வழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டிக்கின்றது

வழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டிக்கின்றது

தேசிய மீலாத் விழாவில் பங்கு பற்ற ஊர்வலமாக அழைத்துசெல்லப்பட்ட பிரதம விருந்தினரையும் ஏனைய விருந்தினர்களையும் தாக்கி 14 பேரை பலி எடுத்தும் 40 பேரை கடும் காயத்திற்கும் உள்ளாக்கிய சம்பவத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. தமது இரத்த வெறியை விடுதலைப் புலியினர் மேலும் ஒரு சம்பவத்தில் காட்டியுள்ளனர். மிகவும் விரக்தியடைந்த நிலையில் தமது கொடூரத்தை வெளிப்படுத்த கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றைத்தன்னும் நழுவ விட அவர்கள் தயார் இல்லை. தினம் தினம் தமது செல்வாக்கை இழந்து கொண்டு போகும் விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகமும் அவர்கள் மீதுள்ள நல்ல எண்ணத்தை மாற்றி வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு இருந்த அற்ப சொற்ப ஆதரவு கூட தற்போது அடிமட்டத்திற்கு போயுள்ளது. அரசியல் இன,மத பேதங்களை மறந்து விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிக்க இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். வேற்றுமைகளை மறந்து இதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்படவேண்டும்.

இச்சம்பவம் மேலும் ஓர் இனக் கலவரத்தைத் தூண்ட விடுதலைப் புலிகள் எடுக்கும் முயற்சியாகும். இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் இத்தகைய முயற்சிகளில் அவர்கள் தோல்வியே அடைவர். இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் விசேட செய்தியைவிட விரும்புகின்றேன். சிங்கள சகோதரர்களிடம் இருந்து நாம் கற்கணே;டிய விடயங்கள் உண்டு. மனிதன் பொறுமையின் விளிம்பை தாண்டி, இவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் கோபத்தை தூண்டுவதாகவே அமைகின்றன. இருப்பினும் நாம் பொறுமையை கடைப்பிடித்து, அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருத்தல் வேண்டும்.

பெறுமதி மிக்க பல உயிர்களை பலி கொடுத்தவர்களுக்கும், காயப்பட்டோரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். சிறிலங்கா சுதந்திர கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த பல உள்ளுராட்சி மன்றங்களில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய முற்போக்கு இளைஞர்கள் இறந்தும், காயப்பட்டும் உள்ளனர். அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும் அவர்களை மிக அன்பாக நேசித்த மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயமுற்ற பொதுமக்களும், அரசியல் கட்சி அங்கத்தவர்களும், கௌரவ அமைச்சர் மகிந்த விஜயசேகர அவர்களும் விரைவில் குணமடைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நான் மிக்க மரியாதை கொடுக்கும் இவ் ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.


வீ; ஆனந்தசங்கரி,
தலைவா,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

NEED TO ACT WITH EXTREME CAUTION.

09.03.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Colombo-03

Your Excellency,

NEED TO ACT WITH EXTREME CAUTION.

I am distressed over the claim of the Security Forces that the final outcome of the Eelam War would be decided within this week and that the next 72 hours will be very crucial for the LTTE. It is not the LTTE that I am worried of. It is the country and the people that I have foremost in my thinking. What Lieutenant General Sarath Fonseka said during a recent briefing to the Forces at the Vavuniya Head Quarters is very relevant in the present context and cannot be overlooked by anybody. He said, “Our progress from now onwards should be made meticulously, taking maximum preventions, keeping the civilian factor in mind at all times”. It is reliably understood that there are over three hundred thousand people trapped in Vanni. The members of the LTTE are fully mixed up with the civilians and are prepared for any eventuality. In a frustrated situation they won’t hesitate to do anything to provoke the Forces to the Maximum. The war cannot be brought to an end in a hurry to please any individual of a political party. Every one will have to act with extreme caution. My strong plea to all concerned is not to give an opportunity to the LTTE to achieve their ambition of seeing the Jallianwalla Bagh incident repeated here so that they can rouse the feelings of the Tamils all over the World and the International Community. What I say is that a group that is using over three hundred thousand people and starving them is not incapable of doing any thing to achieve their end. Jallianwalla Bagh is the incident in which the British Soldiers fired at a peaceful meeting continuously for ten minutes while the trapped Indians screamed for mercy. The 1650 rounds they fired killed and wounded 1516 people.

This incident still remains as a black mark in the history of the British rule in India and became a turning point in their freedom struggle. It is not that I want an incident like that to happen but I don’t want any such thing to happen. Even a small incident like this will help a dying movement to redeem itself.

Kilinochchi and Mullaitheevu Districts had a total population of 420,000 and 105,000 families. We all know that the LTTE always had been giving exaggerated figures. If we take 75 % of that as true these two districts should still have not less than 300,000. If the ID persons of Mannar and Vavuniya now in Mullaitheevu is added to this the total will be still higher. Out of these only about 40,000 had come to Vavuniya. In all probabilities taking into consideration the people who had left Vanni earlier, the present number 330,000 must be correct or nearly correct.

The total requirement of food needed for the 330,000 people is roughly 5000 tons. Most of the people living there are on the verge of starvation. There is obviously an acute shortage of food and drugs that should be met by sending additional stock. It is the Government that had been feeding the LTTE during the past quarter of a century. If the Government wants to save its people, then it should send food and drugs to meet the requirement of all in Vanni, till the people are freed.

To avoid a disastrous situation the forces should be advised to stop aerial bombing, shelling and artillery attacks forthwith. This step should be taken immediately, if your Excellency agree with me that a serious development had taken place in Vanni to warrant your intervention.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.

09.03.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.

ஈழப்போரின் இறுதி முடிவு இந்த வாரத்துக்குள் கிடைத்து விடுமெனவும் அடுத்து வரும் 72 மணித்தியாலயங்களும் விடுதலைப் புலிகளுக்குக் கஷ்டமான காலமெனவும் பாதுகாப்புப் படையினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து எனக்குப் பெரும் பீதியை உண்டு பண்ணியுள்ளது. நான் விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனது சிந்தனையின் முன்னிலையில் நிற்பது எமது நாட்டினதும,; நாட்டு மக்களினதும் அக்கறையே.

அண்மையில் வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்த இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் வன்னி படை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் இராணுவ அதிகரிகள் மத்தியில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி முக்கியமானதுடன் யாரும் புறக்கணிக்கத் தக்கதுமல்ல ';;இந்த நிமிடம் தொடக்கம் எமது முன்னேற்றம் மிக்க அவதானமாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூடிய அக்கறையும் கொண்டதாகவும் அமைய வேண்டும். அவர்களுக்கு மிகவும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியதே நமது முன்னுள்ள முக்கிய பொறுப்பாகும”;. ; இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

பொது மக்களுடன் கலந்து செயற்;படும் விடுதலைப் புலிகள் எதற்கும் எதனைச் செய்யவும் தயாராகவுள்ளனர். மிக விரக்தியடைந்த நிலையிலுள்ள அவர்கள் இராணுவத்தினரை தூண்டக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தயங்கமாட்டார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் எவரையேனும் திருப்திப்படுத்துவதற்காக யுத்தத்தை விரைவில் முடிக்க முடியாது. ஒவ்வொருவரும் மிக்க அவதானமாகச் செயற்பட வேண்டிய கட்டம் இதுவாகும்.

நான் மிக்க பயத்துடனும் அவதானத்துடனும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்வது யாதெனில், விடுதலைப் புலிகள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் “ஜாலியன்வாலா பாக்” இல் நடந்த சம்பவம் போன்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்பதேயாகும். அவ்வாறு செய்தால் அத்தகைய ஒரு சம்பவத்தை வைத்து ; சர்வதேச சமூகத்தையும் உலகளாவி வாழும் தமிழர்களையும் தூண்டிவிட ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கியதாக முடிந்துவிடும். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை தமது தேவைக்காகத் தடுத்து வைத்துப் பட்டினி போடும் ஒரு குழு தமது அபிலாஷைகளை நிறைவேற்ற எதனையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். “ஜாலியன்வாலா பாக்” சம்பவத்தில்தான் 10 நிமிடங்களில் 1550 துப்பாக்கி ரவைகளை உபயோகித்து கதறக் கதற 1516 இந்திய மக்களை பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சுட்டுத் தள்ளியும் காயப்படுத்தியும் இருந்தனர்.

இந்தச் சம்பவமானது பிரித்தானியரின் இந்திய ஆட்சி வரலாற்றில் ஒரு பெரும் கரும் புள்ளியாகவும் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு திருப்பு முனையாகவும் அமைந்தது. இவ்வாறானதொரு சம்பவம் எமது நாட்டில் நடக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை. அப்படி ஏதும் நடந்து விடக் கூடாதென்பதே எனது பிரார்த்தனையாகும். ஒரு சிறிய சம்பவம் கூட அழிந்து போய்க் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்துக்கு புது வாழ்வளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ஒரு இலட்சத்து ஐயாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சதது இருபதினாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். விடுதலைப் புலிகள் எதனையும் மிகைப்படுத்திக் கூறுபவர்கள் என்பதால் அந்த எண்ணிக்கையில் எழுபத்தைந்த வீதத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும் அங்கு 3 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாழவேண்டும். மன்னார், வவுனியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இத்தொகை மேலும் அதிகரிக்கும். இவற்றில் சுமார் நாற்பதினாயிரம் மக்களே வவுனியா வந்துள்ளனர். ஏற்கனவே வெளியேறியவர்களையும் சேர்த்துக் கணித்தால் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளனரென்பது சரியாக இருக்கலாம்.

மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்;கள் ஏறக்குறைய ஐந்து ஆயிரம் தொன் ஆகும். அங்கே வாழும் அநேக மக்கள் மிகப் பட்டினியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். உண்மையில் அங்கு உணவு,மருந்துப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அதை நிறைவேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளுக்கு உணவளித்து வந்தது அரசாங்கமே. அங்கே உள்ள மக்களை அரசாங்கமே காப்பாற்ற வேண்டுமென்பதால் அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப அவர்கள் விடுவிக்கப்படும் வரை போதியளவு உணவு மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்பட வேண்டும்.

