the Police, Army and the S.T.F. All of them maintain very good relationship with the civilian population and are very helpful to the civilians. We were free to talk to the civilians and the civilians could very freely talk to us about the problems they face.

We have identified the following matters that need your prompt action:-
1. DISPLACED PERSONS OF MUTHUR-EAST, SAMPUR AND ECHALAMPATTAI.
a. They want to be resettled in their respective homes. They will not object to army declaring a specified area as HSZ and occupying that area outside their residential area.
b. These people now living in various camps in Batticaloa want to be shifted to a place close to their home until their area is cleared for re-settlement.

2. HOUSES.
Action should be taken to re-build and repair houses damaged during the confrontation with the LTTE. Even houses damaged due to Tsunami are either damaged again or not constructed.

3. AGRICULTURE.
a. Agricultural activities cannot be restarted until the infrastructure is attended to.
b. The farmers need agricultural implement, seed paddy manure etc. to recommence from scrap.
c. Renovation of Tanks in these areas that had not been maintained properly for a period of time should be renovated. Estimates seem to have been prepared but funds have not been released yet. The agricultural department may be instructed accordingly. An officer may be assigned to co-ordinate all works
d. Basic subsistence may be given for a specified period for the farmers who depend entirely on farming.

4. FISHERIES.
Some even complained that they didn’t get any implements to commence fishing. Housing also is a problem that they are facing. We suggest that a special officer is assigned to look-after their interest for a specified period. Basic subsistence may be given for a specified period

5. SCHOOLS.
General complain is about the shortage of Teachers. Construction of school buildings undertaken by some NGO are not being attended to. The Ministry of Education may be advised to instruct the said NGO to commence work without delay.

6. TEMPLES.
Temples damaged during recent operations should be repaired or rebuilt.

7. HOSPITAL.
There is only one Doctor attending on hundreds of patients every day. More Doctors will have to be appointed. The Hospital building be will have to repaired.

8. RAILWAY.
a. Only three compartments are attached to the Colombo-Batticaloa Train to meet the requirements of several hundreds of passengers.
b. There is a strong demand for a Train Service from Batticaloa to Trincomalee.

9. COMPENSATION.
The Government Servants including Teachers have not been paid any compensation. This will have to be attended to.

10. SHORTAGE OF BUILDING MATERIALS.
Difficulty in obtaining cement and sand for construction works is the main problem. Some NGOs engaged in construction works had complained so. The relevant authorities may be instructed to attend to these need of the INGOs and NGOS.

In general a apart from releasing funds for various works kindly assign special officers to co-ordinate work related to education agriculture fisheries and housing.

Thanking you,
Yours Sincerely,

V.Anandasangaree,
President – TULF.

PRESS RELEASE

While strongly condemning the gruesome murder of the 22year old undergraduate of the University of Jaffna Mr. Sahadevan Nilakson, I express my deepest sympathies to the grieving parents and relatives. Let his soul rest in peace.

This is not the first time a University student is killed in this manner in the North and may not be the last one too. The failure to condemn by all, this type of killings, be it in North or in the South, and whether the victim is a Tamil, Sinhalese, Muslim or one of the any other ethnic group, has given encouragement to the assailants to repeat their cruel acts at regular intervals without being tracked. There is no meaning in going round the world complaining about Human Rights Violations in the country, in the North and the East in particular, pointing an accusing finger in one direction, when in fact it should be pointed at different directions as well, because the killings are not by one particular group alone. Planting a claymore mine targeting the Army, Navy, Air Force and Police personnel and causing the death of a few innocent civilians including children is the worst form of violation of human rights, denying the right of free movement of the civilian population. Unless and until the entire media and all concerned parties condemn these incidents with one voice, without glorifying any one group or the other for their atrocious activities, this menance cannot be got rid of from the Sri Lankan society.

I take this opportunity to advise the students of both the Universities and the secondary schools, not to get involved in any student organisation on the advice of some self seekers and to fulfil the ambitions of their parents by concentrating on their studies. The students will have to keep away from student organisations till normalcy returns and democracy restored. I give this advise being fully aware of how a handful of students deriving their authority from an armed group notorious for it’s un democratic and atrocious activities , trying to lead thousands of University students and hundreds of thousands of secondary school children, endangering their lives. Although my advice may taste bitter to some, everyone should understand the reality and act accordingly. The parents owe a duty to their children to give them the proper advice and the students have a duty to fulfil the ambitions of their parents without being a prey in the hands of the self seekers who will misuse them for their personal gains.

I plead with the students to give-up all student union activities and concentrate on their studies and the parents to advice their children accordingly. Any problems the students want to solve could be taken up through the administrative channel until normalcy is restored.


V. Anandasangaree
President – TULF

எனது அன்புக்குரிய சமதானத்தை விரும்பும் தேசாபிமானங்கொண்ட இலங்கை குடிமக்களே,

25.06.2007

எனது அன்புக்குரிய சமதானத்தை விரும்பும் தேசாபிமானங்கொண்ட இலங்கை குடிமக்களே,

நான் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை என நினைக்கின்றேன். 74 வயதுடைய நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டுள்ளேன். எனது நாட்டையும் அதன் மக்களையும் மிகவும் நேசிப்பதோடு இலங்கைக்கு சமாதானத்தை கொண்டுவர தீவிரமாக உழைத்து வருகின்றேன். பொறுமையையும் அஹிம்சையையும் முன்னெடுப்பதற்காக யுனெஸ்கோவின் 2006 ஆம் ஆண்டுக்கான மதன்ஜித் சிங் விருது எனக்கே கிடைத்தது. கடந்த 4 ஆண்டு காலமாக எமது நாட்டுக்கு சமாதானத்தை மீளக் கொண்டுவர சிறந்த வழி எது என மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அம்முயற்சியில் பல்வேறு ஸ்தாபனங்கள் பல்வேறு அரசுத் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், மாட்சிமை தங்கிய இலங்கை ஜனாதிபதி, பல்வேறு சமயப் பெரியார்கள் ஆகியோரோடும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பல பிரமுகர்களுடனும் பேசியும் அவர்களுக்கு எழுதியும் உள்ளேன். இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு குறித்து மிகவும் உபயோகமான நீண்ட பேச்சுவார்த்தைகளை பல்வேறு அரசியற் கட்சித் தலைவர்களுடன் நடாத்தியுமுள்ளேன். எனது முயற்சியில் முழு வெற்றி காணாமையால் வேறும் பலரை உள்வாங்கி நியாயமான ஓர் தீர்வை படித்து, தெளிவுபெற்று, அரசியல் இலாபம் தேடாது, ஆதரிக்குமாறு வேண்டுகின்றேன்.

