திருமதி பெனாசிர் பூட்டோ

திருமதி பெனாசிர் பூட்டோ அவர்களின் மிருகத்தனமான படுகொலையை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இக்கொலை ஜனநாயகத்திற்கு திரும்பும் மகிழ்ச்சியுடன் காத்திருந்த பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ளது

மக்களை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இரத்த வெறி பிடித்த சிலர் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். கொடிய பயங்கரவாதிகளை விட அவர்களின் கொடிய நடவடிக்கைகளை மறைத்தும் பெருமைப்படுத்தியும் வருகின்றவர்களே பெனாசிருக்கு ஏற்பட்டதுபோல் தம் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் இக்கதி ஏற்படும் வரை காத்திருக்காது பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவ வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஒவ்வொருவரும் பயங்கரவாதத்தை கண்டீத்து அதை பூண்டோடு ஒழிக்க உதவ வேண்டும். எந்த ஒரு உயிரையும் எடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. உலகளாவிய ஊடகங்கள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிக்க திட சங்கல்பம் பூண்டு முன்னின்று உழைக்க வேண்டும்

தமிழர் விடுதலைக் கூட்டணி பெனாசிர் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதே வேளையில் பாதிஸ்தான் மக்களுக்கும் பயங்ககரவாதத்;தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றது.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.