மிக பயங்கரமான நிலைமை தவிர்க்கப்படுவதற்கு இராணுவத்தினர் விமானம் மூலம் குண்டு பொழிவதனையும் ஷெல், பீரங்கி மூலம் தாக்குவதனையும் உடன் நிறுத்த வேண்டும். இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளதென்பதனை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டால் உடனடியாக தலையிட்டு இந்த அவல நிலையை நிறுத்த முன்வரவேண்டும்.
நன்றி


வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி

மிகச்சிறந்த செயல் சந்திரகாந்

மிகச்சிறந்த செயல் சந்திரகாந்

பல ஆண்டுகள் தம்வசம் இருந்த ஆயுதங்களை கைவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. இத்தகைய ஓர் முடிவை எடுக்க வழி வகுத்த கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கே இப்பெருமை உரியதாகும். இம்முடிவு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொடுக்கும. உண்மையில் ரி.எம்.வி.பி. யினருக்கு விடுதலைப்புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் அன்று அவர்கள் தம் ஆயுதங்களை கைவிட்டிருக்க முடியாது. எனினும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடியது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதும் உண்மையே. இப்போதுதான் கிழக்கிழங்கையில் ஜனநாயகம் உதித்துள்ளது. இக்கட்சி தனது பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லை கைவிடுவதோடு தம்மிடம் சிறுவர்கள் போராளியாக யாரேனும் இருப்பின் அவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும். அவர்கள் இனி மக்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கி சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள, சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களா என்பதை கவனிப்பதோடு, வேறு எவரேனும் அவர்களின் உரிமைகளில் தலையிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும். வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களை வற்புறுத்தி ஆயுதங்களை கைவிடவைப்பதோடு, தேவை ஏற்படின் அவர்கள் அரச பாதுகாப்பை நாடவைக்கவும் வேண்டும். மிக்க நன்றி தம்பி சந்திரகாந்தன் தொடர்ந்து கடைப்பிடிக்கவும்.



வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.

WELL DONE CHANDRAKANTH.

WELL DONE CHANDRAKANTH.

The Tamil United Liberation Front very warmly welcomes the historical decision of the Tamil Makkal Viduthlai Puligal, to do away with the weapons that they had in their possession for several years. The credit goes to its leader Mr. S. Chandrakanthan for guiding his party to take such a decision, which will certainly be a welcome news to the people of the Eastern Province. It is true that the TMVP Members were facing grave risk to their lives from the LTTE and possession of arms for self-defence could not be dispensed with at that stage, but it is also equally true that the civilian population was not feeling comfortable to work with an armed group. The real democracy had dawned in the East only now. The Members of the TMVP should also change the name of the party by dropping the word “Puligal” in their name and also release all child-solders, if they still have any with them. They must now mix up with the people and give them a sense of security and brother-hood.

I strongly urge the TMVP to see that the people enjoy all rights un-interrupted and without the interference of any one. They must also compel every group in their midst to surrender the arms in their possession and seek Government Security if required. Well done Thamby Chandrakanthan! Please keep it up.



V. Anandasangaree,
President – TULF.

பெரும் துயரில் வன்னி மக்கள்

பெரும் துயரில் வன்னி மக்கள்

உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையாலும், பனடோல், விட்டமின் சி இரண்டைத்தவிர வேறு எதுவித மருந்துவகைகளும் இலலாமையால் வன்னிவாழ் மக்களும் நோயாளிகளும் துன்பப்படுவது வேதனைக்குரியதாகும். உலர் உணவுப் பொருட்களும் அத்தியாவசிய மருந்துவகைகளும் விமானமூலம் பொட்டலங்களாக போடப்பட்டு விரைவில் தேவைக்கேற்ப கப்பல்கள் மூலம் போதிய அளவு அனுப்பப்படவேண்டும். ஏறக்குறைய மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் அகப்பட்டுள்ளனர். கிடைத்துள்ள செய்தி நம்பத்தக்கதாகும்.

நடவடிக்கைகளை நிறுத்தவிட்டு திரும்பி பார்க்கவேண்டிய காலம் அரசுக்கு வந்துள்ளது. மேற்கொண்டு தொடராது, தற்போதைய உண்மை நிலவரத்தை கணக்கெடுக்கவேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதய வன்னி நிலைமை உற்சாகத்தை தருவதாக இல்லாதது பெரும் துன்பத்தையே தருகின்றது. மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவதாக அறிகின்றேன். அதே நேரத்தில் சிலர் பட்டினியால் இறந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஏதோ நச்சுத்தாவரம் சேர்க்கப்பட்ட உணவை உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் தம் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து சூனிய பிரதேசத்திற்கு எவரேனும் தப்பிப் போகாதவாறு தடுப்புக் காவல் போட்டுள்ளனர். தப்பியோட முயற்சிப்பவர்களின் முயற்சிகளை முறியடிக்க சுற்றிவளைத்து தேடுதல் நடத்துவதோடு சிலர் தப்ப முயற்சித்தமையால் தம் உயிரையும் இழந்துள்ளனர்.

யுத்தம் வெல்லப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்க உண்மையாகும். விடுலைப்புலிகள் தாம் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என எதிர்பார்ப்பார்களேயானால் அது வெறும் பகற் கனவாகும் அவர்கள் மக்களை பணயக் கைதிகளாக நடத்துவதற்கு சில காரணங்கள் உண்டு. ஒன்று அவர்கள் மக்களை மனிதகேடையமாக உபயோகிப்பதற்கும் மற்றயது தமது பேரம் பேசும் சக்தியை கூட்டுவதற்குமேயாகும். இச்சந்தர்ப்பத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் பல உண்டு. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தை வென்றெடுக்க ஆயிரக்கணக்கான போர்வீரர்களோடு பல்வேறு இழப்புக்களையும் சந்தித்துள்ளது.

யுத்தத்தின் வெற்றிக்கு ஒருவரை ஒருவர் எதிரியாக நினையாது நண்பாகள் போல பரஸ்பர உறவு கொண்டிருந்தமையாலேயே இலகுவாக வெற்றியடைவதற்கு மக்களின் ஆதரவு இருந்தது. இதில் விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக புலிகளின் அணியில் சேர்க்கப்பட்ட தம் பிள்ளைகளை இழந்த பெற்றோர் மிகத் தீவிரமாக செயற்பட்டனர். யுத்த முனையில் உயிர் இழந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள்கூட பலாத்காரமாக சேர்க்கப்பட்ட ஏழை மக்களின் பிள்ளைகளே. தொடர்ந்தும் பலாத்காரமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. அண்மையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்கூட ஈவிரக்கமின்றி கட்டாயப்படுத்தி புலிகளின் இயக்கத்தில் சேர்க்கப்படுகின்றார்கள். வன்னியில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்குக் கூட குறுகிய கால தீவிர பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அனுபவித்து வந்த சகல வசதிகளும் பறிபோன நிலையில் விடுதலைப்புலிகளால் இனி தலைதூக்கமுடியாது. ஆகவே அவர்களைப் பற்றி பொருட்படுத்தவேணடிய அவசியமில்லை.

ஆனால் ஓர் உயிரேனும் இழப்பின்றி அத்தனை பேரையும் விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. பலாத்காரமாக சேர்க்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குக் கூட புணர் வாழ்வு அளிக்கப்படவேண்டும். ஆகவே வன்னிக்குள் அகப்பட்டுள்ள ஒவ்வொரு ஜீவனையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அனைவருக்கும் தேவையான அளவு உணவு வழங்கப்படவேண்டும். கடந்த காலங்களில் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப்புலிகளுக்கும் அரசே உணவளித்து வந்தது. விடுதலைப் புலிகள் அதை ஒரு வழக்கமாகவே எடுத்துக்கொண்டு தமக்கு வேண்டியதை எடுத்த பின்பே எஞ்சியதை மக்களுக்கு கொடுத்தனர். போதியளவு உணவு கிடைக்கப்பெற்றால்தான் பொதுமக்கள் தமக்குரிய பங்கினை முழுமையாகப் பெறமுடியும்.

இந்த யுத்தத்தை சிலர் வற்புறுத்துவது போல அவசர அவசரமாக முடிவிற்கு கொண்டுவர முடியாது மிகப் பெறுமதியான ஒன்றை யுத்தத்தால் இழந்தவர்களால் மட்டுமே யுத்தத்தால் மக்களுக்கு ஏற்படும் அனர்த்தத்தையும் உணரமுடியும். தமது தோழர்கள் பலரை இழந்து பல தியாகங்களை செயது இராணுவத்தினர் சம்பாதித்த நற்பெயரை விரயமாக்கமுடியாது. வன்னி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு ஆற்றிய விரிவான உரையில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா அவர்கள் கூறியிருப்பதாவது இனி நாம் அடையப்போகும் முன்னேற்றம் மிக்க அவதானமானது, அப்பாவி பொதுமக்களின் அதிகூடிய பாதுகாப்பை மனதில் கொண்டு எந்நேரமும் செயற்படவேண்டும் என்பதே. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள செயதிகளின்படி மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் வன்னியில் அகப்பட்டள்ளனர். ஆகவே யுத்தம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடம் சென்றாலும்கூட அரச படைகள் அதை சகித்துக்கொண்டு பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களில் பாதிக்கப்பட்டவர்களினதும், இறந்தோரினதும் எண்ணிக்கை கூடியிருப்பது மனதிற்கு வேதனை தருவதோடு, கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். தமது கடமையை திறம்பட செய்த விமானப் படையினர் இனி தமது விமானங்களை மனிதாபிமானப் பணிகளுக்கே உபபயோகிக்க வேண்டும். பீரங்கித் தாக்குதல்களும், ஷெல் அடிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னியில் அகப்பட்டுள்ள அத்தனை மக்களும் தந்திரமாகவும் அவதானமாகவும் பாதுகாப்புடன் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்;. அப்போதுதான் இராணுவத்தினர் சம்பாதித்த நற்பெயரைப் பாதுகாக்கமுடியும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர், த.வி.கூ

VANNI PEOPLE IN GREAT DISTRESS.

VANNI PEOPLE IN GREAT DISTRESS.

It is distressing to note that Vanni is starving due to acute shortage of food and the patients are suffering due to lack of essential drugs, the only available drugs being Panadol and Vitamin-C Immediate action should be taken to air drop dry ration and essential drugs followed by immediate shipment of these items. The life of more than three hundred thousand civilians is at stake. The source of information is very reliable.

The time has now come for the Government to stop and look back. Before proceeding further, taking of a full stock of the situation is absolutely necessary. The latest developments in Vanni do not appear to be encouraging but in fact is distressing. I am reliably informed that people are not merely on the verge of starvation but some people had infact died of starvation. A family of six, narrowly escaped death after eating some food prepared with some local herbs, presumably poisonous. To make things worse the LTTE had setup check point around to prevent anyone from escaping from the areas under their control and entering the safety zone. Attempts by several people to escape were foiled by death threats and cordon and search operations. Some had even lost their lives in their attempts to escape.

The war had been won and that is the stark truth. If the LTTE thinks that they can stage a come back they are living in a dream world. They are now holding the people to ransom partly as human shield and partly to strengthen their bargaining power. The factors that should be taken into serious consideration in a situation like this are many. The Government forces suffered heavy losses and had to sacrifice thousands of soldiers in this war against terrorism. One of the factors that contributed for their victory is certainly the co-operation of the civilians given to the forces who during the entire war period treated the civilians as friends and not as enemies and vice-versa. The parents who were deprived of their children due to the LTTE’s conscription, worked with a vengeance. The LTTE cadre who lost their lives at the battle front were children of poor parents, compulsorily recruited to the LTTE cadre. Conscription is still going on. Over 8000 students who sat for the G.C.E. Examination are being mercilessly and forcibly recruited. Even the elders trapped in Vanni are given brief but intensive training to fight. Deprived of all the facilities they had in the past, the LTTE can never raise their head. Hence no one need take the LTTE seriously.