முன்பு சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலாயர்கள், பறங்கியர்கள் மற்றும் பிற சமூகத்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டாது ஒருவரை ஒருவர் நேசித்தும், மதித்தும், சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்ந்தனர். இன்று எமது நாட்டில் நடக்கின்ற கொடூர செயல்களை கண்டும் கேட்டும் வரும் இளம் தலைமுறையினர் எனது கூற்றை நம்பமாட்டார்கள். உண்மையில் நாங்கள் எமது நாட்டை பற்றி பெருமைகொண்டிருந்தோம். எங்களுக்குள்ளே விரோதமோ பொறாமையோ இருக்கவில்லை. அண்மைக்காலமாக பல்வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்க்கின்ற புதிய போக்கை அவதானித்த நாம் கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம், இழந்த பெருமையை எப்படி மீளப்பெற வேண்டும் என்பது பற்றி இன்றைய தலைமுறைக்கு கூறவேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு என்பதை உணர்ந்தேன். எந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்தோமோ அங்கே தினமும் மரணங்களும், அழிவுகளும் இடம்பெறுகின்றன. ஒருநாள் தவறாது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் தலையில்லா முண்டங்கள், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் வீதி ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் சில வேளைகளில் அழுகிய நிலையிலும் காண்கின்றோம். ஓரே நேரத்தில் 100 பேருக்கு மேல் இறந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கொல்லப்படுபவர்களில் ஆண்கள், பெண்கள், பால் குடிகள் உட்பட சிறுவர்களும் அடங்குகின்றனர். நிரந்தர பயத்துடனும் பீதியுடனுமே மக்கள் வாழ்கின்றார்கள். எந்த விலை கொடுத்தேனும் முதலாவதாக சமாதானத்தை அடைவதையே விரும்புகின்றனர். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்பப்படா திருந்திருந்தால் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களும் பல கோடானுகோடி பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்படாது காப்பாற்றியிருக்க முடியும். சில அரசியல் தலைவர்களின் முரட்டுப் பிடிவாதமே இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. இந்த கொலைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? அதற்குரிய விடையை இளைய தலைமுறையினர் கூறட்டும்.

எம்மில் சிலர் எங்களுக்களிக்கப்பட்டுள்ள பாதுகாப்புடன் மிக பாதுகாப்பாக இருக்கின்றோம். ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பில்லை. அவனே வீதி ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அவனே தன் மனைவி மக்களை பாதுகாக்க வேண்டியவனாக இருக்கின்றான் ஆகவே நாம் அவனைப்பற்றித்தான் கவலைப்பட வேண்டும். எம்மத்தியில் ஆயிரம் பேரை பலி கொடுத்துக் கூட தனக்கு புகழ் தேடக் கூடிய விடுதலைப் புலித் தலைவர் இருக்கின்றார். எனது இரு கடிதங்களில் ஒன்று வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எழுதியது, மற்றையது இந் நாட்டு மக்களுக்கு எழுதிய இக்கடிதமாகும். அனைவரும் அவற்றை படித்து தாமே ஒரு தீர்மானம் எடுக்கக் கூடிய வகையில் இவ்விரு கடிதங்களும் ஒன்றாக பிரசுரிக்கப்படுகின்றன. எமக்கு சமாதானம் வேண்டுமாயின் அதற்கான தீர்வு என் கடிதங்களிலேயே உண்டு. திரு பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர் எவ்வாறு தமிழ் சமுதாயத்தை குட்டிச்சுவராக்கியதுடன் ஒவ்வொருவருக்கும் துன்பத்தையே தேடித்தந்தார் என்பதும் படிப்படியாக அவர் எவ்வாறு தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தினார் என்ற விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயமாகச் சிந்திக்கும் தமிழர் அல்லாத ஒருவர் பிரபாகரனுக்கு எழுதப்பட்ட கடிதத்தை படிப்பாரேயானால் தமிழ் சமூகம் படுகின்ற துன்பத்தை அறிந்து கண்ணீர் விடுவதோடு அவர்களை மீட்டெடுத்து அவர்களுடன் சமமாக, சமாதானமாக வாழவே விரும்புவார். லங்கா மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அதற்குத் தயாராக உள்ளோமா?

நாட்டபிமானம் கொண்ட மக்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இனப்பிரச்சினை எப்போ எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதென்றும் ஒரு தீர்வு காணப்படாது 50 ஆண்டுகள் இழுபட்டதையும் விபரிக்கின்றது. நியாயமாக சிந்திக்கக் கூடிய எவரும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளுக்கு பரிகாரமாக தாமதமின்றி ஒரு தீர்வை காணவே விரும்புவர்.

நான்கு பௌத்த பீடாதிபதிகளாகிய அஸ்கிரிய பீடாதிபதி வண. உடுகம சிறி ரத்தினபால மகாநாயக்க, மல்வத்த பீடாதிபதி வண. சிறி சித்தார்த்த மகாநாயக்க, ராமான்ஜ பீடாதிபதி வண. வேவல்தெனிய மேதாலங்கார மகாநாயக்க, அமரபுர பீடாதிபதி வண. தேவுன்தெனிய ஞானாசார மகாநாயக்க ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவருடைய அரசும் நாட்டில் உள்ள குழப்பநிலைக்கு தீர்வு கண்டு சகல சமூகத்தினரும், மதத்தினரும், பிரிவினரும் இணைந்து சமாதானமாக வாழ முடியும்” எனத் தெரிவித்துள்ளனர். அத்தோடு, “இம் முயற்சி நாட்டின் அபிவிருத்திக்கும், நல்லாட்சிக்கும் வழிவிடும்”, என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “சில கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதை நியாயமாக சிந்;திக்கின்ற நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, தமக்கிடையேயுள்ள குறுகிய பேதங்களையும், குறுகிய இலாபம் தேடுவதையும் கைவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண அரசுக்கு பூரண ஆதரவு கொடுக்க வேண்டும்”, என்றும் கேட்டுக்கொண்டனர்.

