இனிய பாரதி

வணக்கம், நான் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தாலும் எமது மக்களின் நலனிலும் தேசத்தின் பற்றுதலிலும் அக்கறை கொண்டவன் என்ற வகை யில் இம் மடலை எழுதுவதன் மூலம் எனது மனக்குமுறல்களையும் வேதனை களையும் வெளிப்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். அதுமட்டுமல்ல நீங்கள் பல விடயங்களைக் கற்றறிந் தவர் மூன்று பிள்ளைகளின் தாயர். தற்போது உங்களைப் பொதுப்பணிக ளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர் என்ப தும் மேலும் ஒரு காரணம் இம் மடலை உங்களுக்கு எழுதுவதற்கு.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி யான சூழல் எமக்கு கடந்தகால அனு பவங்கள், கடந்து வந்த பாதைகள் என்பவற்றை திரும்பிப் பார்க்கத் தூண்டு கின்றது. தமிழ் மக்களுக்கான விடுத லைப் போராட்டம் என்ற விடயத்தை எடுத்துப் பார்த்தால் 1987 ஆம் ஆண்டு வரை மட்டுமே அது இடம்பெற்றுள்ளது. அதன் பின்பு இடம்பெற்ற யுத்தம் அனைத்துமே விடுதலைப் புலிகளின் நலனைச் சார்ந்ததாகவே நாம் கருது கின்றோம். மக்களுக்கான போராட்டம் என்றால் அதில் மக்களின் நலன் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற் றுக்கொண்டிருக்கின்ற யுத்தம் தமிழ் மக்களின் எந்தவொரு நலனையும் சார்ந்திருக்கவில்லை. மாறாக விடுத லைப் புலிகளை இராணுவ ரீதியாக வளர்ப்பதற்கும், தனிப்பட்ட அமைப்பை வளர்ப்பதற்கான யுத்த நடவடிக்கை யாக அமைகின்றது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சமயம் புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட அமைப்புக்களும் ஜனநாய கப் பாதைக்குத் தாம் திரும்புவதாக அறிவித்திருந்தது. தலைவர் பிரபாகரன் சுதுமலையில் மக்கள் முன் முதன் முதலில் உரையாற்றியது அதற்கு சான்றாக அமைந்திருந்தது. அச் சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருந்தால் நாம் எவ்வளவோ உயிர் அழிவுகளைத் தவிர்த்திருக்க முடியும். அவ்வேளை யில் உயிரிழந்த போராளிகளின் எண் ணிக்கை (631) இந்திய அரசு இலங் கை அரசை எதிரிகளாகவும், தமிழரை நண்பர்களாகவும் பார்த்த காலம் அது. இந்திய அரசு எமது இனத்தின் நலன் சார்ந்து தமிழ் இனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எமது எல்லைப் பிரதேசங்களை பாதுகாக்கவும் அமை திப்படையாக எல்லைப் பிரதேசங்களில் நின்ற காலம் அது.

அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் சற்று நிதானத்தை யும் அமைதியையும் பேணி வறட்டுக் கௌரவம் இன்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் எத்தனையோ விலைமதிப்பற்ற உயி ர்களைப் பாதுகாத்திருக்க முடியும். நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், ஆயி ரக்கணக்கான மாற்றுக் கருத்துக் கொ ண்டவர்கள், இலட்சக்கணக்கான பொது மக்கள், கோடிக்கணக்கான சொத்துக் கள் என்பவற்றை இழந்திருக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தவறு நடந்து விட்டது ஏற்றுக் கொள்கிறோம்.

இந்திய- இலங்கை உடன்படிக் கையை ஏற்படுத்தக் காரணமாயிருந்த தலைவர்கள் அமிர்தலிங்கம், யோகே ஸ்வரன், போன்றோர்களை கொலை செய்தார்கள். அதுமட்டுமல்லாது உட ன்படிக்கையை செய்து கொண்ட பார தப் பிரதமர் ராஜீவ்காந்தியை தமிழ்நா ட்டில் வைத்து தற்கொலையாளி மூ லம் கொலை செய்தார்கள். பின்பு அது ஒரு துன்பியல் சம்பவம் என தங்களின் கணவர் 2001ம் ஆண்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார். அதனை நாமும் துன் பியல் சம்பவமாக ஏற்றுக் கொள்கின் றோம். அதன் பின்பு எமது இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண எமக்குக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் 1994ல் பொதுத் தேர்தலின் பின்பு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா பதவியேற்ற பின்பு 1995 இல் மேற் கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களினால் முன்மொழியப்பட்ட அரசியல் சாசன திருத்தத்திற்கான யோசனைகள் அடங்கிய தீர்வுப் பொதி. இந்தத் தீர்வு யோசனையை எடுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய அடிப்படை அம்சங்கள் அனைத்தையு மே கொண்டிருந்தது. இதை நான் மட்டும் கூறவில்லை. விடுதலைப் புலி களின் மதியுரைஞர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். காலம் கடந்த பின் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பத்தி ரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந் தார். இச் சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகளின் தலைமை தங்களுடைய ஆட்சி மோகத்தால் இழந்துள்ளமையை சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் காலக் கட்டத்தில் இத் தீர்வுத் திட்டத்தை வரைவதற்கு அரும்பாடுபட்ட பல நாடு களுக்கு குறிப்பாக தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசியல் சாச னம் வரைய முக்கிய பங்காற்றிய கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர் களை தற்கொலை குண்டுதாரி மூலம் கொலை செய்தார்கள். சரி அதையும் மறப்போம். தூரதிஷ்டவசமான சம்பவம் என ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் பிறகு இனப்பிரச்சினை விடயத்தில் பாரிய முன்னேற்றகரமாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன் தீர்வுக்கான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. நாம் அனைவரும் ஒன்றுபடக் கூறினோம். விடுதலை புலிகளுடன் மட்டும் பேசி எமது பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி. ஓப்பந்தத்தின் அரசியல் பணிக்காக கட்டம் கட்டமாக இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்கு நுழைந்தார்கள். அரசியல் பணிமனைகளையும் திறந் தார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தை களிலும் பங்குபற்றினார்கள். இதைப் பார்த்த தமிழ் மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ்க்கையை ஆரம்பிக் கலாம் என கனவுகள் கண்டார்கள். சமாதானக் காற்றை சுவாசிக்கத் தொ டங்கினர். எந்தவிதமான இன்னல்களோ தடைகளோ இன்றி நடமாடத் தொடங் கிய எமது மக்கள் சுமூகமான வாழ்க் கையை ஒரு சில ஆண்டுகள் வாழ்ந் தார்கள். இதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தங்களுடைய கணவர் சிறுபிள் ளைக்கு சோறூட்டும் போது தாய்மார் ~~நிலா நிலா|| ஓடி வா, நில்லாமல் ஓடி வா, மல்லிகைப் பூ கொண்டுவா|| என்று ஏமாற்றி சோறூட்டூவதைப் போல ~~புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், புலிகளின் தாகம், புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்|| என்று கூறுகின்றனர்.