But the country has a responsibility to liberate all without one life lost. Even the LTTE cadre recruited by force should be rehabilitated. Hence it is the duty of the Government to save every soul now caught up in Vanni. Food should be provided to meet the needs of all. It is no secret that the entire LTTE cadre had been fed by the Government all these days, lasting over quarter of a century. The LTTE has a habit and now it has become a tradition for them, to meet their requirements first, before that of the civilians. Only if sufficient food ships are sent, the civilians will be in a position to receive their requirement in full.

This war cannot be brought to an end in a hurry as demanded by some. One should have lost something very dear to him or to her due to the war, to realize the agony the war causes to the people. All the good name the forces earned at great sacrifice including the loss of a large number of their comrades, should not go waste. During a recent briefing to the forces at the Vavuniya Head Quarters Lieutenant General Sarath Fonseka had said “ our progress from now onwards should be made meticulously, taking maximum precautions, keeping the civilian factor in mind at all times” it is reliably understood that there are over three hundred thousand civilians trapped there. Therefore even if it takes one year for the war to end the Government forces should endure it and mark time. The increase in civilian causalities including death is indeed disturbing and deplorable. The Air Force that did a good job must now use all their air crafts for humanitarian activities. Artillery attack and shelling also must stop forthwith and all the people trapped in Vanni should be tactfully and carefully brought to safety. Then only the good name earned by the forces could be retained.



V. Anandasangaree,
President – TULF.

சுடர்ஒளி ஆசிரியரின் முறைதவறிய கைது கண்டிக்கப்படவேண்டியதாகும்

சுடர்ஒளி ஆசிரியரின் முறைதவறிய கைது கண்டிக்கப்படவேண்டியதாகும்

தேசிய தமிழ் தினசரி சுடர் ஒளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் திரு. வுத்தியாதரன் அவர்களின் முறை தவறிய கைதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது பத்திரிக்கையாளர்கள் ஓர் தேசத்தின் காவலர்கள் பல சிரமங்கள் மத்தியில் சில சந்தர்ப்பங்களில் தம் உயிரையும் பணயம் வைத்து சேகரிக்கும் செய்திகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை அவர்களுக்குணடு.

காவல் துறையினர் சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற கோதாவில் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் பாதுகாப்பும் உதவியும் அளிப்பதோடு அவர்களின் கடமைக்கு எதுவித இடையூறும் செய்யாதிருக்க கடமைப்பட்டவர்களாவர். அவர்கள் எழுதுவது அத்தனையும் எமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் இருப்பினும் உண்மையை வெளிப்படுத்தி பாரபட்சமற்ற செய்திகளை பிரசுரிப்பது வரவேற்கதக்கதாகும். பத்திரிக்கை ஆசிரியர் தான் சேகரிக்கும் செய்தி வந்த வழி பற்றிய இரகசியத்தை காப்பற்றவேண்டிய கடமை உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

பாரபட்சமின்றி கடமைபுரிய வேண்டிய கடமைப்பாடு காவல்துறை அதிகாரிகளுக்குண்டு. சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகளாகிய காவற்துறையினர் அனைவரையும் சமமாகவும் அனைவரையும் அக்கறையுடனும் கண்ணியமாகவும் நடத்தவேண்டிய பொறுப்பு உடையவர்களாவர். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்கும் உயிர் ஆபத்தைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் சங்கடமான நிலைமைகள் பற்றியும் நாம் அறியாததல்ல. அண்மையில் கிடைத்த ஓர் இந்திய செய்திப்படி ஏதோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில வழக்கறிஞர்கள் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியும் ஒரு சவர அலகால் பல இடங்களில் காயமும் ஏற்படுத்தியதால் ஏற்பட்ட சங்கட நிலையையும் அவமானத்தையும் தாங்கமுடியாது தீக்குளித்துள்ளா

ஒருவர் எவ்வளவு மோசமான குற்றவாளியாக இருந்தாலும்கூட திரு. வித்தியாதரனுக்கு ஏற்பட்டதுபோன்ற நிலைமை இனிமேல் வேறு ஒருவருக்கு ஏற்படக்கூடாது திரு. வித்தியாதரன் ஓர் கணவான் மட்டுமல்ல ஓர் தேசிய தமிழ் தினசரியின் பிரதம ஆசிரியரும்கூட. அவர் தான் கைது செய்யப்படுவதை வலிந்து தடுத்திருந்தாலோ அல்லது தப்பிச்செல்ல முயற்சித்திருந்தாலோ சிறிதளவு பலாத்காரம் உபயோகித்திருக்கலாம் என்று கூட கூறலாம் ஆனால் இச்சந்தர்ப்பத்தில் திரு வித்தியாதரன் தன் காரியாலயத்தில் பெருமளவு நேரத்தை செலவிடுபவர். ஓர் தொலைபேசி அழைப்பு மூலம் அவரை வரவழைத்திருந்தால் அவர் அழைப்பிற்கமைய செயற்பட்டிருப்பார். அந்த அசிங்கமான முறையில் நடத்தப்பட்டது வெட்கப்படவேண்டிய விடயமாகும். எமது நாட்டு காவல் துறையினர் ஓர் பத்திரிக்கை ஆசிரியரை இம்முறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இலங்கை காவல் துறையினருக்கு இந்தளவு ஓர் அவமானத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்கமுடியாது. சம்மந்தப்பட்டவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வதிகாரிகளுக்கு அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த வேளை இவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய கைதை அவரால் நியாயப்படுத்தவேமுடியாது. தனது இறுதி யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவிற்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகவே அவரின் உறவினர்கள் கருதுகின்றார்கள். அது நியாயமானதாகவே எனக்கும் தோன்றுகின்றது.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- தமிழர் விடுதலைக் கூட்டணி

TULF DEPLORES THE MANNER OF ARREST OF THE SUDAROLI EDITOR.

TULF DEPLORES THE MANNER OF ARREST OF THE SUDAROLI EDITOR.

The TULF regrets deeply the manner in which Mr. Vidyatharan Editor-in-Chief of Sudaroli, a National Tamil Daily, had been taken into custody. News papers are the watch-dogs of the Nation. They have a sacred duty to bring out all news, they gather with difficulty, some of which under grave risk to their lives, to the knowledge of the Public. The Police, as peace officers should give the Editors and Journalists all protection and assistance and should not act in any way to disrupt their work. It may be that all, what they write, are not palatable to us. Yet the truth must come out and unbiased reports are much welcomed. We should not forget the fact that the editor has a sacred duty to maintain strict secrecy of the sources of information.

The police have a duty to act impartially. They are Peace Officers with a duty cast on them to treat everybody equally and with care and respect. We are not unaware of the risk and embarrassment they face at times. A recent Indian report said that a police officer committed suicide by setting himself ablaze, unable to bear the shame and to face the embarrassment caused to him by some Lawyers who, while demonstrating, assaulted him and cut him with a blade at several places.

What happened to Mr. Vidyatharan should not happen again to another person, even to the worst criminal. Mr. Vidyatharan is a respectable gentleman and the Editor-in-Chief of a National Tamil daily. One can understand if a certain amount of force had been used if he resisted arrest or made on effort to escape. But in this instance Mr. Vidyatharan works in his office and is available most of the time and would have responded to a phone call from the police, if he was wanted by them. It is a shame that he had been treated in this shabby manner. I am unable to believe that our police behaved in this manner with the editor of a paper. No police officer should be permitted to bring disrepute to the entire Sri Lankan Police Force and therefore strict action should be taken against the officers who had no moral justification for arresting him at a funeral of one of his very close relations. This act had been taken by his relations as a great insult, caused to the person about to commence his last journey.


V. Anandasangaree,
President – TULF.

FACILITATING CHILDREN OF INTERNALLY DISPLACED FAMILIES FOR HIGHER EDUCATION.

26.02.2009
His Excellency Shree Alok Prasad,
High Commissioner for India.

Your Excellency,

FACILITATING CHILDREN OF INTERNALLY DISPLACED FAMILIES FOR HIGHER EDUCATION.

I take this opportunity to thank you for taking prompt action on various occasions, to bring to the notice of your Government the need for urgent humanitarian assistance for victims during the times of National Calamities and such other occasions when such assistance was badly needed. We recollect with gratitude how medical-aid was flown in, within hours of the occurrence of the Tsunami, followed by further aid in abundance. We also appreciate the good gesture of both the Central Government and the State Government of Tamil Nadu in providing relief for the displaced families.

I need not point out to you as to what extent the education of children of the districts of Mullaitheevu and Kilinochchi in full and parts of all the other districts in the North and East, got interrupted due to various reasons such as school children compelled to take part in demonstrations, frequent displacement of families, children keeping away from school for fear of conscription etc. There are many childrens who had been selected to follow various courses at the Universities also not given permission to leave Vanni areas under the control of the LTTE and so with many, who have the required qualification to follow degree courses in India, not allowed to leave Vanni. There are also very clever children who could not go beyond Grade 10 for the same reasons, though qualified to join plus 1 & 2 pre-University courses.

I kindly request you, Yours Excellency, to evolve a scheme with the concurrence of the Sri Lankan Government and in consultation with your Government to enable a few such children to pursue their studies in India, the opportunity they were either denied or missed, in their country for no fault of theirs. Further more the Government of Sri Lanka, being fully engaged in the process of resettlement of the displaced families, may take some time to consider the problems of higher education of these children.

The assistance of the Tamil Nadu State Government too could be obtained.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

உள்ளுரில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துதல்

26.02.2009
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ அலோக் பிரசாத் அவர்கள்
இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்பு

மதிப்பிற்குரிய ஐயா

உள்ளுரில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துதல்

பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய ரீதியிலான அனர்த்தங்கள் மற்றும் அதுபோன்ற வேறு பல சந்தர்ப்பங்களில் எல்லாம் பாதிப்புக்குள்ளான மக்களின் மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு தேவைகளின் அவசியத்தை அறிந்து உடனுக்குடன் தங்களின் அரசுக்கு தெரியப்படுத்தி உதவிய தங்களின் செயற்பாட்டிற்கு நன்றி கூற கடமைப்பட்டவனாவேன். சுனாமி ஏற்பட்டு ஒருசில மணித்தியாலங்களுக்குள் இந்திய வைத்தியக் குழு விரைந்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து பல நிவாரண உதவிகள் வந்தடைந்ததையும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு ஈடுபடுத்தப்பட்டதாலும் அடிக்கடி இடம்பெயர்ந்ததாலும் போராளிகளாக விடுதலைப்புலிகளால் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டு விடுவோம் என்ற பீதியால் பாடசாலை செல்லாமையாலும் அவர்களின் உயர் கல்வி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முற்றாகவும் வடகிழக்கின் எஞ்சிய மாவட்டங்களில் ஒரு பகுதியிலும் முற்றாக பாதிக்கப்பட்டுப் போனதை நான் கூறி நீங்கள் அறியவேண்டிய தேவையில்லை. பல்கலைக் கழகத்தில் கல்விபயில பல்வேறு துறைகளுக்கு தெரிவாகியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்களுக்கு வெளியில் செல்வதற்கு அனுமதி கிடையாமையாலும் இந்தியாவிற்கு சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ள போதிய தகுதி இருந்தும் அதே காரணத்தால் கல்வியை தொடரும் சந்ததர்ப்பத்தை இழந்தும் மறுக்கப்பட்டும் உள்ளனர். அதேபோல் பட்டப்படிப்பிற்கு முன் வகுப்பாகிய ப்ளஸ் 1 மற்றும் 2 வகுப்புக்களில் சேர்ந்து கல்வி கற்கக்கூடிய திறமைசாலிகளுக்கும் அதேகதியே.