மகாநாயக்கர்களுடைய கூட்டறிக்கை பெரும் உற்சாகத்தை அளிக்கின்றது. இந்தநாட்டில் இடம்பெறும் யுத்தத்தால் விதைவைகளான, அங்கவீனர்களான, அனாதைகளானவர்களின் பரிதாப நிலை பற்றி நீங்கள் கடுமையாக சிந்திப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். பொறுப்பற்ற சிலரால் கைகால்களை, கண்பார்வையை இழந்தும் 70 ஆயித்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தும், சகல சொத்துக்களையும் இழந்தும் உள்ள மக்கள் மீது அனுதாபம் காட்டுவீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகவே எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து தம் முழு சக்தியையும் உபயோகித்து மீண்டும் ஒரு போராட்டத்தை எதிர்கால சந்ததியினர் தொடராத வகையில், சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான, நின்று நிலைக்கக் கூடிய, ஒரு இறுதித் தீர்வை காண உதவுவீர்கள் என்று நம்புகின்றேன்.

நான் சிங்கள தமிழ் இஸ்லாமிய மக்களுடன் நீண்டகாலம் வாழ்ந்து, சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களுடன் ஒன்றாக கல்வி பயின்று, மேலும் சிங்கள முஸ்லிம் தமிழ் ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்பட்டு சிங்கள தமிழ் மாணவர்களுக்கு கல்வியும் போதித்தவன். ஆகவே, எதுவித பிரச்சினையுமின்றி நாம் எல்லோரும் சமாதானமாக வாழ முடியும் என்று திடமாக நம்புகின்றேன். எனது இவ்விரு கடிதங்களையும் ஒவ்வொருவரும் படித்து உண்மையை அறிய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். எனக்குத் தெரிந்த, எதையும் மிகைப்படுத்தாது, உண்மையான விடயங்களையே குறிப்பிட்டு மிக அவதானமாக எழுதப்பட்ட கடிதங்கள் அவை.
நீண்ட காலமாக இருந்து வரும் எமது இனப்பிரச்சினை அரை நூற்றாண்டை தாண்டிவிட்டது. நாம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணமுயற்சிக்கின்றோமா அல்லது மேலும் மேலும் சிக்கலை உருவாக்குகின்றோமா? என்ற கேள்வி பலர் மத்தியில், குறிப்பாக சர்வதேச சமூகத்தின்; மத்தியில் எழுப்பப்படுகின்றது. இன்று எம்மத்தியில் பல திறமையான பல்வேறு, தற்கால அரசியல் சாசனங்கள் பற்றி அறிந்துள்ள, நம்நாட்டுக்கு பொருந்தக் கூடிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் திறைமைசாலிகள் நம் மத்தியில் உள்ளனர். அவர்களுக்கு உதவ பல புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் உள்ளனர். ஆனால், இவர்களால் எவ்வளவு தூரம் எமக்கு உதவ முடியும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். சட்ட வல்லுனர்களையும் அனுபவம் வாய்ந்த அரசியல் யாப்பு சட்டத்தரணிகளையும் கொண்ட நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட, சிறுபான்மையினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு திட்ட நகல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு ஏற்புடையதாயிருந்தும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு காரணத்தால் எதிர்பாராத வகையில் நிராகரிக்கப்பட்டது. அந்நகலை ஏற்கும்படி வேண்டப்பட்டிருந்தால் நிலைமை முற்றுமுழுதாக மாறியிருக்கும். ஆனால், வேறு தலையீடுகள் இருந்தால் அத்தீர்வு பயனற்றதாகிவிடும். ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்பது போல கண்ணியமான கௌரவம் மிக்கவர்கள் மீது நாம் பூரண நம்பிக்கை வைத்து அவர்களுடைய தீர்வு திட்டத்தை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும். நாட்டின் நலனே அவர்களது சிந்தனையில் முதலிடம் வகிக்கின்றது. நாம் சோல்பரி அரசியல் சாசனத்தை ஏற்கவில்லையா? நிபுணர்களுடைய அறிக்கையை பரிசீலிகும் வாய்பு கூட எமக்கு கொடுக்கப்படாதது துரதிஸ்டமானதே. இந்த குழு எதற்காக உருவாக்கப்பட்டது? அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பரிசீலிக்க முடியாவிட்டால் அந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டது என்பதே எனது கேள்வியாகும்.

நாம் இழந்த இன்னொரு சந்தர்ப்பம் இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் மிகச்சிறந்த தீர்வாக கணிக்கப்பட்ட, 1995 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வாகும். பலர் அதை ஏற்றுக்கொண்டனர். அத்தீர்வு ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தால் பெறுமதி மிக்க பெருந்தொகையான சொத்துக்கள் 10 - 12 ஆண்டுகால யுத்தத்திற்கு செலவிடப்பட்ட பொருந்தொகை பணம், யுத்தமுனையில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிகள் அத்தனையையும் காப்பாற்றியிருக்க முடியும். இன்று விதவைகளாக வாழும் பெண்கள் தமது கணவன்மாருடனம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடனும் சந்தோசமாக வாழ்ந்திருப்பர். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட உயிர்சேதம் பொருட்சேதத்திற்கு யார் பொறுப்பாளி?

ஆகவே, இன்று தேவைப்படுவது ஒரு நிபுணர் குழுவே. பிரச்சனை உருவாகிய காலத்தில் இருந்த பிரச்சனைகளை அன்றைய சிறுபான்மை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப ஓர் தீர்வை முன்வைக்க வேண்டும். பிரச்சினை ஆரம்பித்து 50 ஆண்டு காலமாகியும் அந்த நேரத்தில் இருந்த குறைபாடுகள் தீர்க்கப்படவில்லை, தீர்வுக்கு ஏற்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று இந்த பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்களி;ல் அனேகர் அன்றிருந்த பிரச்சினைபற்றி முழுக்க அறியாதவர்களே. உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணாது பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கி தமது திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றனர்.

புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க, ஒரு நிபுணரை நாடு இப்போது தேடவில்லை. எமக்கு வேண்டியது புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளோடு 50 வருடமாக மாற்றப்படாதிருந்த ஒரு பயங்கர நோயை குணப்படு;;த்த ஒரு விசேட வைத்தியரே! 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் தீர்வு காண சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமையால் மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. 1957 ஜுலை 27 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பன்டா செல்வா ஒப்பந்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைந்தது. ஆனால் சிலரை திருப்திப்படுத்துவதற்காக துரதிஸ்டவசமாக அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. எட்டு ஆண்டுகளின் பின் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 4 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உதவியோடு ஆட்சிபுரிந்தும், தீர்வு ஏற்படுத்தாது, ஒப்பந்தம் 1969 ம் ஆண்டு கிழித்தெறியப்பட்டது. பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்களில் வழங்கப்பட்டிருந்த சில ஏற்பாடுகள் பொருத்தமாகவும், முக்கியமானவையாகவும் இருப்பதால் அவற்றில் சில பகுதிகள் புதிய பிரேரணைகளை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுடைய நன்மை கருதி கீழே தரப்படுகின்றது

எமக்கு தேவைப்படுவது 1957 ஆம் ஆண்டு இருந்த பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வே. இரு பிரதான அரசியல் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் காலை வாரிவிட்டு நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை எவ்வாறு ஏற்படுத்தினர் என்பதையும் அதனாலேயே 70 ஆயிரம் பேரின் உயிர்களையும், பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் நாடு இழந்தது என்பதையும் இளந்தலைமுறையினர் அறியவேண்டும். எமது நாடு இழந்த கௌரவத்தை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து மீளப்பெற வேண்டும். ஏனென்றால் விடுதலைப் புலிகளின் பொய் பிரசாரங்களால் நிலமை மேலும் மோசமடைந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது இதற்கு சான்று பகர்கின்றது.
பண்டா செல்வா ஒப்பந்தம்

ய) பகுதி 10: கலந்துரையாடலின் பின் உருவாக்கப்பட இருகின்ற சட்டம் தமிழ் மொழியை இலங்கை தேசிய சிறுபான்மையினரின் மொழியாக அங்கீகரிப்பது என்றும் பிரதமரால் குறிப்பிடப்பட்டது. 4 விடயங்களில், தனிச்சிங்களச் சட்டத்திற்கு பாதகம் ஏற்படாத வகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழையே நிர்வாக மொழியாக உள்ளடக்க வேண்டும் என்றும், வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசாத சிறுபான்மையினருக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஓப்புக்கொள்ளப்பட்டது.
டி) 1. உருவாக்கப்பட இருக்கும் சட்டத்தின் அட்டவணையில் பிரதேசங்கள் எவையென விளக்கப்பட வேண்டும.;
2. வடமாகாணம் ஒரு தனிப்பிரதேசமாக அமைய வேண்டும் என்றும் கிழக்கு மாகாணம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்களாக பிரிக்கப்படவேண்டும்.
3. சட்டத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் மாகாண எல்லையை கடந்து இணையலாம். அத்தோடு ஒரு பிரதேசம் பிரிக்கப்படுமாயிருந்தால் பாராளுமன்ற அங்கீகாரம் வேண்டும். மேலும் விசேட காரணங்களுக்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் இணையலாம்.

டட்லி செல்வா ஒப்பந்தம் - மார்ச் 24, 1965


1. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ்; நிர்வாக மொழியாக்கவும் பதிவேடுகளை பேணுவதற்கான மொழியாக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமி;ழ் பேசும் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அரசுடன் தமிழ் மொழி மூலம் கருமமாற்றலாம் என சேனநாயக்கா அவர்கள் விளக்கினார்.
2. தமது கொள்கை நீதிமன்ற மொழிச் சட்டத்தை மாற்றி வடகிழக்கு மாகாண நீதிமன்றங்கள் தமிழில் செயற்படவும் பதிவேடுகள் தமிழில் பதிவு செய்யவும் மாற்றம் செய்வதாக கூறினார்.
3. மாவட்ட சபைகள் அமைப்பதாகவும் இரு தலைவர்களும் சம்மதித்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அமைக்கப்படும் சபைகளுக்கு, தேசிய நலன் கருதி அரசு வழிநடத்தலாம் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. .

நாட்டின் தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசபக்தனாக இருந்தே நோக்குகின்றேன். நான் இலங்கையன் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன். மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு சமூகத்தில் ஒருவர் பிறப்பது தற்செயலாக நடக்கும் சம்பவம் என ஒத்துக்கொள்வர். அண்மையில் ஒரு சிங்கள பெற்றோருக்கு பிறந்த ஒரு மாணவன் திடீரென தமிழ் பேச ஆரம்பித்து தான் முற்பிறப்பில் தமிழராக இருந்ததாக கூறினார். பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் இக்கடிதத்தில் கூறப்படுவதன் நோக்கம் அதிகாரப் பகிர்வு, அதிகாரஅலகு, பிரதேசங்களின் இணைப்பு போன்றவை புதியவிடயம் அல்ல என்பதை நாட்டுக்கு தெரியவைக்கவே. அவை பிரபல தலைவர்களாகிய அமரர்கள் எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்கா போன்றோரால் முன்வைக்கப்பட்ட 40 – 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். 13 வது திருத்தம் நவம்பர் 14 1987 உதயமாகிய சட்டமாகும்.

திரு பண்டாரநாயக்கா அவர்களுடைய பிரேரணை, பிரதேசங்கள் மாகாண எல்லைகளை தாண்டி வேறு பிரதேசங்கள் இணைவதற்கும், கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்களாக பிரிப்பதற்கும் வழிவகுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும், சமஸ்டி முறையே இலங்கைக்கு சிறந்தது என்று கூறியவரும் அவரே. நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் அவ்வாறு கூறியிருந்தார். இத்தகைய சில முன்மொழிவுகள் சிலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்கும் அல்ல. இந்த விடயங்களை அறிந்துள்ளவர்கள் மற்றவர்களை குழப்பாதிருப்பதே சிறந்ததாகும். அதுவே அவர்கள் மறைந்த பண்டாரநாயக்கா போன்ற தலைவர்களுக்கு கொடுக்கக் கூடிய கௌரவமுமாகும்

பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றை நிறைவேற்றாது மாறி மாறி ஆட்சிபீடமேறிய அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் சிறுபான்மையினரை புறக்கணித்துவிட்டன என்பதை ஒருவரும் உணராதிருக்க முடியாது. இவ்வொப்பந்தங்கள் இரு பிரதமர்களால் செய்யப்பட்டவை. திரு செல்வநாயகம் அவர்களோடு இவ்வொப்பந்தத்தை செய்துகொண்ட இக்கனவான்கள் சில காலம் உயிரிழக்காதிருந்திருந்தால் தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றியிருப்பார்கள். 1970 ம் ஆண்டு 2ஃ3 அதிகப்படி வாக்குகளோடு ஆட்சியை கைப்பற்றிய மக்கள் கூட்டணி 72 ஆம் ஆண்டு ஒரு குடியரசு அரசியல் சாசனத்தை உருவாக்கி சிறுபான்மையினரின் நிலைமையை மேலும் மோசமடையச்செய்தது. சோல்பரி சாசனத்தில் இருந்த மேற்சபை, பிறிவி; கவுன்சில் மேன்முறையீடு, பிரிவு 29 - போன்ற சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகள் புதிய அரசியல் சாசனத்தில் இடம்பெறவில்லை. எனது அபிப்பிராயப்படி இந்த ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானிய அரசு தலையிட்டிருந்தால், ஓரளவிற்கு அத் தலையீட்டை நியாயப்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் சோல்பரி அரசியல் சாசனம் அமுல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வேளை, அவர்களை பாதுகாக்கின்ற தார்மீக உரிமை அவர்களுக்கிருந்தது. தமிழ் பேசும் மக்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருப்பின் அதை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து என்றாயினும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கலாம். தமிழ் பேசும் மக்கள் சிங்கள மக்களோடு இணைந்து ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்பினார்கள் என்பதை சிங்கள மக்கள் பாராட்டவேண்டும். அவர்கள் நாட்டுப் பிரிவினையிலோ, ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்ட்ட சிறுபான்மையினருக்கு 50 வீத பிரதிநிதித்துவத்திலோ அக்கறை காட்டவில்லை. கடந்தகால அரசுகள் புத்திசாலித்தனமாக நடந்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்காது என்பது மட்டுமல்ல திரு பிரபாகரனும், எல்.ரி.ரி.ஈ யும் அனாமதேயங்களாக ஆகியிருப்பார்கள்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆணைபெற்று 4ஃ5 ஆசனங்களோடு 1977 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுடைய இராஜிநாமா கடிதங்களை கையில் வைத்திருந்தும், இனப்பிரச்சனை தீர்வுக்கு மாவட்ட அபிவிருத்தி சபைகளையே வழங்க முன்வந்தார். அபிவிருத்தி என்ற சொல்லை கைவிட்டு மாவட்ட சபை என்று அழைக்கக் கூட அவர் மறுத்துவிட்டார். திரு.ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்களது முயற்சியும் தோல்விகண்டது. ஏனெனில், இனப்பிரச்சினை தீர்வில் அவர் பெரிய அக்கறை காட்டவில்லை என்பது அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து நிரூபணமாகின்றது. அரசியல் சாசனத்தில் 6வது திருத்தத்தின் மூலம் மிதவாதிகளிடமிருந்த தமிழர் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார். இதில் வேடிக்கை என்னவெனில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் சமஸ்டியே இனப்பிரச்சினைக்கு முறையான தீர்வாக அமையும் என கூறிச் சென்றார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கத் தவறியமையால் தமிழர்களும், இஸ்லாமியர்களும், விடுதலைப் புலிகளின் தயவில் வாழவேண்டி ஏற்பட்டது. நிலைமையை பிரபாகரனும் அவருடைய சகாக்களும் தமக்கு சாதகமாக பாவித்துக்கொண்டனர். தமது துப்பாக்கி பலத்தை பிரயோகித்து, அச்சுறுத்தி, மிரட்டி படிப்படியாக தமிழ் மக்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களுடைய ஜனநாயக உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பறித்தெடுத்ததோடு, மனித உரிமை மீறல்களிலும் கடுமையாக ஈடுபட்டனர். தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் “எண்ணை சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த” கதையாகும்.

ஜுன் மாதம் 22ம் திகதி திரு பிரபாகரனுக்கு எழுதப்பட்ட கடிதம் இன்று வெளியிடப்படுகின்றது. முன்னைய கடிதங்களில் குறிப்பிடப்படாத பல விடயங்கள் பற்றி எழுதியமையால் அது நீண்ட கடிதமாக அமைந்துவிட்டது. முன்னைநாள் மேயரும் யாழ் எம்பியுமாக இருந்த அல்பிரட் துரையப்பா கொலை தொடக்கம் அவருடைய சாதனைகளை திரும்பிப்பார்த்து, அவருடைய கண்களைத் திறக்கும் நோக்குடன் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி பட்டியல் போட்டுக்காட்டியுள்ளேன். அவருக்கு இரக்கம் இருந்தால் கண்ணீர்வி;ட்டு அழட்டும். தன்னுடைய கொடிய செயல்களை கைவிட்டு இதுவரை காலமும் செய்தவற்றை எண்ணி வருந்தி புதிய பாதையில் செல்லுமாறு கேட்டுள்ளேன். நாட்டு பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை மேலும் சிக்கலடைந்த பின் ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வை ஏற்குமாறு நான் அவரை கேட்க மாட்டேன். இக்காரணத்தினாலேயே சமஸ்டி என்றோ ஒற்றையாட்சி என்றோ விபரிக்கப்படாத இந்திய ஆட்சிமுறையிலான ஒரு தீர்வை ஏற்குமாறு நான் பிரச்சாரம் செய்து வருகின்றேன. மேலும் எமது மக்களில் சிலர் ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி ஆகியபதங்களில் வெறுப்பு கொண்டுள்ளமையல் நான் அவ்வாறு கூறியுள்ளேன். “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையிலேயே தமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதென இந்தியர்கள் பெருமையாக கூறுவார்கள். கடந்த 3 ஆண்டு காலமாக நம்நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய பலரை உள்ளுரிலும் வெளிநாட்டிலும் சந்தித்து இந்திய முறையிலான அரசியல் சாசனமே எம் நாட்டுக்கு பொருத்தமானதென கூறி வந்துள்ளேன். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் அதிகப்படியான மக்கள் இந்துக்களாக இருந்தபோதும் பெரிதாக மதிக்கப்படும் கண்ணியம் மிக்க ஒரு இஸ்லாமியர் அந்நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றார். நிச்சயமாக அதுபோன்று எம் நாட்டில் நடைபெறாது என்பதை கூறும் அதேவேளை அப்பேற்பட்டநிலமை எதிர்காலத்தில் எமது நாட்டிலும் உருவாக வேண்டும். காலத்துக்கு காலம் இந்தியா அயலிலுள்ள இஸ்லாமிய நாடுகளுடனும், உள்ளுரில் காஸ்மீர் போன்ற பகுதிகளில் சில இஸ்லாமியர்களுடனும் பிரச்சினைப்படுவதை நாம் அறிந்துள்ளோம். இருப்பினும் ஓர் இஸ்லாமியரே ஜனாதிபதியாக பதவிவகிக்கின்றார். இந்தியாவில் சீக்கிய மக்கள் இரண்டு வீதத்தினரே இருந்தபோம் மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியரான கலாநிதி மன்மோகன் சிங் அந்நாட்டு பிரதம மத்திரிப்பதவியை வகிக்கின்றார். முன்னைய பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்களுடைய வெளிநாட்டு மருமகள் ஆழுங்கூட்டணியின் தலைவியாக பதவி வகிக்கின்றார். சிங்களவர்கள் அல்லாதோர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று கூறும் ஒரு சிலர் வாழும் இந்நாட்டில் இப்பேற்பட்ட நிலமை சாத்தியமாகுமா? இந்தியாவிடமிருந்து நாம் படிக்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.