அவருக்கே புரிந்திருக்கும் அது அடைவது கடினமென. அவர் எடுத்தக் காவடியை அவருடைய வாழ்நாளுக் குள் இறக்கி வைத்தால்தான் எமது சமூகத்திற்கோர் கௌரவமான வாழ்வு கிடைக்கும். அதனை அவர் உணர மறுத்தால் எமது சமுதாயம் ஒருவரை ஒருவர் அழித்து இவ்வளவு நாட்களும் எமது தமிழினம் செய்த தியாகங்கள் அனைத்தும் வீணடிக்கப்படும்.

வயோதிபர்களுக்கு நீங்கள் இல்லம் அமைப்பதை (அன்புச்சோலை) நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் வாழ வேண்டிய வயதில் தங்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு எமது மக்களின விடுதலைக்காகப் போராட வந்த பிஞ்சு உள்ளங்களுக்கு மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை அமைப்பதுதான் எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. போராட்டம் போராட்டம் என்று சிறார்களைக் கொ ன்று புதைக்காதீர்கள். சற்று அவர்க ளையும் அவர்களைப் பெற்ற பெற்றோ ரின் மனநிலைமையையும் எண்ணிப் பாருங்கள். அதுமட்டுமல்ல எத்தனை யோ இளம் குடும்பத்த தலைவர்களை துரோகிகள் என்று கண்மூடித்தனமாக கொலை செய்வதன் மூலம் எத்தனை யோ தமிழ்ப்பெண்கள் விதவைகளாக் கப்பட்டு ஆயிரக்கணக்கான பாலகர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவற் றைக் கண்டு உங்கள் மனம் வருந்த வில்லையா? நீங்களும் மூன்று பிள் ளைகளை பெற்றெடுத்த தாய்தானே. நடக்கக் கூடாத ஒரு சம்பவம் உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ நடந்தால் உங்களின் மனம் எவ்வளவு வேதனைபடும் என்ப தை சற்று சிந்தித்து பாருங்கள். அந்த வேதனையும் வலியும் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல லண்டனில் வெளிவந்த பத்திரிகை ஒன்றின் இதழ் ஒன்றையும் இணைத்து அனுப்புகின் றேன். அதில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பி னர் தி. மகேஸ்வரனின் மகள் கதறிய ழும் புகைப்படம் ஒன்று பிரசுரிக்கப் பட்டுள்ளது. அந்தக் காட்சியைப் பார் த்தாவது இந்தக் கொடிய யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வரவும்.

இந்த பிஞ்சுகள் செய்த பாவம்தான் என்ன? அவர்களின் வாழ்க்கையும், இனிவரும் ஒவ்வொரு புதுவருடப் பிறப் பும் துக்க தினமாகத்தான் உருவாக் கப்பட்டுள்ளது. ஏன் இந்தக் கொடுமை? இதுமட்டுமல்ல இது போன்ற பலர் இந்தக் கொலைகளை யார் செய்தார் கள் என்பதல்ல பிரச்சினை? இப்படி யான சம்பவங்களுக்கு காரணமாகவு ள்ள கொடிய யுத்தத்தையும் கொ லைக் கலாச்சாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை இப் புகைப்படங்கள் வேண்டி நிற்கின் றது. அண்மையில் கருத்து வெளியிட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு நடேசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் ~~தமிழ் மக்களை சிங்கள இராணுவத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கக்கூடிய சக் தியுடன் தாங்கள் இருப்பதாக. எமக்குப் புரியவில்லை, ஏற்கனவே எத்தனை யோ இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய கூற்றின்படி பார்த்தால் வன்னி பெரு நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் மட் டும்தான் தமழ் மக்களா?

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதே சங்களில் விடுதலைப் புலிகள் தாக்கு தல்களைத் தவிர்த்திருப்பார்களேயா னால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத் துக்களை வெளியிடுவதையும் ஏட்டிக் குப் போட்டியாக தாக்குதல் புரிவதா லும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடி யாது. எனவே தமிழ் மக்களின் மீதும் அவர்களின் நலன்கள் மீதும் உண்மை யான அக்கறை உங்களுக்கோ அல் லது விடுதலைப் புலிகளுக்கோ இருந் தால் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொண்டு இனப்பிரச்சனை க்கு தீர்வு காண முன் வர வேண்டும் என நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிN;றாம்.
நன்றி

வணக்கம்

இனிய பாரதி