இலங்கை அரசின் அனுசரனையுடன் தங்கள் அரசின் அங்கீகாரத்தைப்பெற்று தமது கல்வி வாய்ப்பை இழந்த அல்லது மறுக்கப்பட்ட இத்தகைய மாணவர்கள் சிலரேனும் இந்தியாவில் உயர் கல்வி கற்கக்கூடிய வகையில் ஓர் திட்டத்தை தயாரித்து உதவுமாறு தங்களை வேண்டுகின்றேன். மேலும் இலங்கை அரசு மீள் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளமையால் மேற்படிப்பு சம்மந்தமாக அக்கறை எடுக்க காலதாமதமாகலாம்.

இம் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் ஒத்தாசையையும் தாங்கள் பெறலாம்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - த.வி.கூ

வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

16-02-2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டு வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் திடீரென உயர்ந்துள்ளமையை மிக அக்கறையுடனும் மிகுந்த துன்பத்துடனும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இராணுவம் வன்னிக்குள் புகுந்ததில் இருந்து, இன்று ஏற்பட்டுள்ள நிலை மிக அதிகப்படியாக உயர்ந்துள்ளது. நான் இரு சமூகங்களுக்கிடையில் எதுவித பேதமும் காணாதவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் ஒரு தமிழராக இருந்தாலும் ஓரு சிங்களவராக இருந்தாலும், ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களின் உயிர் மிகப் பெறுமதியானவையாகும். இன்றுள்ள யுத்த நிலைமையில் இராணுவம் பதிலடி கொடாது தொடர்ந்து தாக்கத்தை சகிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் தம் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மாறாக விடுதலைப் புலிகளோ ஏறக்குறைய யுத்தத்தில் தோன்றுப்போன நிலையிலும் ஆணவம் கொண்ட தமது தலைவனின் பணிப்பின் பேரில் போராடுகின்றனர். தாம் பலாத்காரமாக தம் பாதுகாப்புக்காக பிடித்து வைத்துள்ள பொதுமக்களின் பாதுகாப்புப் பற்றி யோசிக்காது எதுவித கேள்வியும் கேட்காது போராடி மடிவதே அவர்களின் கடமையாகும்.

ஆனால் ஜனாதிபதி அவர்களே எப்படியும் தங்களின் அரசுக்கு அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய புனிதமான கடப்பாடு உண்டு. விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசத்தினையும் மக்களின் பெரும் பகுதியினரையும் மீட்டெடுத்த பெருமை இராணுவத்தினருக்கு உண்டு. இராணுவத்தில் இதுவரை காலமும் பல தோழர்களை பலிகொடுத்து சம்பாதித்த நற்பெயருக்கு பல அப்பாவி மக்களின் இழப்பால் களங்கம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம் பற்றி நான் நன்கறிவேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பெருமளவில் குறுகியுள்ளமையால் ஏற்பட்ட இடநெருக்கம் பெருமளவாக பாதிப்புக்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம். யுத்தத்தை விரைவில் முடிக்க வேண்டுமென இராணுவத்தினரின் அளவுக்கு மீறிய உற்சாகம் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்காது.

அக்டோபர் 24ம் தேதிக்கும் நவம்பர் 09ம் தேதிக்கும் இடைப்பட்ட இருவார யுத்தத்தில் எட்டு பொது மக்கள் இறந்தும் ஒன்பது பேர் காயப்பட்டும் உள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 288 பேர் இறந்தும் 766 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை 55 பேர் இறந்தும் 109 பேர் காயப்பட்டும் உள்ளனர். இது ஓர் அதிர்ச்சி தரும் விடயம் மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வருபவர்களையும் நன்றாக பராமரிக்கும் இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது பாரதூரமான விடயமாகும் பல ஆண்டுகளாக பல்வேறு துன்பத்தை அனுபவித்து குறிப்பாக கடந்த சில மாதங்களாக செல் அடிக்கும், பீரங்கி தாக்குதலுக்கும் பயந்து வாழும் மக்களின் நம்பிக்கையை பெற இத்தகைய படுகொலைகளை நிறுத்த வேண்டும்.

இராணுவம் இனி விமானத் தாக்குதலைகளை உடனடியாக நிறுத்தி பீரங்கித் தாக்குதல் செல் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும். அகப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை எஞ்சியுள்ள பகுதிகளை பிடிப்பதைப் பொறுத்திருக்கலாம். ஆனால் இராணுவ நடவடிக்கை தொடரலாம்.

விடுதலைப் புலிகள் தமது பிரச்சாரத்துக்கு பெரிதாக பாவித்த குற்றச்சாட்டாகிய இன ஒழிப்பை மறுத்துரைத்தவன் நான் என்பதை தாங்கள் அறிவீர்கள்

நன்றி

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

THREAT TO HUMAN LIVES IN VANNI

16.02.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Colombo-03

Your Excellency,

THREAT TO HUMAN LIVES IN VANNI.

With great concern and deep sorrow, I wish to bring to your notice the disturbing manner in which the causality rate, among the innocent civilians trapped in Vanni, has all of a sudden shot up during the past two to three weeks. This is disproportionate to what had been taking place since the forces moved into Vanni. As you are aware I am one who never differentiate between two communities. Life is precious whether it belongs to a Tamil, a Sinhalese or a Muslims. In a war situation like this, I do not expect the Forces to be always at the receiving end without retaliating. They are at the battle front fighting in defence of their mother-land. Contrary to this, the LTTE cadre is fighting on the orders of their arrogant leader, who knows well that the war is almost lost. They are not to question why but to do and die without any consideration for the safety of the civilians, whom they have detained under compulsion for their own protection.

But your Excellency your Government has a sacred duty to safeguard its innocent citizens at any cost. The Government forces have very creditably liberated a larger portion of the civilians and the territory the LTTE had under their control. The good name that the Forces earned all these days by sacrificing a good number of their comrades, is now at stake due to the escalation of deaths among the civilians. I quite understand the change of circumstances during the last lap of the war. The area still under the control of the LTTE had shrunk considerably and the congestion within has probably resulted in the disproportionate increase in the causalities. I do not think that this is due to the over-enthusiasm of the forces to bring the war to an end soon.

The number of deaths during a period of two weeks from October 24, 2008 to 9th November was only 8 and the number injured was 29. But the total deaths during last week was 288 and the number injured was 766, Last Saturday it was 55 and 109 respectively. It is indeed shocking and will also seriously affect the image of the Forces who had been helping the stranded and injured persons and those fleeing from the LTTE areas into cleared areas. This massacre of civilians should stop forthwith, to win the confidence of the civilians who had suffered untold hardships for several years in the LTTE held areas and more particularly during the past few months living in constant fear of shelling and artillery attacks.

I very strongly urge that the Forces be asked to restrain from any further aerial bombing and also to stop firing shells and artillery attacks. The capture of the remaining areas could wait till all the trapped persons are brought out safely, while the war goes on.

You are not unaware, Your Excellency, how vehemently I had been defending the Government against the charge of annihilation of Tamils which the LTTE had very successfully used for their advantage, all over the world.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

உள்ளுர் இடம்பெயர்ந்தோர் சார்பான வேண்டுகோள்

09-02-2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி
அலரி மாளிகை,

அன்புடையீர்,

உள்ளுர் இடம்பெயர்ந்தோர் சார்பான வேண்டுகோள்

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பயணம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ, தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துர்திஸ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.

நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

இரண்டாவதாக வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிர யோசனமானதாக இருக்கும்

நன்றி


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - த.வி.கூ

URGENT PLEA ON BEHALF OF THE I.D.Ps.

09.02.2009
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka.

Your Excellency,
URGENT PLEA ON BEHALF OF THE I.D.Ps.

Several calls had come to me today and yesterday from Tamils living abroad frantically making inquiries about their kith and kin, trapped in Vanni and escaping to Vavuniya taking grave risk to their lives. They want to know, first of all whether their people are alive and if so where? The LTTE had not responded to the plea of various organization like the UN, EU and the Co-Chairs, apart from countries like UK, USA, Canada and India, for their release from Vanni. It is unfortunate that Tamil Nadu and surprisingly the TNA had not appealed to the LTTE to release the innocent ones but shockingly issuing silly statements still to please the LTTE.

I make three urgent appeals to you. One to release a list of names of persons who had come from Vanni and where they are now accommodate. That will ease the excitement and tension of the relatives living abroad and also will enable them to offer any assistance, the displaced persons may need.

The second one is a request to allow the elders, the sick and the children to join their relative who are prepared to accommodate them at their homes in Vavuniya. Others can be handed over to the parents after proper inquiry later. I wish to mention two incidents in support of this request. A person known to me from Kilinochchi has lost both his legs and is in a state of coma at the Mannar Hospital. The whereabouts of the rest of the family is not known. They want me to trace them. In another incident the wife who has fractured her leg is being looked after by her mother at the Mannar Hospital. The husband who brought his injured child the next day is looking after him at the Vavuniya Hospital. Their relations who are in Vavuniya are prepared to accommodate them, at their home.

The third request is to allow the local NGOs, Political Parties and Social Organization such as Rural Developments Societies, Community Centers etc. to visit the refugees. This will counter the false propaganda of the LTTE that youths are taken to unknown destinations, women missing, inmates treated like prisoners, low quality of food etc. Since the inmates are increasing in number day by day, the assistance of volunteer organizations will prove very beneficial.

Kindly take these proposals seriously and act accordingly.

Thanking you,

Yours Sincerely,

V. Anandasangaree,
President – TULF.

FORCES TO ACT WITH RESTRAINT

Forces to act with restraint

I am distressed over the unhappy news reaching from Vanni, about the unusually heavy casualties in the War front, from the time the forces set their feet on the Vanni soil. Only two days back the whole of Europe, Scandinavia, Canada, USA and India believed the LTTE’s canard, that over five thousand soldiers had been taken as captives and a large number of them were killed. The whole of last morning all telephones were ringing continuously to find out as to what is happening in Vanni. By noon, the news, of the capture of Mullaitheevu Town reached all parts of the world, put an end to this mischievous rumour and those who were celebrating the “victory” had to put their heads down in shame. Whether what we hear today is true or another canard of the LTTE, the people expect the forces to act with restraint, because whatever happens to them, they have a moral duty to safeguard the innocent people, who are trapped in the LTTE held area or rather kept by them under compulsion as human shield, for their own protection. Hence the LTTE should take the blame for every death that occurs in Vanni today.