எனது கூற்றுக்கு ஆதாரமாக இன்னும் பல உதாரணங்கள் இருப்பினும் சிலருக்கு சங்கடமான நிலையை உருவாக்கக் கூடும் என்பதால் அவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை. மேலும் சிங்கள, தமிழ் மக்களினதும் மொழிகள், மதம், கலாச்சாரம் என்பன இந்தியாவிலிருந்து வந்தன. ஓரளவிற்கு இஸ்லாமியர்களுக்கும் இது பொருந்தும். எமது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை யாரும் இதுவரை மறுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுப்பிரிவினையை ஒரு போதும் இந்தியா ஏற்காதென்பதையும், அதை வற்புறுத்தி எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எவர் பிரதமர் பதவியை வகித்தாலும், இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தத் தவறவில்லை. மேலும் இந்தியாவில் பிரிவினைக்கோசம் 50 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த போதும் பண்டிட் நோருஜி இறப்பதற்கு முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இன்று அதுபற்றி யாரும் பேசுவதில்லை. எந்தவகையான பிரிவினையையும் அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவின் மாணவர்கள் அரச மொழியை விரும்பி கற்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் நிர்வாக மொழியும் இணைப்பு மொழியும் உண்டு. தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்டவுடன் சகலரும் அதில் இணைந்துகொள்கிறார்கள். தமது தேசியக் கொடியை மிக மதிப்போடு ஒரு புனிதமான பொருளாக கருதுகின்றார்கள். இந்திய தொலைக்காட்சியில் நான் ஒரு காட்சியை கண்டேன். ஓர் பிச்சைக்காரி, அவ்வேசத்தில் நடித்தவர் இந்திய உயர் பொலிஸ் அதிகாரி கிரன்பேடி என எண்ணுகின்றேன், வீதியால் போகும் போது குப்பைத் தொட்டியிலிருந்து கிழிந்த ஒரு தேசியக்கொடியை எடுக்கின்றார். கண்ணாலே கண்ணீர் சிந்த தன் உடையில் ஒர் பகுதியை கிழித்தெடுத்து கிழிசலை தைத்துக்கொள்கிறார். அரைமணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி பல்வேறுபட்டவர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் கண்ணீரோடு தெரிவிக்கப்பட்டன. அரச நிகழ்வுகள் தவிர்த்து வேறு வைபவங்களில் இலங்கையராகிய நாங்கள் தேசியக் கொடியை பெரிதாக மதிப்பதில்லை. நான் யாரையும் நோகடித்திருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும. மனத்திருப்தியுடன் வாழும் ஒருசமுதாயத்திடமே தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்கும் மனப்பாண்மை வருமேயன்றி பலாத்காரத்தின் மூலம் ஏற்படுத்த முடியாது.

இந்தியா ஏன் அப்படியும் நாம் இப்படியும் இருக்கின்றோம்? வறுமை, பாரபட்சம், நிலப்பற்றாக்குறை, உறைவிடமின்மை போன்ற பல பிரச்சினைகள் இந்தியாவில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மக்களும் மனத்திருப்தியோடு ஒன்றுபட்ட இந்தியப்பிரஜைகளாக வாழ்ந்துகொண்டு ஏனைய பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித்தீர்த்துக் கௌகின்றனர்.

50 ஆண்டு காலமாக முத்திப்போன கான்சர் நோயை ஒத்த எமது பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை எமது மக்கள் மனத் திருப்தியுடன் சந்தோஷமாக வாழமாட்டார்கள். ஒருவருக்கு நன்மை செய்யாது தீங்கு விளைவிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுதல் செய்பவர்கள் உலகிலேயே எமது நாட்டில் மட்டும் இருப்பது ஆச்சரியமே. 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு கோரி கண்டி தலதாமாளிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை இதற்கொரு சிறந்த உதாரணமாகும்.

பண்டா செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டிருப்பின் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்களும் பல கோடி பெறுமதியான அரச தனியார் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களும். சொத்துக்களும் இழக்கப்படக் காரணமான “கறுப்பு யூலை” என்று அழைக்கப்படுகின்ற 1983 ஆம் ஆண்டு கலவரத்தையும் தவிர்த்திருக்க முடியும். 70 ஆயிரம் பேரின் உயிரை குடித்த இந்த யுத்தத்தையும் தடுத்திருக்கலாம். பெருந்தொகையான விதவைகளும், அனாதைகளும் உருவாகியிருக்க மாட்டார்கள். இந்த இழப்புக்களுக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? துரதிஸ்டமான இம்மரணங்களுக்கும், சொத்தழிவுகளுக்கும், இதேபோன்ற எதிர்கால நிகழ்வுகளுக்கும் எமது நாட்டில் உள்ள சில சுயநலம்கொண்ட அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அரசியலில் நான் ஒரு சிறு மீன் குஞ்சு. ஆனால், பிரபாகரனுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்திருந்தால் மோசடி மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 பாhளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவராக பதவியேற்று உறுப்பினருக்குரிய சகல உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்திருப்பேன். இவற்றை உதாசீனம் செய்தது பற்றி எனக்கு மனவருத்தமில்லை. ஏனெனில், நான் இந்நாட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கின்றேன். இதை செய்ய முடியாதவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்பது மட்டுமல்ல அரசியலைவிட்டு ஒதுகங்கவும் வேண்டும்.