The LTTE, once acclaimed by some as very brave, have now become cowards. At this desperate hour they will not hesitate to do any thing with venomous intentions of putting the blame on the others. We expect the army that liberated 95% of the area under the LTTE, with minimum casualties, will not do anything in haste to end the war quickly. But the people expect them to act with caution and not to spoil their name that they earned by sacrificing a lot of their comrades. I tell the gallant soldiers that they have already won the war with no hopes for the LTTE to regain any part of the territory. But the civilian lives, they have to protect as a sacred duty cast on them, in defence of the nation.

V. Anandasangaree,
President – TULF.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடன் விடுவிக்க வேண்டும் அன்றேல் பாராளுமன்ற பதவியை துறக்க வேண்டும் - த.வி.கூ கோருகிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடன் விடுவிக்க வேண்டும் அன்றேல் பாராளுமன்ற பதவியை துறக்க வேண்டும் - த.வி.கூ கோருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் தமது கடமையை செய்ய வேண்டும் அன்றேல் தமது பாராளுமன்ற பதவிகளை கண்ணியமான முறையில் துறக்க வேண்டுமென கோருகிறேன். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி மக்களை முட்டாள்களாக்கியது போதும். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் மக்களுக்காக பேசவில்லை. பதிலாக மோசடி மூலம் தமக்கு பாராளுமன்ற பதவிகளை பெற்றுத்தந்த விடுதலைப் புலிகள் சார்பாகவே பேசி வந்துள்ளனர். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக தமிழ் நாட்டவர்களை, தவறான முறையில் வழிநடத்தியுள்ளனர். சுயமாக செயற்பட தமிழ் நாட்டை அனுமதித்திருந்தால் அல்லது உண்மையான வழிநடத்தலை மேற்கொண்டிருந்தால் தமிழ் நாடு தமிழ் மக்கள் ஏற்கக்கூடியதொரு தீர்வை முன்வைத்திருக்கும். இலங்கை மக்களை பகைக்க வேண்டியோ, அல்லது நியாயமற்ற அமுல்படுத்த முடியாத கோரிக்கைகளை முன்வைத்து தமது மத்திய அரசை சங்கடப்படுத்தக் கூடிய நிலைமையோ ஏற்பட்டிருக்காது. துரதிஷ்டவசமாக தமிழ் நாட்டு மக்கள் யுத்தத்தை நிறுத்தும்படி கோராது நட்பு முறையில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்குமாறு கோரியிருப்பின், அம் முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டிருப்பர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் கௌரவ டாக்டர் மு.கருணாநிதி அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்தேன். இரு மாதங்களுக்கு முன் தமிழ் நாட்டு ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களை மேன்மை தங்கிய எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவ் அழைப்பை ஏற்று அவர் வருகை தந்து மத்தியஸ்தம் வகிக்க முன் வந்திருந்தால் ஜனாதிபதி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார். நாம் இழந்த வாய்புக்களில் இதுவும் ஒன்றாகும். இச் சந்தர்ப்பத்தை எமக்கு சாதகமாக உபயோகிக்கத் தவறிய த.தே.கூ பொறுப்பேற்க வேண்டும்.

“எத்தனை ஆண்டு காலமாக, ஏறக்குறைய கால் நூற்றாண்டு இவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பதற்கு நாம் என்ன பாவம் செய்தோம்” என்றும், “இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்கும்” என்றும் இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாகிய தருமபுரத்தில் வசிக்கின்ற மக்கள் கேட்கின்றார்கள். நான் அவர்களுடன் வாழ்ந்தவன் என்ற காரணத்தாலும் அவர்களை பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தியதாலும், அவர்களில் அநேகரை நான் அறிவேன். இதைத் தவிர ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆண். பெண் பிள்ளைகள், நோயாளிகளும், பச்சிளம் குழந்தைககளும் உட்பட அனைத்து மக்களின் சகவாழ்வு பறிக்கப்பட்டு, ஈவிரக்கமின்றி விலங்குகள் போல் அயல் மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்துடன் மோத முடியாது வாபஸ் பெற்று வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இவர்களை கிளிநொச்சிக்குள் பலாத்காரமாக புகுத்தியுள்ளனர். தத்தம் இஷ்டப்படி செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் அநேகர் தமது சொந்த வீடுகளில் தங்கியிருப்பர். இன்னும் பலர் தத்தம் வீடுகளுக்குச் சென்று கொள்ளையிடப்பட்டும், களவாடப்பட்டும எஞ்சிய தமது பொருட்களை பாதுகாத்திருப்பர். ஏற்கனவே இடம் பெயர்ந்த மக்களால் நிறைந்துள்ள இச் சில கிராமங்களுக்குள் இவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எவ்வித குற்றமும் செய்யாத இவர்களை தமது பாதுகாப்புக்காக மனித கேடயமாக உபயோகிப்பதற்கு இவர்களை பயணக் கைதிகள் போல் தடுத்து வைத்துள்ளனர். இந்த துர்ப்பாக்கிய மக்களின் அவலக் குரல் தமிழ் நாட்டுக்கு எட்டவில்லை போலும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு; பிரதேசத்தில் வாழும் மக்களின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டிருந்தும, தமிழ் நாடு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த காரணத்தினால் போலும், சர்வதேச சமூகம் மௌனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகி உள்ளது. தமிழ் நாட்டின் கோரிக்கை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமைந்ததே அன்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நன்மை கருதியல்ல என்பது தெளிவாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுள்ள இரண்டரை லட்சம் மக்களின் விடயத்தில் தமிழ் நாடோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ அக்கறை கொள்ளாது வேண்டா வெறுப்பாக செயல்படுகின்றன. ஆனால் மக்களோ, யுத்த முனையில் பலி கொடுக்க விடுதலைப் புலிகளால் ஆட்கள் சேர்ப்பது ஒரு புறமும், மறுபுறம் பாம்புகளாலும், நுளம்புத் தொல்லையாலும் மக்கள் துன்பப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பாம்பினால் தீண்டப்பட்டு சிலர் இறந்தும் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபுறமிருக்க இயற்கையே மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது. கடும் மழையால் அப் பிரதேசம் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உயரமான இடங்களைத் தேடி மக்கள் அலைகின்றனர். பாம்புக்கடி ஒருபுறமிருக்க நுளம்பினால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பெருமளவில் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இத்தகைய துன்பங்கள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அண்மையில் பெரும் கிளர்ச்சியை தமிழ் நாட்டில் ஏற்படுத்திய சில தமிழ்நாட்டு தலைவர்களோ அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தமக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருப்பதாக பெருமையாக பேசி வருகின்றனர். சிங்கள மக்களுக்கும் தமிழ் நாட்டின் மதுரையில் வாழும் தமிழ் மக்களுக்கும் அத்தகைய தொப்புள் கொடி உறவு இருப்பது இவர்களுக்கு தெரியாது போலும். யுத்தத்தை நிறுத்துகின்ற சாட்டில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதே அவர்களுடைய பிரதான நோக்கமாகும். அண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் 190 பாடசாலையைச் சேர்ந்த 55,000 மாணவர்கள் கல்வியை இழந்துள்ளதாக முறைப்பட்டுள்ளார். இது ஏன் நடந்தது? யாரால் நடந்தது? எங்கே நடந்தது என்று கூறுகின்ற தைரியம் அவருக்கு இருக்கவில்லை. இது சம்பந்தமாக மேலும் கூறுவாராயின் கிழக்கு மாகாணத்தில் 6000 பிள்ளைகள் அரிச்சுவடியே தெரியாமல் உள்ளனர். அரசிடம் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் சிலர் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து யுத்த முனையில் செயற்படுகின்றார்கள் என்பதை இந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறவில்லை. இப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறந்த கல்வியை பெற்று வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் அவுஸ்திரேலியாவில் தனது மனைவி மக்களை வசதியாக வாழ வைத்து த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் என்னை துரோகி என வர்ணித்தமையே.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வரை யுத்தம் தொடர்வதையே மக்கள் விரும்புகின்றனர். இருநூறு மைல்களுக்கு மேல் வழி வழியே மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து வந்த இராணுவத்திற்கு எஞ்சியுள்ளது இன்னும் சில மைல்களே. மக்கள் விரும்புவதெல்லாம் இராணுவம் பொது மக்களை இலக்கு வைப்பதையும் இரவு வேளையில் குண்டு வீசுவதை தவிர்க்க வேண்டும் என்பதையே. விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் சில தினமும் அவர்களுடைய தலைமையிடம் ஒப்படைக்குப்படி ஐ.சி.ஆர்.சி யிடம் கையளிக்கப்படுகிறது. அவர்கள் எல்லோரும் பலாத்காரமாக இணைக்கப்பட்ட ஏழை மக்களின் பிள்ளைகளாகிய இளைஞர்களும், யுவதிகளுமே. எதுவித பயிற்சியுமற்ற அல்லது மிக சொற்ப பயிற்சியுடன் யுத்த முனைக்கு அனுப்பப்பட்டவர்களாவர். இத்தகைய சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தவும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்குமாகவே த.தே.கூ இனர் மௌனம் சாதிக்கின்றனர். ஆனால் கலாச்சாரத்திலும் நாகரீகத்திலும் மேம்பட்டும, பய பக்தியுடனும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது மிக்க அனுதாபமும், தமக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவுபற்றி பிரமாதப்படுத்தி பேசும் தமிழ் நாடு அநாகரிகமாகவும், கொடூரமாகவும் மக்களை நடத்தும் மிருகத்தனமாக செயற்படும் புலிகள் பற்றி ஏன் மௌனம் சாதிக்க வேண்டும். பெரும்பகுதி காடாக உள்ள பகுதியில் பாம்புகள், நுளம்புகள் ஆகியவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில், தாங்க முடியாத குளிரிலும், கொட்டும் மழையிலும் நேரத்திற்கு உணவோ, முறையான இருப்பிடமோ இன்றி நாடோடிகள் போல் தமது தற்காலிக இருப்பிடங்களை அடிக்கடி இடம் மாற்றி வாழும் மக்களை கட்டாயப்படுத்தி தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்நாடு ஏன் கண்டுகொள்ளவில்லை. தமக்கு வேண்டிய அத்தனையையும் முன் கூட்டியே எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றையே பொது மக்களுக்கு விநியோகிக்கும் பழக்கம் உடையவர்களே புலிகள். இதுவே இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்மையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை, பயிற்சிக்கு செல்லுமாறு விடுதலைப் புலிகள் பணிக்கும் போது த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிக்க, கத்தோலிக்க திருச்சபையினர் தமது அநாதை இல்லத்தில் இருந்து விடுதலைப் புலிகள் சில அநாதை பிள்ளைகளை பலாத்காரமாக கொண்டுச்சென்ற போது தமது கடும் எதிர்ப்பினை கத்தோலிக்க திருச்சபையினர் காட்டியுள்ளனர்.

இங்கே குறி;ப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் எமது மக்கள் படும் துன்பத்தின் மிகச் சிறியவொரு பகுதியே. இன்றைய நிலைக்கு ஓரளவு பொறுப்பேற்க வேண்டிய தமிழ்நாடு, தமது ஆழ்ந்த துயிலில் இருந்து விழித்தெழுந்து விடுதலைப் புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளவர்களை சமயோசிதமாக விடுவிக்க வேண்டும். அதை மீறி முரண்படுவார்களேயானால் மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

தமிழ் நாடு அடம் பிடித்து மௌனம் சாதித்தால் அன்றி விடுதலைப் புலிகள் சார்பான சில தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பயப்பட்டால் அல்லது தப்பாக தமிழ்நாட்டை தட்டியெழுப்பிய த.தே.கூ இனர் இத்தனை பணிவான வேண்டுகோளை மதித்து தமிழ் நாட்டை இயங்க வைக்க தவறினால், விடுதலைப் புலிகளுக்கு பெரும் தொகையான பண உதவி கொடுத்து அவர்களை வளர்த்தெடுத்த பிற நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உதவியைத்தான் நாட வேண்டும். அவர்கள் தலையிட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இம் மக்களை விடுவிக்க உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் இழந்த அத்தனையையும் மீளப் பெறுவார்கள் என எண்ணுவது கேளிக்கைகுரியதாகும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களேயானால், அவர்கள் அவ்வாறு செய்து அரசுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காணலாம். அத் தீர்வானது சகல இன மக்களும் சமமாக எதுவித பாகுபாடுமின்றி சகல உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய ஓர் தீhவாக அமைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின், “கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட” கதைபோல், பழி பாவங்களுக்கு அஞ்சாத கொள்கையில்லாத சிலர் அதிகாரத்தை கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்ததாக அமையும். இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழ விடாது பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை உண்டு. த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டிய தமது கடமையில் இருந்து தவறி விட்டார்கள் என நான் விசுவாசமாக நம்புவதால் அவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதுவித பதவியிலும் அக்கறையில்லை என்பதையும், எனது முழு அக்கறையும் கடந்த கால்நூற்றாண்டு காலமாக துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் எம் மக்களுக்கு பணியாற்றுவது என்பதே.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

TULF CALLS UPON THE TNA TO SAVE THE INNOCENT TAMILS TRAPPED IN VANNI OR TO QUIT PARLIAMENT.


TULF CALLS UPON THE TNA TO SAVE THE INNOCENT TAMILS TRAPPED IN VANNI OR TO QUIT PARLIAMENT.

I call upon the 22 Tamil National Alliance Parliamentarians to do their duty or to honourably vacate their seats in Parliament. They have fooled enough, the people whom they claim to represent in Parliament, but never championed their cause. Instead they always defended the LTTE at whose mercy they got elected fraudulently to Parliament. They have mis-led the International Community, the people of Tamil Nadu in particular. Tamil Nadu if left alone or properly briefed would have contributed their best towards a workable solution, without earning the dis-pleasure of the people of Sri Lanka and without causing embarrassment to their own Central Government, with un-fair and un-implementable demands. Unfortunately the people of Tamil Nadu got mis-led by the advice given by the TNA Parliamentarians. Without demanding the war to stop, if they had, in a friendly way, agitated for a reasonable settlement of the ethnic problem, they might have succeeded. I extended my invitation to the Chief Minister of Tamil Nadu Hon. Dr. M. Karunanithy four years back to pay a visit to Sri Lanka. Let us not forget that the President His Excellency Mahinda Rajapakse himself invited the Chief Minister Hon. Dr. M. Karunanithy, a couple of months back when a mass scale agitation was going on in Tamil Nadu, to visit Sri Lanka and would have been very happy, if the Chief Minister had accepted the invitation, came to Sri Lanka and offered to mediate. This is yet another lost opportunity for which the TNA should bear the blame for not making use of this opportunity.

“What sin have we committed to undergo this agony all these long years, extending to a period of quarter of a century and how long are we to endure this?”, ask the people of Kilinochchi, who are all now displaced and living at Dharmapuram, a small village in the district of Kilinochchi. I know most of them because I lived with them and represented them in Parliament for many years. Apart from this more than a hundred thousand people men, women and children, including the sick and the toddlers, deprived of their normal life, had been mercilessly driven like cattle into Kilinochchi by the LTTE from the areas under their control in the neighboring districts of Mannar, Vavuniya and Mullaitheevu. They were pushed into Kilinochchi by the withdrawing LTTE cadre, unable to confront the advancing Government Forces. Left alone most of them would have stayed in their homes or could have gone to their respective homes and saved whatever left over after being looted or robbed. Instead they are brought from far off places and squeezed into small villages already over crowded with the locally displaced persons from the Kilinochchi district itself. The LTTE holds these people to ransom for no fault of theirs, but only for the sole purpose of using them as human shield for their own protection. The distress call of these unfortunate people is not heard in Tamil Nadu.

The International Community which is much concerned of the Human Rights Violations in the LTTE held areas also, is compelled to keep silent, perhaps due to their reluctance to go against the demand of Tamil Nadu for a Cease Fire although it is very obvious that, the demand is more in support of the LTTE, than in the interest of the Tamils trapped in the LTTE areas. It is very unfortunate that Tamil Nadu is refusing and the TNA is ignoring to respond to the distress call of these two hundred and fifty thousand people who are caught up between the LTTE which is compulsorily recruiting men and women only to sacrifice them at the battle front and the deadly snakes that are multiplying in their thousands. Hundreds had been stung by snake and many have died. Leave aside the TNA, even nature is against them. The down pour of rain is so heavy that all areas are flooded and people have to move from place to place in search of highland to camp and to cook their food. Apart from the snake menace the other one is the mosquitoes with the threat of an out-brake of malaria or dengue. I dare say that all these sufferings of the people do not seem to be of any concern for the TNA Members of Parliament in Sri Lanka and some leaders of Tamil Nadu, who were in the fore-front of the recent uprising in Tamil Nadu, most of whom take pride in boasting of “umbilicus code relationship”, between the Tamils of Sri Lanka and Tamil Nadu. They least know of the same relationship the Sinhalese have with the Tamils of Madurai in Tamil Nadu. Their only concern seem to be saving the LTTE under the pretext of stopping the war. A TNA Parliamentarian had said in Parliament recently that 55000 children from 190 schools are not attending school. He did not have the guts to tell the world as to why this has happened?, because of whom? and where? To add to what he said, in the Eastern Province more than 6000 children do not know their alphabet. The MP did not tell how teachers on the Government’s pay roll are fighting in the war front for the LTTE. These MP’s children are quite safe in foreign countries having good education. The irony is a TNA Member of Parliament whose entire family is in Australia, recently referred to me in Parliament as a traitor.

The people in Vanni want the war to continue, because they want the war to end with the LTTE defeated. The forces that had marched forward about 200 miles liberating the people all along, has only a few more miles to go. The people only plead that the forces should avoid civilian targets and night time aerial bombings.

Everyday a few dead bodies of the LTTE fighters are handed over to the ICRC to be delivered to the LTTE. They are young boys and girls, children of poor parents compulsorily recruited by the LTTE and sent to the battle front with hardly any or very little training. One can understand the TNA Members of Parliament remaining silent on this type of matters merely to please the LTTE and to save their seats in Parliament. But one cannot understand as to why Tamil Nadu, which is rich in culture and civilization, God fearing and pious, always sympathetic towards the Sri Lankan Tamils and proudly boast of its “umbilicus code relationship” with them, should remain silent without raising one word of protest against the cruel and uncivilized manner in which the brutal LTTE is treating the innocent Tamils whom they are keeping under compulsion in a pre-dominantly jungle area, infested with snakes and mosquitoes, in chilly weather and pouring rain, without timely food and proper shelter, shifting their temporary abode from place to place off and on like nomads. It is traditional for the LTTE to take away first, all what they need and only what is remaining is distributed to the people. This is happening even today. The TNA Members did not protest when the LTTE ordered all those 8000 students who sat for the G.C.E(O/L) examination held recently, to under-go trainings while the Catholic Church protested against the attempt of the LTTE to take away some orphans from an orphanage run by the church.

All what is mentioned here is only a minor fraction of the sufferings of our people. Why can’t Tamil Nadu, which is partly responsible for the present situation, wake up from its deep slumber and persuade them or, if unyielding, warn them to release the people to go anywhere they want.

If Tamil Nadu, adamantly keeps silent or out of fear for a handful of pro-LTTE leaders of Tamil Nadu and also if the TNA Members of Parliament who misled Tamil Nadu and roused the feelings of the people there, fail to move them inspite of all these pleadings, I have to look upon the expatriate Tamils who had largely helped the LTTE to grow, with substantial financial assistance, to intervene and bring pressure on them to free the people detained. The LTTE has lost the war and it is ridiculous for anyone to still believe that they will regain all what they have lost.

If the LTTE is willing to lay down their arms they can do so and negotiate with the Government for a solution within a united Sri Lanka, wherein all ethnic groups can live as equals, enjoying all rights without any form of discrimination what so ever. Failure to do so, will only pave the way for some unscrupulous elements to takeover, like snakes taking up residence in the anthills built by the labour of infinite number of white-ants. The Government of Sri Lanka and the International Community has a morel duty to see that the Tamils are not allowed to jump from the frying pan into the fire. I assure the TNA Members of Parliament that I sincerely feel that they have failed in their mission and therefore to quit their seats in Parliament. As for me I am not interested in any office but my whole interest is only on the people who are suffering for the last quarter of a century.

V. Anandasangaree,
President – TULF.

ASSASSINATION OF MR. LASANTHA WICKREMATUNGA

Assassination of Mr. Lasantha Wickrematunge

I am shocked and greatly grieved at the brutal killing of Mr. Lasantha Wickrematunge a very popular and courageous journalist. He had been a long standing friend of mine. I have attended a number seminars along with him and his presentations had been very remarkable. On one occasion we spent more than a week together at a workshop on “Conflict Resolution” held in Austria.

This type of brutal murders are now on the increase. Where are we heading to? Is it not the responsibility of all of us, as citizens of this country, to help to track down the culprits responsible for this cowardly act? It is a shame on all of us, if the culprits are not arrested immediately and brought before the court of law and punished.

I convey my deepest sympathies to the members of the Lasantha family. May his soul rest in peace.


V. Anandasangaree,
President – TULF.

PRESS RELEASE

The Tamil United Liberation Front very strongly condemns the dastardly act of causing extensive damage to the buildings and causing immense damage to the most Modern Equipments belonging to very popular TV and Radio Stations, the Sirasa, Sakthi and the MTV. These Stations are so popular among all sections of the people that they put the people to sleep peacefully in the night and put them up afresh early in the morning. These stations have now become public property and the loss is ours, the people of Sri Lanka and not that of one individual or a company. It is very unfortunate that the country has come to this state where an individual or a group of persons can hold the country to ransom

The said Radio and TV stations catered to the needs and tastes of all sections irrespective of age, language or religion. One can’t understand as to how an individual can have any grievance against any one of these stations. The authorities concerned should go all out to arrest the unscrupulous persons responsible for this heinous crime and punish them suitably, as a deterrent for any one getting involved in this type of crimes in the future.


V. Anandasangaree,
President – TULF.

THE PROBLEMS OF JAFFNA THAT NEED URGENT ATTENTION

26.12.2008
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Colombo-03

Your Excellency,

THE PROBLEMS OF JAFFNA THAT NEED URGENT ATTENTION.