பல்வேறு கட்டுரைகளில் வாராவாரம் எனது பெயர் குறிப்பிடப்படுவதை நான் அவதானித்துள்ளேன். நான் அரசியல் கற்றவன். சட்டத்தரணியாக இருப்பதோடு அரசியல் சட்டம் பற்றியும் கற்றுள்ளேன். எமது நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தற்கால உலகில் எமது நாட்டுக்கு பொருந்தக் கூடிய பல அரசியல் யாப்புகள் உண்டு. தென் ஆபிரிக்காவின் யாப்பு மிகப்புதியது. சுவிஸ், கனடா ஆகிய நாடுகளின் யாப்புக்கள் மிகச்சிறந்தவை. அனேக யாப்புகளில் சிறந்த அம்சங்கள் பல உண்டு. மாவட்ட ரீதியான அதிகாரப்பகிர்வு மிக நல்லது. அதே போன்று காந்தீய அடிப்படையில் உருவாகும் பஞ்சாயத்து முறை எனக்கு மிக விருப்பமானதே. ஆனால், எமக்கு இன்று வேண்டியது எமது நோய்க்குரிய மருந்தே. பல்வேறு அரசியல் யாப்புக்களில் உள்ள நல்ல அம்சங்கள் தேவையை பொறுத்து பின்பு சேர்த்துக்கொள்ளலாம். 20 மைல் நீளங்கொண்ட பாக்குத்தெடுவாய் அயல்நாடாகிய இந்தியாவிடமிருந்து எம்மை பிரிக்கின்றது. கடலுக்கு அப்பால் 600 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தலயாத்திரை உட்பட வேறு பல காரணங்ளுக்காக தினமும் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் செல்கின்றனர். பௌத்த யாத்திரிகர்களுக்கென சென்னையில் மகாபோதி சபையின் ஓர் கிளை உண்டு. அங்கே சிங்கள யாத்திரீகர்கள் வரவேற்கப்படுகின்றார்கள். பௌத்தசமயம் ஒருகாலத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த தமிழ் நாட்டில், பல்வேறு பணிகளுக்கு இடமுண்டு. தமிழ் பௌத்த குருமார் பல ஆண்டுகளுக்கு முன்பு சமயப்பணிக்காக வந்து போயுள்ளனர். யார் எதை செய்யவில்லை என்று நான் குறை கூறவில்லை. ஆனால், சிறந்த ஒரு கத்தோhலிக்கராக இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் வைத்தியகலாநிதி ஜெயலத் ஜயவர்தனா அவர்கள் தமிழ் நாட்டில் பௌத்த சமயத்தை வளர்க்க அரும்பாடுபட்டுவருகின்றார். அவருக்கு நான் தலைவணங்குகின்றேன். மூன்று விகாரைகள் அமைப்பதற்கு உரிய இடத்தை அவர் பெற்றுள்ளார். தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் மிக உயரமான பௌத்தர் சிலை உண்டு. பௌத்த சமயத்தை வளர்ப்பதாக கூறிக்கொள்ளும் ஒருவர் இலங்கை சிங்கள பெத்தர்களுக்கே உரியதென்றும் ஏனையோர் இந்திய சென்றுவிடவேண்டும் என்றும் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் எவருக்கேனும். சரித்திரமோ, பூமிசாத்திரமோ போதித்து ஒரு சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. 20 மைல் நீந்தி பாக்கு தொடுவாயை கடப்பது ஒருவருக்கு பெரிய கஸ்டமான காரியமில்லை. அண்மையில் கூட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள கால்வாயை பலர் நீந்திக்கடந்துள்ளனர். கடந்த காலத்தில் இரண்டு மணி நேரத்தில் கட்டுமரத்தில் இப் பிரயாணத்தை செய்ய முடியும். அவ்வாறு சிலர் மீன் பிடிக்க வந்திருக்கலாம், அல்லது குற்றம் செய்துவிட்டு தப்பியோடி வந்திருக்கலாம், அல்லது காற்றின் வேகத்தில் தள்ளப்பட்டு வந்திருக்கலாம். இந்த கட்டத்தில் இத்தகைய விவாதங்கள் அவசியமா? தமிழர்கள் பேத்துக்கீசரால் புகையிலைச் செய்கைக்கென கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் என ஒருவர் கூறக் கேட்டேன். கேரளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிலை நடவோ, புல் நடவோ ஒருவர் வருவதற்கு போத்துக்கீசர்கள் வழிகாட்டத் தேவையில்லை. இது ஒரு பொறுக்க முடியாத மனத்தை நோகடிக்கும் கூற்றாகும். தமது வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் சரித்திரத்தோடு விளையாடக் கூடாது.

இன்று எமக்கு வேண்டியதெல்லாம் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் சொல்ல முடியாத துன்பங்களை நேரடியாக அனுபவிக்கின்ற ஒரு சாராரையும், மறைமுகமாக பாதிக்கப்பட்ட மறுசாராரையும், அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதே. எது எப்படி இருப்பினும் இருசாராருக்கும் ஏற்பட்ட மரணம், அழிவு, சொத்து .இழப்புக்கள் தாங்கமுடியாதவை. இரு சிங்கள போர் வீரர்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை தீவைத்து கொழுத்தினர். ஆனால், படித்த தமிழர்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான சிறு நுலகங்களை அழித்தவர்கள் யார்? மற்றவர்கள் தமிழர்களை இன அழிப்பு செய்கிறார்களென விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளால் நேரடியாக கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அரச படைகளால் செய்யப்பட்ட கொலைகளை விட பலமடங்கு அதிகம். போரில் சம்பந்தப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்படவில்லை. அதே போல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை, போரில் சம்பந்தப்பட்டவர்கள் புற நீங்கலாக, மிகப்பெரிய அளவாகும். விடுதலைப் புலிகளால் சிங்கள மக்களுக்கு செய்யப்பட்ட கொரூர செயல்களுக்கு சாதாரணமான தமிழ் மக்கள் மீது குற்றம் காண முடியாது. அச்செயல்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட மிருகத்தனமான பயிற்சி அளிக்கப்பட்டவர்களின் செயல் என்பதை அவர்கள் நன்கு அறிவர். இக்கூற்றை யாரும் நிராகரிக்க முடியாது.

பிறர் புக முடியாத புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெறும் கொரூரமான செயற்பாடுகள் பற்றி நான் பல தடவை முறைப்பட்டுள்ளேன். பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டு போர் பயிற்சி பெற்றுவரும் துர்ப்பாக்கியவான்களாகிய இவ்விளைஞர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் புகுந்து ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் விடுவிக்க முடியாதா? மனித உரிமை மீறல்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுந்தான் கண்காணிக்கப்படுகின்றதா? பெருமளவில் இடம்பெறும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கண்காணிக்கப்படுவதில்லையா?