Since I met you last about six weeks back, I had paid two visits to Jaffna. During my first visit in November, I had a public meeting attended by over thousand people, as estimated by a local daily published in Jaffna. The people have innumerable problems and hardly anyone had attended to them. I strongly urge you to listen to the problems of the civilians from various people without depending on one or two persons. I have nothing against any individual. But to what extent you can depend on one or two for matters relating to the North and whether you should also consult people like Mr. D. Sithardthan, Mr. T. Sritharan, me and such others is a matter for you to decide.

Army Check Points:-

The people of Jaffna are deeply concerned of many matters, some of which I refer to here. Their main grievance is the presence of offices of a political party, adjoining very many check-points manned by the Army. This, they feel, curtail their freedom of movement and is also one of the reasons why and how certain culprits escape after committing offences. There is absolutely no need for any political party, especially with arms, to have too many offices here and there, giving opportunities for harassment of civilians.

Compulsory Sale of News Papers:-

One General complain by many is that a political party forces people to buy their weekly. Arriving home the father or mother sees three or more copies of the same paper compulsorily thrust on various members of the house hold. Each paper cost Rs. 30 per copy. Army personnel at these check points have no control over these matters and the people buy the paper out of fear of the army who are normally very cordial in their movements with the civilians.

Detention Orders:-

The detention orders served on suspects causes a lot of inconvenience and injustice to many. I can assure you that if any one is arrested on suspicion of aiding and abetting anybody, such person in most cases is innocent and in same cases acted out of fear for the LTTE and the real culprits slip out. There are some unfortunate instances in which very old people and innocent ladies had been detained under detention orders for long periods. Serving of detention order in such cases, if avoided, will improve the relationship of the Government with the civilians, to a great extent.

Missing Persons:-

During the past few years a lot of people, men and women, young and old, are either being killed or abducted by some unidentified persons. The whereabouts of the abducted persons are not known. Some people think that a few of them might have been detained some where by somebody illegally or legally by some Government Authority. Their expectations may not be true in all cases and may be true in respect of some. To put an end to their agony and anxiety, kindly instruct all concerned persons to kindly disclose the names and addresses of all those who are in the custody of Government Authorities. What the parents want to know is whether they are alive and in safe custody. Hence kindly prepare a list of such persons and have it released to the press.

Escapees from the LTTE’s Grip in Vanni:-

Another matter that will bring good name to the Government is to honour the promise given by the Government, that all those who escape from the LTTE’s grip and come into the areas under the control of the Government, will not be harassed or detained. I have very reliable information that the LTTE’s propaganda in Vanni is that the Government forces are detaining and harassing those who are escaping and coming into cleared areas. Who ever is suspected, as having had links with the LTTE, also will have to be treated as an LTTE deserter and conditionally released to the parents. If such escapees from the LTTE area are detained people will be reluctant, to come out. A clear announcement should be made by the Government to this effect.

Fishing in and around Jaffna.

Fishing by trawlers is banned in Jaffna. The various fishing co-operatives and fisheries co-operative union in the area have no objection for trawler fishing, because they have agreed with the small scale fisherman to do trawler fishing only on three days in a week and leave the other four days for the small scale fisherman. I understand that the Indian trawler operators too operate their trawlers on three day in a week leaving the other four days for the minor fisherman. I hope that allowing this arrangement in Jaffna will not interfere with the security of the Sri Lankan Navy, since Indian trawlers also fish there. The Navy’s advice may by sought in this matter.

I strongly urge that you should give serious consideration for these requests which if adhered to will be a great boon for the suffering civilians.

Thanking you,

Yours Sincerely

V. Anandasangaree,
President - TULF.

உடன் கவனிக்க வேண்டிய யாழ் மாவட்ட பிரச்சினைகள்

26.12.2008.
மேன்மை தங்கிய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு
அலரி மாளிகை
கொழும்பு-03

மேன்மை தங்கிய ஜனாதிபதி

உடன் கவனிக்க வேண்டிய யாழ் மாவட்ட பிரச்சினைகள்

ஆறு வாரங்களுக்கு முன் தங்களை சந்தித்தபின் இரு தடவைகள் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளேன். முதல் விஜயத்தின் போது நான் பேசிய ஒரு கூட்டத்தில் உள்ளுரில் பிரசுரமாகும் ஓர் பத்திரிகை செய்தியின்படி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை கவனிப்பதற்கு யாரும் அங்கில்லை. ஓர் இருவரிடமிருந்து மட்டும் விடயங்களை அறியாமல் பலரிடமிருந்து கேட்டுக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றேன். யார் மீதும் கசப்புணர்வோடு இதை நான் கூறவில்லை. ஆனால் வட மாகாண விடயங்கள் சம்பந்தமாக இரண்டொருவர் கூறுவதை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புவீர்கள் என எனக்குத் தெரியாது ஆனால் திருவாளார்கள் சித்தார்த்தன், ஸ்ரீதரன் மற்றும் என்னுடனும் கலந்தாலோசிக்க வேண்டுமா என தீர்மானிக்க வேண்டியது நீங்களே!

இராணுவ சோதனைச்சாவடி

யுhழ்ப்பாண மக்கள் பல விடயங்களில் குழப்பமடைந்து இருப்பதால் அதில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அவர்களுடைய மிக முக்கியமான கவலை யாதெனில் அநேக இராணுவ சோதனை சாவடிகளுக்கருகில் ஓர் அரசியல் கட்சியினுடைய காரியாலயம் இயங்குவதே. இது தமது நடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதோடு குற்றம் புரிந்தவர்கள் தாம் செய்த குற்றங்களில் இருந்து இலகுவாக தப்புவதற்கு வழியையும் வகுக்கின்றது என்பதை எண்ணி மக்கள் பீதியடைகின்றனர். அங்குமிங்கும் பல காரியாலயங்களை திறக்க வேண்டிய அவசியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதோடு இது பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்ற விடயமாகும்

பலாத்காரமாக பத்திரிகை விற்பனை

ஒரு பொது முறைப்பாடு என்னவெனில் ஓர் அரசியற் கட்சி தாம் கிழமைதோறும் வெளியிடும் பத்திரிiகையை மக்கள் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதே. ஒரு குடும்பத் தலைவனோ அல்லது குடும்பத் தலைவியோ வீடு சென்று பார்க்கின்றபோது ஒரே பத்திரிகையின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிகள் கட்டாயப்படுத்தி விற்கப்பட்டு ள்ளமையை காண்கின்றார்கள். ஒவ்வொன்றும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் கடமையாற்றும் இராணுவத்தினர் இந்த விடயத்தில் தலையிடுவதில்லை. மக்களுடன் நட்புறவுடனும் பழகுகின்றனர். ஆனால் பயத்தின் நிமித்தம் பொது மக்கள் பத்திரிகையை விருப்பமின்றி வாங்குகின்றனர்.


பாதுகாப்பு அமைச்சி;ன் தடுப்புப்புசட்டம்

சந்தேக நபர்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சிலர் நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். அப்படி யாராவது ஒருவர் இன்னொருவருக்கு குற்றம் புரிவதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டால் அப் பேர்வழி குற்றமற்றவராக அல்லது புலிகளுக்கு பயந்து குற்றம் புரிய உதவுபவராகவும் இருக்கின்றார். ஆனால் உண்மையான குற்றவாளி தப்பி விடுகின்றார். தடுப்புச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக எதுவித குற்றமும் புரியாத அப்பாவி மக்களும் குறிப்பாக பெண்களும் தூரதிஷ்டவசமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். அத்தகையோரை தடுத்து வைப்பதை தவிர்ப்பதன் மூலம் அரசுக்கும் பொது மக்களுக்கும் உள்ள நல்லுறவை பெருமளவு வளர்க்க உதவும் என கருதுகின்றேன்.

காணாமல் போனவர்கள்

கடந்த சில வருடங்களாக பல ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், முதியோர்களும் இனந் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் உள்ளனர். பொது மக்களில் சிலர் அவ்வாறு கடத்தப்பட்டு இனந்தெரியாதோரால் சட்ட விரோதமாக ஏதோவொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு;ள்ளார்கள் என்று மக்கள் அறிகின்றார்கள். சிலர் சட்டப்படி அரச அதிகாரிகளால் தடுத்து வைக்கபபட்டுள்ளதாக நினைக்கின்றனர். அவர்கள் அவ்வாறு நினைப்பது சில சந்தர்ப்பத்தில் உண்மையானதாகவும் சில சந்தர்ப்பதத்தில் உண்மைக்கு புறம்பானதாகவும் இருக்கலாம். அவர்களுடைய கவலைக்கும், ஆவலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் சம்பந்தமான பெயர் விபரங்களை வெளியிட்டால் மக்கள் நிம்மதியடைவார்கள். பெற்றோர்கள் அறிய விரும்புவதெல்லாம் தமது பிள்ளைகள் உயிருடனும பாதுகாப்புடனும் இருக்கின்றார்கள் என்பதே. ஆகவே தயவு செய்து பெயர் பட்டியலை பத்திரிகை மூலம் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி வந்த மக்கள்

அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தக் கூடிய இ;ன்னுமொரு விடயம் என்னவெனில் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்றார்கள். அவர்களை தடுத்து வைக்கவோ அல்லது தொந்தரவுபடுத்தப்பட மாட்டார்கள் என்றோ அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வருகின்றவர்களை அரச படைகள் தடுத்து வைத்தும், தொந்தரவு படுத்தியும் வருகின்றார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் வன்னியில் இருந்து மேற்கொள்வதாக நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவி;க்கின்றன. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றவர்கள் என்ற சந்தேகப்படுகின்றவர்களை கூட புலிகளிடம் தப்பி வந்தவர்கள் என்று கருதி நிபந்தனையுடன் பெற்றோர்களிடம் கையளிக்கப்படலாம். அவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் தடுத்து வைக்கப்படுபவர்களேயானல் மக்கள் புலிகளிடமிருந்து தப்பி வர தயங்குவர் எனவே அரசு இது சம்பந்தமான ஒரு தெளிவான அறிக்கை மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாண பகுதியில் மீன்பிடித் தொழில்

யாழ்பப்பாணத்தில் ட்ரோலர் படகு மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது பல்வேறு மீன்பிடி சங்கங்களும் சமாஜம் ட்ரோலர் மூலம் கிழமையில் மூன்று நாட்கள் மட்டும் ஒப்புக் கொண்டமையால் ட்ரோலர் மூலம் மீன் பிடிப்பதை தொழிலாளர்கள் எதிர்ப்பதில்லை என நான் அறிகிறேன். எஞ்சியுள்ள நான்கு நாட்கள் சிறு தொழில் செய்பவர்களுக்கு விட்டுக் கொடுத்து செயல்படுவதாக ஒப்புக் கொணடனர். இதே போன்ற ஒழுங்கைதான் ட்ரோலர் மூலம் தொழில் செய்யும் இந்திய தொழிலாளர்களும் சிறு தொழிலாளர்களும் செயல்படுத்துகின்றனர். இந்த முறையை கடைபிடிப்பதால் இலங்கை கடற் படையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்காதென நான் நம்புகிறேன். ஆகவே கடற்படையினரின் ஆலோ சனைகளை பெற்று இம் முறைமையை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். இத்;;தகைய வேண்டுகோளுக்கு சாதகமாக செவிசாய்பீhகளாக இருந்தால் அது பல துன்பங்கள் மத்தியில் வாழும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென கருதுகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

TAMIL NADU SLEEPS WHILE DEADLY SERPANTS BREED UNDER THE PILLOWS.

TAMIL NADU SLEEPS WHILE DEADLY SERPANTS BREED UNDER THE PILLOWS.

As Mahatma Gandhi had said, India and Ceylon can’t afford to quarrel each other. It is more true in respect of Tamil Nadu and Sri Lanka. My humble request to everybody on either side of the Palk Strait is to help to solve the problem by good-will and persuasion and not by confrontation. It is necessary for everyone on both sides to be cautious in all what they say and do. The good gesture of the “Q” Branch of the Tamil Nadu Police and the Indian Navy in detecting several tons of material used for the manufacture of bombs is highly appreciable and demands co-ordination between both Sri Lanka and Tamil Nadu.

Sri Lankan Tamils are so unfortunate that Tamil Nadu, confused and infuriated by the false propaganda of the powerful pro-LTTE forces, shirked its responsibility of safeguarding them and had gone a long way to the point of no return. All the recent agitations and various actions taken by Tamil Nadu had only helped the LTTE, to the detriment of the Sri Lankan Tamils. The grave blunder of Tamil Nadu is, acting without sending a Fact Finding Mission to Sri Lanka during this hard period or inviting a delegation from Sri Lanka to know from them of the ground situation. If Tamil Nadu refuses to see reason and continue to be adamant in inviting trouble, nothing can be done. Unfortunately although there are many who want to protest, no one is prepared to come forward to prevent the handful of local and Sri Lankan personalities from misleading the entire Tamil Nadu exposing it to grave risk to life and property. Everybody in Tamil Nadu is unmindful of how fast this risk is spreading into the other States in India. Perhaps the bitter memories of Hon. Rajiv Gandhi’s assassination is gradually fading away in their minds. Tamil Nadu cannot easily forget how his remains were recovered in pulp. So was Sri Lankan President R. Premadasa’s and the Presidential candidate Hon. Gamini Disanayake’s and several others with him, some of whom were ministers. In a number of clay-more mine attacks and bomb-blasts, thousands of bodies were recovered in parts, that includes those of ministers, service personnel and thousands of innocent civilians, Sinhalese, Tamils and Muslims. The Central Bank bomb blast in Colombo some years back took many lives, almost similar to the Mumbai disaster but with less deaths and more injured. A clay-more mine targeting a bus, from a remote village carrying a full load of school children, patients and officers, going for work to the town, left about 65 dead and a similar number injured. A suicide bomber took the life of two bus load of Navy personnel numbering more than hundred. The Defence Secretary, the Army Chief, some top ranking service personnel and many others had narrow escapes. I hope that no one in Tamil Nadu will ever want these incidents to take place in Tamil Nadu. These are a selected few of the very many such incidents.

Not the children of LTTE Leaders, only children of poor parents, compulsorily recruited by the LTTE, had been used as suicide bombers. Even pregnant women had been used for this purpose. More than 20, 000 Tamil youths boys and girls, compulsorily recruited children of poor parents had been sacrificed at the battle front till last year. It should be much more today. Every day the LTTE is sacrificing at the battle front young boys and girls newly recruited and with hardly any training. Their methods of torture of civilians who defy them or object to the recruitment of their children by force or the escapees from their training camps are unheard of in any civilized society. What have Tamil Nadu done to save these innocent Tamils from the LTTE torture camps? The people of Tamil Nadu can’t forget the detection of 5000 or more hand-cuffs in Coimbuttur, ready for supply to the LTTE, many years back. We Sri Lankans are grateful to the Tamil Nadu Police and the Indian Navy for the recent detection of several tons of material used for the manufacture of bombs, meant to be transported illegally to the LTTE in Vanni. I need not point out as to what type of danger Tamil Nadu will have to face, by promoting an organization like the LTTE.

A lot had been said and written by me about the atrocities of the LTTE and how the LTTE had been treating the people in areas under their control. If the people of Tamil Nadu still believe that they are freedom fighters, only God can save Tamil Nadu. But what the people of Sri Lanka want today is liberation from those so called liberators and to save Tamil Nadu from this wretched terrorist group, to redeem whom desperate efforts are taken by some interested parties. The irony is that Tamil Nadu as a whole is prepared to trust a handful of local personalities and 22 Members of Parliament from Sri Lanka fraudulently elected with the fire power, threat and intimidation of the LTTE, only to act as their proxies and not as representatives of the Tamil people. This can be verified from the reports of the four Election Monitoring Teams, two of which are from the EU and the Commonwealth. This will prove that the TNA has no right to represent or talk on behalf of the Tamil people of Sri Lanka.

The tragedy is they do not trust me. I love not only my country and its people but also consider India as my mother country. I have very high respect for India’s patriots and freedom fighters like Mahatma Gandhi, Nehruji, Indiraji and many such others. I love and respect Tamil Nadu Leaders like Rajaji, Karmaveerar Kamaraj, Periyar, Anna, M.G.R and many others. Special mention should be made of the great Martyr Rajiv Gandhi, a magnificent personality, blown to pieces by a group of ungrateful lot, the leader of which is now acclaimed by some as a great valiant Tamil, when in fact he should have been declared as the world’s notorious coward for using women and other’s children as his sacrificial animals.

What is my credibility to advice Tamil Nadu? An innocent Tamil from Tamil Nadu, who had taken part in all demonstrations, human chain protests, hunger strikes, sitdown strikes, public meetings etc, on the belief that he has contributed his best for the Tamil cause, will want to ask. My short and simple answer is that I am a sincere follower of Gandhiji and one as far as possible lives up to his ideals and strictly committed to non violence. The founder leader of the TULF the late Hon. S.J.V. Chelvanayagam Q.C. was committed to non violence. But those who claimed themselves as his disciples have deserted his ideals and now defend a terrorist organization. The war clouds have now moved into Kilinochchi an Electorate I represented for several years in Parliament and a district created on my initiative. I had been fighting for the liberation of the people of Vanni for the last few years. Kilinochchi had to be liberated from the so called liberators who had deprived our people of almost all their fundamental and human rights. They had been deprived of all their democratic rights as well. Years back I informed the Secretary General of the United Nations, that the people of Kilinochchi are ready to give full co-operation to any friendly army that will liberate them without causing loss of lives and damage to property. I was the winner of the UNESCO’s Madanjeet Singh award for the promotion of Tolerance and Non Violence in 2006. I hope Tamil Nadu will be satisfied with my credibility.

The atrocious activities of the LTTE are far beyond the imaginations of a Tamil living across the sea. Most of the Tamil media all over the world, for mysterious reasons, only glorified the LTTE and never pointed out their faults. It is the same in Sri Lanka and Tamil Nadu is no exception. There are atleast 15 letters, statements, appeals to Tamil Nadu People and Leaders released by me off and on for the benefit of the people of Tamil Nadu. Hardly one paper or any electronic media gave full publicity for them. No one realized the risk I face in this society for expressing my views frankly about the LTTE which has branded me as a traitor, a title with which the LTTE honours those who oppose them.

We Sri Lankans had been living with this agony for more than quarter of a century and live in constant fear and tension. Do the People of Tamil Nadu, living peacefully now want incidents of this nature happen in their own land? Had not the Mumbai disaster atleast, taught a lesson to Tamil Nadu and Sri Lanka, that terrorism is not a thing that should be retained by public demand? How many ardent supporters of the LTTE, who claim the LTTE Leader as a Valiant Tamil hero, be they Sri Lankans or Indians or any Tamil from any part of the world had sent or will be prepared to send his or her son or a daughter to Prabaharan’s fold to fight the war of separation? I ask the students of Tamil Nadu, under-graduates included, who had joined the various protests recently in Tamil Nadu, whether any one of them will be prepared to join Prabaharan? I also ask the film stars producers, directors and technicians whether they will join Prabaharan or give one of their sons or daughters to join him? If they can’t do it, I plead with them to reconsider their stand.

We have a problem in our country no doubt, a very big problem, dragging on for nearly half a century and had cost over one hundred thousand lives and very many billions worth of property destroyed. Many of our intellectuals and top ranking Tamil Government servants, Heads of schools and many such others had been killed by the LTTE and not by any Sinhalese at any time. But in the war front many young men and girls are killed by the army, or rather sacrificed by the LTTE in vain. We want it solved. Do anything in your power to persuade your Central Government to give pressure to the Sri Lankan Government to come out with a solution. Let the solution be acceptable to the minorities. The powers devolved on Tamil Nadu and other States in India can be a good starting point. If Tamil Nadu wants to see the Sri Lankan Tamils live in peace and harmony, this is the only option Tamil Nadu has. We Tamils are prepared to accept a solution within a United Sri Lanka. The Tamils are opposed to separation which is not acceptable to any country, India inclusive.

The charge of annihilation of Tamils by the Government is a fabrication of the LTTE endorsed by the TNA Parliamentarians who are trying to find an International market to sell it. Because of the LTTE’s atrocities many Tamil people had fled the country. Many Tamils from their traditional places of residence had fled from their homes and are now living in peace and harmony with the Sinhalese and the Muslims. Over fifty percent of the Tamils in Sri Lanka now live with them. Not one Muslim in Tamil Nadu has any moral right to support the LTTE till all the Muslims driven out of the North with only Rs. 500 and all their properties confiscated, are resettled in their former places.

I am not a stooge of any body nor do I act as an agent of any body. I have a duty to defend the rights of the people and liberate them. There are a lot of human rights violations in the country, with the identity of the culprits not known. It is not that easy to track down the culprits because people are reluctant to come out to give evidence due to fear. Unless and until the problem is solved people will continue to live in fear and tension. There is no point in accusing one person or a specific organization because there are many involved. The greatest contribution Tamil Nadu can make is to tell the LTTE, with one voice, that they should declare their willingness to give up their demand for separation and agree to a solution that Tamil Nadu Government recommends as a reasonable one.

The war that started about 200 miles away from Pottuvil in the Eastern Province has now reached a point from where the end is only about 10 to 15 miles from Kilinochchi in the Northern Province. More than 90 % of the area under the control of the LTTE is already liberated. The people who lived under the subjugation of the LTTE for many years are now free and very happy. If Tamil Nadu has any sympathy for over three hundred thousand people trapped in the area still under the control of the LTTE, it should pressurize the LTTE to release them without using them as a human shield, for their own protection. With that the war comes to an end and lives of several thousand young boys and girls of the LTTE who are in the war front also can be saved. The LTTE can then sit and talk with the Government along with other representatives of Tamils and Muslims. There are about 20 TNA Parliamentarian now in Tamil Nadu. Let any one of them challenge any part of this statement.

V. Anandasangaree,
President – TULF