பிரபாகரன் எவ்வாறு தமிழ் மக்களை பலவழிகளிலும் பாதிப்படையச் செய்து ஓட்டாண்டிகளாக்கியுள்ளார் என்பதை விபரமாக அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். தமிழ் மக்களுடைய இக்கட்டான நிலமையை அறிந்து, சிங்கள சகோதரர்கள் அவர்கள் மீது அனுதாபப்பட்டு அவர்களுடைய துன்பத்தை தீர்க்க, சர்வதேச சமூகம் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை தர முன்வராவிட்டால் அவர்கள் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து தமிழர்களை முற்றாக அழித்து ஒரு வித கஷ்டமுமின்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். இதைத்தான் சிலர் விரும்புகின்றார்கள் போலும்.

எனது இந்திய முறையிலான தீர்வு ஆலோசனையை பல கட்டுரைகளிலும் ஆசிரிய தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்ததை நான் அவதானித்துள்ளேன். இந்த நிலைப்பாட்டை பல தடவை நான் வெளிப்படுத்தியுள்ளேன். பல்வேறு சட்ட நுணுக்கங்களை நன்கறிவேன். இது சம்பந்தமாக மாட்சிமை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய போது, இரு தீர்வுத்திட்டங்களை முன்வைத்து அதில் ஒன்று இந்திய முறையிலானதாகவும் மற்றொன்று இந்திய முறையிலும் பார்க்க கூடிய அதிகாரங்கள் கொண்டதாகவும். முன்வைக்கப்பட்டால் இந்திய முறையிலான தீர்வையே நான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தேன். அதற்குரிய காரணம் மக்களை இலகுவாக ஏற்றுக்கொள்ள வைக்க முடீயும் என்பதோடு அத்தகைய தீர்வு எமது தேவைகளுக்கு ஏற்றதாக அமையும். மேலும், சில விடுதலைப்புலிகள் சார்பான தலைவர்களின் கூற்றுக்களால் தமிழ் நாட்டில் குழப்பமடைந்திருக்கும் 600 இலட்சம் தமிழ் மக்களை ஏற்கவைக்கக் கூடியதிட்டமாகவும் அமையும். பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் அரசியல் சாசனத்தின் சாயல் இந்திய அரசியல் சாசனத்திலும் உண்டு. 25 ஆண்டு காலமாக இலங்கையில் அமுலில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பிலும் இருந்தது. இன்று அனேக அரசியல் யாப்புக்களில் பிரித்தானிய அரசியல் சாசனத்தின் சாயல் தென்படுகின்றது. ஆகவே இந்திய முறையிலான யாப்பை அமைப்பது தப்பாகாது.
அண்மையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருந்த சில சம்பவங்களிலிருந்து இந்தியாதான் இலங்கையை காப்பாற்றியுள்ளது. இந்திய கடற்படையினர் விரைவாக எடுத்த நடவடிக்கையும், தமிழ் நாட்டு பெலிஸாரின் துரிதநடவடிக்கையும் இலங்கையை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியது. நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தியா பற்றிய விமர்சனங்களில் மிகக் கவனமாக செயற்பட வேண்டும். வெளிநாடுகளில் அரசுக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசின் பிரச்சாரம் ஈடுகொடுக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்தால் நாம் அவர்கள் மீது குறை கூற முடியாது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் உட்பட வடகிழக்கிற்கு பிரித்தானிய, இந்திய பாராளுமன்ற குழுக்கள் பார்வையிட அழைப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?

விடுதலைப் புலிகளின் இரும்புத் திரைக்குப் பின்னால் நடைபெறும் சம்பவங்களை அம்பலப்படுத்த அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாம்களிலும், இருட்டறைகளிலும் சித்திரவதை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை என்ன? ஆள்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையில் இணைத்தல் போன்ற விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்த விபரம் சர்வதேச சமூகத்தினரிடம் உண்டா? அவர்களுடைய பிரதேசத்தில் பிள்ளைகள் பகல் வேளைகளில் காடுகளில் வசிப்பதையும் இரவு வீடு திரும்பும் போது விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்படுவதை சர்வதேச சமூகம் அறியுமா? புலிகளால் பிடிக்கப்படும் பிள்ளைகளின் பெற்றோர் தமது ஆட்சேபனையை தெரிவிக்கும் வேளை கடுமையாகத் தாக்கப்படுவதும். தம் முயற்சியில் தோல்விகண்ட பெற்றோர் சிலர் தற்கொலை செய்த சம்பவங்களையும் சர்வதேச சமூகம் அறியுமா?

வேறு யாரும் புக முடியாத விடுதலைப் பலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதப்படைக்குச் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையை யாராவது அறிவார்களா? அரச படைகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பின் அவர்களின் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையதே. ஆனால், பல ஆண்டு காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஏற்படும் பல மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு? இது பற்றி சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களோ உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களோ பேசுவது கிடையாது.

சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை முன்வைப்பதோ அல்லது என்னால் ஆலோசனை வழங்கப்பட்ட இந்திய முறையிலான தீர்வை முன்வைப்பதோ அரசுக்குள்ள ஒரேயொரு வழி. விடுதலைப்புலிகளை ஓரங்கட்டக் கூடிய மீண்டும் எதிர் காலத்தில் புதிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியமற்ற ஒரு நிரந்தரத் தீர்வாகவே அரசு முன்வைக்கும் தீர்வு அமைய வேண்டும். ஒஸ்லோ உடன்பாட்டின் படி சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே அரசு முன்வைக்க கடமைப்பட்டுள்ளது. இந்திய முறையிலான தீர்வைத்தவிர வேறு எந்த முறையிலான தீர்வை முன்வைத்தாலும் அது சர்வதேச சமூகத்திற்கு திருப்தியளிக்காது. தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒரு நியாயமான தீர்வை விடுதலைப்புலிகளை ஏற்க வைப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படும்.

இந்தநாடு பிளவுபடக் கூடாதென்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயமாகும். அந்த நிபந்தனைக்கு அமைய இன மத வேறுபாடின்றி ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் எல்லாரும் வாழவேண்டும் என்பதே அனைவரின் ஒன்றுபட்ட கருத்துமாகும்.

எவரேனும் எத்தகைய பாகுபாட்டை திணிக்க முயற்சித்தாலும் அம்முயற்சி என்றும் சமாதானத்தை கொண்டுவர உதவாது.


அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி

தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி